பழமொழி.....

Saturday, April 30, 2011

செய்மதிகள் (Satellite)..



மனித குலம் படைத்த சாதனைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அண்டவெளியெங்கும் சஞ்சரிக்கும் மனிதனால் படைக்கப்பட்டதோர் உயரிய சக்திமிக்க சாதனம். செய்மதிகளின் பயன்பாட்டு எல்லைகள் நாளும் வளர்ந்தவண்ணமுள்ளன. தொலைத்தொடர்பு, விஞ்ஞான ஆய்வு, இராணுவம் எனப் பல்வேறுபட்ட தளங்களில் செய்மதிகளின் பயன்பாடுகள் விரிந்து பரந்து காணப்படுகின்றன. 1957 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தினால் விண்ணில் ஏவப்பட்ட ஸ்புட்னிக்-01 (Sputnik-01) என்ற செய்மதியுடன் ஆரம்பமான செய்மதிகளின் வரலாற்றில், இன்றளவில் இப்புவியைச்சூழ, ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சொந்தமான, ஆயிரக்கணக்கான செய்மதிகள்வரை காணப்படுகின்றன.
பல்வேறுபட்ட தேவைகளுக்கான செய்மதிகள் பயன்பாட்டிலுள்ள போதிலும், இராணுவ உளவு, புவி அவதானிப்பு, தொலைத்தொடர்பு, காலநிலை அவதானிப்பு, ஆய்வு மற்றும் வழிகாட்டல் பயன்பாட்டுக்கான செய்மதிகள் பொதுவானவையாகக் காணப்படுகின்றன. கோள்கள் சூரியனை மையமாகக்கொண்டு சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவருவது போன்றே, செய்மதிகள் புவியை மையமாகக் கொண்டு சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. செய்மதிகளின் பயன்பாடுகளிற்கேற்ப அச்செய்மதிகள் நிலைநிறுத்தப்படும் சுற்றுவட்டப் பாதைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
உதாரணமாக, தொலைத்தொடர்பு மற்றும் ஒளி ஒலி பரப்பிற்குப் பயன்படுத்தப்படும் செய்மதிகள்180px-Milstarபுவியின் குறிப்பிட்டதோர் பரப்பை எந்நேரமும் நோக்கியதாக இருக்க வேண்டும். எனவே இவ்வாறான பணிகளுக்காக ஏவப்படும் செய்மதிகள் புவிநிலைப்புள்ளிச் சுற்றுவட்டப்பாதையில் (geostationary orbit) நிலைநிறுத்தப்படும். இச்சுற்றுவட்டப்பாதை புவி அகலாங்கு 0 (latitude 0 degree) பாகை கோணத்தில் புவி மேற்பரப்பிலிருந்து அண்ணளவாக 36000 கிலோமீற்றர் உயரத்தில் அமைந்திருக்கின்றது.
இராணுவப் பயன்பாடு தவிர்ந்த பொதுப் பயன்பாட்டில் செய்மதிகள் பிரதானமாக மூன்று வகையான தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

                             
  1. நிலையான செய்மதிச் சேவைகள் (Fixed Satellite Service) - புவியின் நிலையான அமைவிடங்களுக்கு இடையிலான தொலைத்தொடர்புப் பயன்பாட்டிற்கான செய்மதிச் சேவைகள்.
  2. நகரும் செய்மதிச் சேவைகள் (Mobile Satellite Service) - கப்பல்கள், விமானங்கள் போன்ற நகரும் நிலைகளுக்கான வழிகாட்டல் மற்றும் தொலைத்தொடர்புப் பயன்பாட்டிற்கான செய்மதிச் சேவைகள்.
  3. விஞ்ஞான ஆய்வுச் செய்மதிகள் (Scientific Research Satellite) - புவியில் கனிமவள ஆய்வு, கடல்வள ஆய்வு, நில அளவை போன்ற பல்வேறுபட்ட ஆய்வுப்பணிகளில் செய்மதிகளின் பயன்பாடு பரந்துபட்டுக் காணப்படுகின்றது.
இது தவிர, செய்மதிகள் அவற்றின் பயன்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
  1. செய்மதி எதிர்ப்பு ஆயுதங்கள் - இவ்வகைச் செய்மதிகள் எதிரி நாடுகளின் செய்மதிகள், போர்த்தளபாடங்கள், ஏவுகணைகளைத் தாக்கியளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்
  2. விண்வெளி ஆய்வுச் செய்மதி - இவ்வகைச் செய்திகள் விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், பிற கோள்கள் போன்றவற்றை ஆய்வுசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டவை.
  3. உயிரியலாய்வுச்செய்மதி - இவ்வகைச் செய்மதிகள் உயிரிகளை (living organism) விண்வெளிக்குக் கொண்டுசென்று ஆய்வுசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டன.
  4. தொலைத்தொடர்புச் செய்மதி - இவ்வகைச் செய்மதிகள் தொலைத்தொடர்பு, ஒலி ஒளி பரப்புச் சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டவை.
  5. வழிகாட்டல் செய்மதி - புவியில் வழிகாட்டும் செயற்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டவை.
  6. புவி அவதானிப்புச் செய்மதி - இவ்வகைச் செய்மதிகள் செய்மதிகளின் சொந்த நாடுகளின் புலநாய்வு அமைப்புக்களால் ஏனைய நாடுகளை வேவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் செய்மதிகளின் செயற்றிறன் பெரும்பாலும் வெளித்தெரியாதவையாகவே இருக்கின்றன.
  7. விண்வெளி நிலையம் - மனிதர்கள் விண்வெளியில் சென்று தங்கியிருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட விண்வெளி ஆய்வுகூடங்களாகும்.
  8. காலநிலை அவதானிப்புச் செய்மதி - இவ்வகைச் செய்மதிகள் காலநிலை அவதானிப்புப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட செய்மதிகளாகும்.
செய்மதிகளின் சுற்றுவட்டப் பாதைகள் பிரதானமாக மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
  1. தாழ்நிலைச் சுற்றுவட்டப்பாதை (Low Earth Orbit)
  2. இடைநிலைச் சுற்றுவட்டப்பாதை (Medium Earth Orbit)
  3. உயர்நிலைச் சுற்றுவட்டப்பாதை (High Earth Orbit)
Geostatபுவிமேற்பரப்பிலிருந்து 2000 கிலோமீற்றருக்குக் உட்பட்ட சுற்றுவட்டப்பாதைகள் தாழ்நிலைச் சுற்றுவட்டப்பாதை எனவும், 2000 கிலோமீற்றர் தொடக்கம் 35786 கிலோமீற்றர் வரையான சுற்றுவட்டப் பாதைகள் இடைநிலைச் சுற்றுவட்டப்பாதைகள் எனவும், 35786 கிலோமீற்றருக்கு மேற்பட்ட சுற்றுவட்டப்பாதைகள் உயர்நிலைச் சுற்றுவட்டப் பாதைகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. தொலைத்தொடர்புச் செய்மதிகள் நிலைநிறுத்தப்படும் 35786 கிலோமீற்றர் உயரத்திலுள்ள சுற்றுவட்டப்பாதை புவிநிலைச் சுற்றுவட்டப்பாதை (geocentric orbit) எனச் சிறப்பாக அழைக்கப்படுகின்றது.

Thursday, April 28, 2011

விண்தூக்கிகள் (space elevators)..



இன்னும் பலநாடுகளில் வாழும் மக்களுக்கு விமானத்தில் பறப்பது ஆடம்பரம் தான். அளவான வருமானம் , முதலாளித்துவம், மலைக்க வைக்கும் விமானக் கட்டணம் ஆகியவை இதற்கு முழு முதற்காரணங்கள் .
ஆனால் இது எல்லா நாட்டுக்கும் பொருந்தாது . முக்கியமாக அமெரிக்காவுக்கு பொருந்தாது ! அங்கே விமானங்கள் போக்குவரத்தின் அன்றாட தேவை; அதுவும் போக கட்டணங்களும் அங்கு மிக குறைவு. எந்தவொரு கண்டுபிடிப்பும் அந்நாட்டில் தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது . அதுவும் போக மற்ற நாடுகள் ஒரடி வைத்தால் ஆயிரம் அடி வைக்கத் துணிந்தவர்கள் அமெரிக்கர்கள் . அதனால் தான் இந்தப் பொருளாதார நெருக்கடியிலும் அந்நாடு முதன்மையானதாகத் திகழ்கிறது .

என்னடா இவன் தலைப்பை விட்டு எதோ சொல்கிறானே என்று யோசிக்க வேண்டாம். நான் மேல் கூறிய அனைத்திற்கும் இனி வரப்போவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆம்! விமானமும் , நம் வானத்தின் கூரைக்கடியே வாழ்கையும் அவர்களுக்குச் சலித்து விட்டது போலும்.space-elevator-345உலகைவிடவும் வேறு கிரகங்களைத் தங்கள் வீடாக்க அவர்கள் துணித்து விட்டார்கள் , இதெல்லாம் சாத்தியமில்லை என்று ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்த நாடுகள் , அவர்கள் கண்டுபிடித்திருக்கும் ஸ்பேஸ் எலிவேட்டர் (space elevator) மாதிரிகளைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கின்றன.
என்ன இதுவென்று யோசிப்பீர்கள். இதோ விளக்குகிறேன் . இவை தான் அமெரிக்கர்கள் கண்டுபிடித்திருக்கும் வருங்கால வானூர்திகள். இப்போதிருக்கும் ராக்கெட்டுகளை வைத்து விண்ணுக்குப் போக கிலோவுக்கு 10,000 டாலர்கள் செலவாகிறதாம். அனால் இவர்களின் புதிய கண்டுபிடிப்பான ஸ்பேஸ் எலிவேட்டர்கள்(விண்ணுந்திகள் ) மூலம் ஒரு கிலோ எடையை வெறும் 100 டாலர் செலவில் விண்ணுக்கு எடுத்துச்செல்ல முடியுமாம்! சரி, இது எப்படி சாத்தியம் என்று தெரிவதற்கு முன்பு ஸ்பேஸ் எலிவேட்டர்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் .

ஸ்பேஸ் எலிவேட்டர் என்றால் என்ன ?

இந்த விண்தூக்கியின் செயற்பாடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்தூக்கியை ஒத்தது . இவற்றின் பிரதான பணி ஆட்களை அல்லது சுமைகளை மேலே தூக்கிச் செல்வது . ஆனால் ஒரு மின்தூக்கியால் மீறிப்போனால் இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு மேலே செல்ல முடியாது. இதை புதிய கண்டுபிடிப்பான வின்தூக்கிகளுடன் ஒப்பிட்டால் தெரியும் அவற்றின் சக்தி என்னவென்று ! ஸ்பேஸ் எலிவேட்டர்கள் என்னும் தூக்கிகளால் பல்லாயிரம் மைல்கள், அதுவும் அசுர வேகத்திற் செல்ல முடியும்!
இது எவ்வாறு சாத்தியம்? இதனை ஒரு சிறு உதாரணத்தினூடாக விளங்கிக்கொள்ள முடியும். நாம் ஒரு சிறு கயிற்றிலோ அல்லது நூலிலோ, அதன் ஒரு முனையில் சிறிய கல்லொன்றினைக் கட்டி அதன் மறுமுனையை கையிற்பிடித்துச் சுற்றும்போது அந்தக்கல் நூலினைச் சுற்றும் வேகத்திற்கேற்ப குறித்தவொரு விசையுடன் வெளித்திசையில் இழுவையினை ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்படுத்தப்படும் விசையானது, நூலினைத் தொய்வின்றி வைத்திருப்பதைக் காணமுடியும்.

இந்த எளிய பௌதீகச் செயற்பாட்டின் அடிப்படையினைப் பயன்படுத்தியே விஞ்ஞானிகள் விண்தூக்கியினை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலையானதோர் அமைவிடத்தில் நீண்ட வடம் ஒன்றின் ஒரு முனையைப் பொருத்தி மறுமுனையை விண்வெளிக்கு எடுத்துச்சென்று மறுமுனையில் ஒரு குறிப்பிட்டளவு நிறையினைப் பொருத்துதல் வேண்டும். இவ்வாறு பொருத்தப்பட்ட நிறையானது புவிச்சுழற்சியின் காரணமாக புவியுடன் சேர்ந்து சுற்றும். இச்சுழற்சியின் போது ஏற்படுத்தப்படும் விசை, குறித்த வடத்தினைத் தொய்வின்றிப் பேணும். புவிச்சுழற்சி சார்பாக, குறித்த வடம் புவியில் நிலையாக அமைந்திருக்கும். இவ்வாறு நிலையாக அமைந்திருக்கும் அந்த வடத்தினைப் பற்றி பொருள் ஒன்றினை மேல்கீழாக நகர்த்த முடியும்.

இவ்வாறு அந்த வடத்தினைப் பற்றி நகரும் பொருளுக்குப் பதிலாக விண்தூக்கி ஒன்றினை அமைப்பதனூடாக விண்வெளிப் பயணத்தினை இலகுவில் மேற்கொள்ள முடியும் என்பது விஞ்ஞானிகளின் உறுதியான நம்பிக்கை.
பதினைத்து வருடம் முன்பு வரை இந்த விண்தூக்கி என்பது நம் பூமியின் எதிர்காலத்தைக் கணித்துகொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு ஒரு கனவாகவே இருந்தது . எனென்றால் இந்த விண்தூக்கிகளை ஸ்பேஸ் ரிப்பன் என்னும் கயிறுதான் பாதை மாறாமல் விண்ணிற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் . கீழே இருக்கும் படம் இதை நன்கு விளக்கும்.

ஆனால் இந்த விண்கயிறு பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு நீளக்கூடியதாகவும் , மிகவும் சக்தி வைந்ததாகவும் இருந்தால்தான் விண்தூக்கியைப் பத்திரமாய் அக்கயிற்றால் மேலே தூக்கிச்செல்ல முடியும். பத்து வருடங்களின் முன்புவரை இப்படி ஒரு கயிறு என்பது சாத்தியமில்லையென்றே கருதப்பட்டது. ஆனால் 'நானோ டெக்னாலஜி' என்னும் புதிய தொழில் நுட்பம் ஒரு வடிவம் உருவாவதின் அடிப்படையையே புரட்டிப் போட்டு இது நிச்சயம் சாத்தியமெனச் சொன்னது !!

இது எப்படி சாத்தியம் என்பதற்கான பதில் இதோ ....

தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம் ? அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா ? இதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும். ஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும். அப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் 'நானோ டெக்னாலஜி' விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஓர் அசல் விண்தூக்கி மாதிரியை 2012 ஆம் வருடத்திற்குள் ஏவ சபதம் பூண்டிருகிறார்கள் அவர்கள் !!

Saturday, April 23, 2011

கப்பல்கள்..


ship-123பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தளவில் கப்பல்கள் பெருமளவிற் பயன்படுத்தப்படுவதில்லை.

பெரும்பாலும் கப்பல்கள் சரக்கு மற்றும் எண்ணெய் காவும் பணிகளிலேயே ஈடுபடுத்தப்படுகின்றன. இங்கு நாம் பார்க்கவிருப்பதும் எண்ணெய் மற்றும் சரக்கு காவும் பணிகளில் ஈடுபடும் மற்றும் ஈடுபட்ட பாரிய கப்பல்களில் சிலவற்றைப் பற்றியே.


Seawise Giant

300px-Knock_Nevisஇந்தக் கப்பல் ஜப்பானின் கப்பல் கட்டும் நிறுவனமான Sumitomo Heavy Industries எனும் நிறுவனத்தினால் 1979 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது ஒரு எண்ணெய்க் கப்பலாகும். உலகிலேயே மிகப்பெரிய கப்பலான இக்கப்பல் ஆரம்பத்தில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்காகவே கட்டப்பட்டது. ஆனால் குறித்த அந்த நிறுவனத்தினால், கப்பல் கட்டி முடிக்கப்பட்டதும் அதனை பெற்றுக்கொள்வதற்கு முடியாது போனதன் காரணமாக, கப்பல் கொங்கொங்கைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டது. அந்நிறுவனம் கப்பலின் சுமைக் கொள்ளளவை அதிகரிகத்து மேலும் 87000 மெற்றிக்தொன் சுமை ஏற்றவல்லதாக மீள் வடிவமைப்புச் செய்தது.
இம்மீள் வடிவமைப்பின் பின்னர் கப்பலின் மொத்த சுமைக்கொள்ளளவு 564763 மெற்றிக்தொன்னாக அதிகரித்தது.. 458.45 மீற்றர் நீளமுள்ள இக்கப்பல் சுமையேற்றப்பட்ட நிலையில் 16 கடல்மைல் வேகத்தில் பயணிக்கவல்லது. ஈரான்-ஈராக் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றிச்சென்றுகொண்டிருந்தவேளை ஈராக்கிய வான்படைத் தாக்குதலுக்குள்ளான இக்கப்பல் பாரிய சேதத்திற்குள்ளானது.
தொடர்ந்து திருத்தியடைக்கப்பட்டு சேவையிலீடுபடுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் கைகளிற்கு மாறிய இக்கப்பல், Happy Giantஇ Jahre Viking மற்றும் Knock Nevis என வெவ்வேறு பெயர்களுடன் சேவையிலீடுபட்டது. இறுதியாக 2009 ஆம் ஆண்டு Mont எனும் பெயருடன் தனது இறுதிப்பயணத்தை இந்தியா நோக்கி இக்கப்பல் மேற்கொண்டது. இந்தியாவில் இக்கப்பல் உடைக்கப்பட்டு தனது ஆயுளை முடித்துக்கொண்டது. 36 தொன் நிறையுடைய இக்கப்பலின் நங்கூரம், உடைக்கப்படாது கொங்கொங்கிலுள்ள கடல்சார் அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.


Nimitz வகை விமானந்தாங்கி

220px-CVN-78_Artist_Imageஇது அமெரிக்கக் கடற்படையின் சேவையிலிருக்கும் விமானந்தாங்கிக் கப்பலாகும். அணுசக்தியால் இயக்கப்படுமி் இந்த விமானந்தாங்கிக் கப்பல் 1975 ஆம் ஆண்டு அமெரிக்கக் கடற்படையின் சேவையில் இணைக்கப்பட்டது.
90 வரையான விமானங்களைத் தாங்கிச்செல்லவல்ல இக்கப்பல் வளைகுடா யுத்தம், ஈராக் மற்றும் ஆப்கான் போர் எனப் பல்வேறு களங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இக்கப்பலிலிருந்து, அமெரிக்க வான்படையின் பிரதான அதிசக்திவாய்ந்த தாக்குதல் வான்கலங்களான F/A-18F Super Hornets, F/A-18C Hornets மற்றும் F-14 Tomcat போன்றவற்றை இயக்க முடியும். 320.8 மீற்றர் நீளமுடைய இந்த விமானந்தாங்கிக் கப்பல் 30 கடல்மைல் வேகத்தில் பயணிக்கவல்லது.
இக்கப்பல் அணுசக்தி இயந்திரங்கள் இரண்டினைக் கொண்டுள்ளது. இவ்விரு அணுசக்தி இயந்திரங்களும் கப்பலின் நான்கு சுழலிகளையும் இயக்குகின்றன. இக்கப்பலின், 7.6 மீற்றர் விட்டம் கொண்ட சுழலிகள் ஒவ்வொன்றும் 66000 பவுண்ட் நிறயும் 8.8 மீற்றர் உயரமும் 6.7 மீற்றர் நீளமும் கொண்ட இரண்டு சுக்கான்கள் ஒவ்வொன்றும் 110000 பவுண்ட் நிறையும் உடையவை.
இவற்றுடன் இக்கப்பல், ஏவுகணை எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


RMS குயின் மேரி 2

220px-Queen_Mary_II_at_Liverpool_1உலகில் பயன்பாட்டிலுள்ள பாரிய பயணிகள் கப்பல்களில் இதுவும் ஒன்றாகும். 1969 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டிலிருந்த குயின் எலிசபெத் என்ற பயணிகள் கப்பலே இக்கப்பல் கட்டப்படும்வரை உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக இருந்தது.
தற்போது உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் இதுவாகும். 345 மீற்றர் நீளமுடைய இக்கப்பல் 2003 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. பிரான்சில் கட்டப்பட்ட இக்கப்பல் மொத்தம் 17 அடுக்குக்களைக் கொண்டு காணப்படுகின்றது. இவற்றுள் 13 அடுக்குகள் பயணிகள் அடுக்குகள் ஆகும். மொத்தம் 3056 பயணிகளைக் காவிச்செல்லவல்ல இந்தக் கப்பல் 29.62 கடல்மைல் வேகத்தில் பயணிக்கவல்லது. இக்கப்பலில் 1253 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இக்கப்பல் நான்கு டீசல் இயந்திரங்களால் இயக்கப்படுகின்றது. அத்துடன் மேலதிகமாக இரண்டு gas turbine இயந்திரங்களையும் கொண்டுள்ளது. மேலதிக சக்தி தேவைப்படுமிடத்து இந்த இரு இயந்திரங்களும் இயக்கப்படும்.

Friday, April 22, 2011

நீர்மூழ்கிக் கப்பல்.



சப்மெரைன் என்று சொல்லப்படும் நீர்மூழ்கிக் கப்பல் தண்ணீரின் மேல் மிதந்து செல்லவும்,அதேசமயம் தண்ணீரின் அடியிலும் கடலின் ஆழமானப் பகுதிகளிலும் பயணம் செய்யும் தன்மையுடைய கப்பலாகும்.
            நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிக அளவில் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தவிர சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் ஆராய்ச்சி மற்றும் கடலினுள் போடப்பட்டுள்ள எண்ணெய் குழாய்கள் பராமரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
            தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு முன்னோடியாக 1776 - ஆம் ஆண்டு டேவிட் புஷ்நெல் (David Bush nell) என்பவர் டர்டில் (turtle) எனும் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கினார். இது நீர் உட்புகாதவாறு மரத்தால் செய்யப்பட்டிருந்தது. இந்த கப்பலின் வடிவம் ஆமைத் தோட்டின் வடிவத்தை ஒத்திருந்தது. இந்த கப்பல் இயங்குவதற்கு தேவையான ஆற்றல் காலால் உந்தப்பட்டு பெறப்பட்டது. மேலும்இதில் ஒரு துடுப்பும் பயன்படுத்தப்பட்டது.
                அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பால்டன் என்பவர் தண்ணீரின் மேலும், கீழுமாக பயணம் செய்யும் சப்மெரினைக் கண்டுபிடித்தார். 1798 - ஆம் ஆண்டு அவர் NAUTILUS என்ற சப்மெரைனை உருவாக்கினார்.
            அதன் பின்னர் 1864 - ஆம் ஆண்டில் ஹன்லி (Hunley) எனும் பெயருடைய இரும்பினால் ஆன நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. இதுவும் மனித ஆற்றலாலே இயங்க கூடியதாக அமைக்கப்பட்டது.
                1880 - ஆம் ஆண்டு வில்லியம் ஹார்ட் நீராவி இயந்திரத்தால் செயல்படும் சப்மெரைனைக் கண்டறிந்தார். இதில் ஆவிவெளியேற ஒரு குழாய் இருந்தது. அதை மேலே தூக்கவும், தாழ்த்தவும் வசதி இருந்தது.
                1890 ல் அமெரிக்காரஷ்யாஜப்பான் போன்ற நாடுகள் சப்மெரைன் தயாரிப்பில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தன. 1904 - ல் டீசல் எஞ்சினை பயன்படுத்தி முதன் முதலாக பிரான்ஸ் AIGETTE என்ற சப்மெரைனை உருவாக்கியது.
            பின்னர் 1901 - ஆம் ஆண்டு ஹோலேண்ட் (Holland - VI) எனும் நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. இது பெட்ரோல் மற்றும் மின்னாற்றல் மூலம் இயங்கியது. அதன் பிறகு 53ஆண்டுகள் கழித்து முதல் முதலாக அணுஆற்றல் மூலம் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட அந்த கப்பலின் பெயர் US Nautilus ஆகும்.
                அணுசக்தியைப் பயன்படுத்தி இயங்கும் சப்மெரைனை இன்று அமெரிக்காரஷ்யா,இங்கிலாந்துபிரான்ஸ்இந்தியா போன்ற நாடுகள் இயக்குகின்றன. முதன் முதலில் இந்தியா அணுசக்தியால் இயங்கும் சப்மெரைன் INS Chakra வை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது. பிறகு INS Salkஎன்ற சப்மெரைனை இந்தியா உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொண்டது.
            1986 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட (US Alvin) ஆல்வின் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் சென்று உடைந்த டைட்டானிக் கப்பலை புகைப்படம் எடுத்தது.
            நீர்மூழ்கிக் கப்பல் நீரினுள் மூழ்குவதற்கும் நீரின் மேல் மட்டத்திற்கு வருவதற்கும் பிரத்தியேகமான அமைப்புகள் உள்ளன. கப்பலினைச் சுற்றியுள்ள அறையில் நீர் இல்லாதபோது நீர்மூழ்கிக் கப்பலானது நீரின் மேல் மட்டத்தில் இருக்கும்.
            நீர்மூழ்கிக் கப்பலானது நீரினுள் மூழ்கவேண்டுமெனில் வால்வுகள் A,B,C,D யானது திறக்கப்படுகின்றன. வால்வு A,B ன் வழியே நீரானது உள்ளே செல்கிறது. C,D வழியே அறையிலுள்ள காற்று வெளியேற்றப்பட்டு நீர்மூழ்கிக் கப்பலானது நீரினுள் மூழ்குகிறது. மீண்டும் கப்பலானது நீரின் மேல்மட்டத்திற்கு வர வேண்டுமெனில் A,B வால்வுகள் திறக்கப்பட்டு C,D வால்வுகள் வழியே அதிக அழுத்தத்தில் காற்றானது செலுத்தப்படுகிறது. எனவேநீரானது வெளியேற்றப்பட்டு கப்பலானது நீரின் மேல் மட்டத்திற்கு வருகின்றது.
 

Monday, April 18, 2011

விண்வெளிப் போர் (Space War)..



ற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு விடையம் அணுவாயுதங்களாகும். பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அணுவாயுதப் பலப்பரீட்சையில் ஈடுபட்டபடி அணுவாயுதங்களை உற்பத்திசெய்து பெருக்கின. ஆனால் தற்போதைய நிலைமையில் உலகின் பல நாடுகள் அணுவாயுதங்களைக் கொண்டிருப்பதுடன் அவ்வணுவாயுதங்களை நீண்டதூரம் காவிச்செல்லவல்ல ஏவுகணைகளையும் கொண்டிருக்கின்றன.
space-war-laserஎனவே, வல்லரசுகள் திறன்மிக்க ஏவுகணைத் தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலைமையை எதிர்கொண்டுள்ளன. இப் பாதுகாப்புப் பொறிமுறைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, 1983 இல், றொனால்ட் றீகன் அவர்கள் அமெரிக்க அதிபராக பதவிவகித்த காலப்பகுதியில், அவரால் முன்மொழியப்பட்ட போர்முறைத் திட்டமே, Strategic Defense Initiative (SDI) என்றழைக்கப்படும் நட்சத்திரப் போர்முறையாகும் (Star War).
இந்தத் திட்டத்தின்படி சீரொளிக் கதிர் ஆயுதங்களைக் (laser weapon) கொண்ட செய்மதித் தொகுதிகள் விண்ணில் செலுத்தப்பட்டு அவை எப்பொழுதுமே எதிரிநாடுகளின் வான்பரப்பைக் கண்காணித்தபடி நிலைநிறுத்தப்படும். அமெரிக்காவைத் தாக்கும் நோக்குடன் எந்தவொரு நாடாவது ஏவுகணைகளை ஏவுமாயின், அந்த ஏவுகணைகள் அமெரிக்க வான்பரப்புக்குள் நுளையுமுன்னரே வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபடும் செய்மதிகளால் அழிக்கப்பட்டுவிடும்.
முதற்கட்ட பரிசோதனைகளின் படி இந்தத் திட்டம் எதிர்பார்த்தளவு வெற்றியை அமெரிக்காவுக்குக் கொடுக்கவில்லை என்றபோதிலும், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இத்திட்டத்தினை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை. ஒரு முழுமையான வெற்றிகரமான திட்டமாக இந்த விண்வெளிப் போர்முறைத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அமைரிக்கப் பாதுகாப்புத்துறை தொடர்ந்தும் பல்வேறுபட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, தனது பாதுகாப்புப் படைக் கட்டமைப்பில் விண்வெளிப் படை (Space Force) என்றொரு புதிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி உலகின் பல நாடுகள் விண்வெளிப் போர்முறையில் தமது கால்களைப் பலமாக ஊன்றுவதற்கான முயற்சியில் மிகவும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.
space-war-graphicமுதலாம் உலகப் போரின்போது நடைபெற்ற சமர்களில், இராணுவங்கள் உயர் நிலப்பரப்புக்களான மலை மற்றும் குன்றுப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் பெருமளவில் ஈடுபட்டன. இதற்கான காரணம், உயர்வான நிலப்பகுதிகளில் அமைக்கப்படும் நிலைகளில் இருந்து எதிரிப்படைகளின் தாக்குதல்களை இலகுவாக முறியடிக்கலாம் என்பதேயாகும். முதலாம் உலகப்போரில் மட்டுமன்றி மனிதகுலப் போரியல் வரலாற்றில் இதற்கான சான்றுகள் பல உண்டு.
இன்றைய உலகின் நவீன போரியல் விற்பனர்களின் உயர்நிலப்பகுதி விண்வெளியேயாகும். அதாவது அவர்கள் விண்ணிலிருந்து எதிரிகளைக் கண்காணித்து எதிரிப்படைகளின் மீது தாக்குதல் நடாத்தவோ அல்லது எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கவோவல்ல தொழிநுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் செய்மதிகளை விண்ணில் நிறுத்தி இப்பணிகளை இலகுவாக்கிக் கொண்டுள்ளனர். இதன் பயனாக எதிரிப் படைகளின் நடமாட்டங்கள் அனைத்தும் துல்லியமாக அவதானிக்கப்படுகின்றன.
இவ் உயர் தொழிநுட்பத்தின் காரணமாக ஈராக்கியப் படைகளின் எந்தவொரு நகர்வும் அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகளின் பார்வையிலிருந்து தப்பவில்லை. இவ்வாறான கண்காணிப்புப் பணியுடன் தாக்குதல் பணியையும் இணைப்பதே விண்வெளிப் போர்முறையின் முக்கிய அம்சமாகும். அதாவது, அணுவாயுத மற்றும் பிற ஏவுகணைகளை எதிரிநாட்டு வான்பரப்பிற்குள் வைத்தே செய்மதியில் பொருத்தப்பட்டிருக்கும் சீரொளிக் கதிர் ஆயுதங்களின் (laser weapon) மூலம் தாக்கியழிப்பதாகும்.
space-war-plane1983 ஆம் ஆண்டு, Strategic Defense Initiative (SDI) எனப் பெயரிடப்பட்ட இந்த விண்வெளிப் போர்முறை தற்போது Ballistic Missile Defense என்று அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவினை ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் குடை (umbrella of protection) என வர்ணிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக வருடமொன்றிற்கு 4 பில்லியன் ($4 billion) அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டளவில் மேலும் 6.6 பில்லியன் ($6.6 billion) அமெரிக்க டொலர்கள் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் இந்த விண்வெளிப் போர்முறைத் திட்டங்கள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த நாடுகள் தம்மைத் தமது பாதுகாப்புக் குடையின்கீழ் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தக் குடையில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளிகள் ஏனைய சிறிய நாடுகளைப் பாதிக்காதிருக்குமா? இது ஒரு விடைதேடவேண்டிய வினாவே.

Saturday, April 16, 2011

நீருந்து விசைப்படகு (WaterJet Boat)




நீருந்து விசைப்படகுகளின் ஆரம்ப வடிவம் பிரதானமாக ஆழங்குறைந்த நீர்ப்பரப்பில் பயன்படுத்துவதை நோக்காகக் கொண்டே வடிவமைக்கப்பட்டன. இவ்வாறான வரையறுக்கப்பட்ட தேவைக்கான வடிவமைப்பின் காரணமாக சாதாரண படகுகளைவிட இந்த நீருந்துturbine-jet-boat-1விசைப்படகுகள் 

















சில குறைபாடுகளைக் கொண்டவையாகவே காணப்பட்டன. இருந்தபோதிலும் வேகமாக ஓடும் ஆறுகள் மற்றும் ஆழம் குறைந்த நீர்ப்பரப்புக்களில் இந்த நீருந்து விசைப்படகுகளின் வினைத்திறன் காரணமாக இப்படகுகள் பலராலும் விரும்பப்பட்டது. இதன் விளைவாக இப்படகுகளின் உற்பத்தித் தேவை அதிகரித்தது. தொடர்ந்துவந்த இப்படகுகளின் வடிவமைப்பில் அவற்றின் குறைகள் களையப்பட்டு ஏனைய சாதாரண வகைப் படகுகளின் திறனுக்கு நிகராக அப்படகுகளின் திறன்களும் அதிகரிக்கப்பட்டதுடன், இவ்வகைப் படகுகள் இப்போது, பயணிகள் போக்குவரத்து, மீட்புப்பணி, சுற்றுக்காவல் நடவடிக்கை மற்றும் விநியோகம் எனப் பல்வேறுபட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாகப் படகுகள் நீரின் அடியில் சுழலும் சுழலிகளின் (propeller) மூலமாகக் கிடைக்கும் உந்துவிசையின் மூலமாகவே உந்திச்செல்லப்படுகின்றன. ஆனால், நீருந்து விசைப்படகு நீர்த்தாரைகளைப் படகின் பின்னோக்கிப் பீய்ச்சியடிப்பதன் மூலம் நீர்ப்பரப்பின் மீது உந்துவிசையை உருவாக்குகின்றது. இதன்காரணமாக, நீருந்து விசைப்படகுகளில் சுழலிகளுக்குப் பதிலாக நீர்த்தாரைகளைப் பீய்ச்சியடிக்கும் இயந்திர அமைப்புக்கள் காணப்படும். ஆரம்பத்தில் வேகமாக ஓடும் மற்றும் ஆழம் குறைந்த நதிகளிற் பயன்படுத்துவதற்காக, நியூசிலாந்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான சேர் வில்லியம் ஹமில்ற்றன் (Sir William Hamilton) என்பவரால் 1954 ஆம் ஆண்டில் நீருந்து விசைப்படகு வடிவமைக்கப்பட்டது.
சாதாரண படகு ஒன்றில் படகின் சுழலியானது (propeller) படகின் பின்புறத்தில் நீரின் கீழாக இருக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டிருக்கும். சுழலி இயங்கும்போது சுழலியின் பின்புறமாகவுள்ள நீர்ப்பரப்பில் ஏற்படுத்தப்படும் அழுத்தம் படகினை முன்நோக்கி நகர்த்துகின்றது. ஆனால் நீருந்து விசைப் படகுகளில் படகின் பின்புறமாக நீரின் மேற்பரப்பு மட்டத்தில் நீர்த்தாரைகளை வெளியேற்றவல்ல அமைப்புக் (pump nozzle) காணப்படும். இவ்வமைப்பினூடாக நீர்த்தாரைகள் வெளியேற்றப்படும்போது ஏற்படுத்தப்படும் மறுதாக்கம் படகினை முன்நோக்கி நகர்த்துகின்றது. படகின் கீழ்ப்புறத்திலிருக்கும் நீர் உள்ளீட்டு அமைப்பினூடாக உள்ளிளுக்கப்படும் நீர் தொடராக அமைக்கப்பட்டிருக்கும் நீரழுத்திகளினால் (seris of impellers) அழுத்தப்பட்டு உயரழுத்தத்தில் வெளியேற்றப்படும். இந்த அழுத்திகள் stages என்றழைக்கப்படுகின்றன. ஆரம்பகால நீருந்து விசைப்படகுகளில் மூன்று நிலைகளிலான அழுத்திகள் (three stages) காணப்பட்டபோதிலும் நவீன படகுகளில் தனியொரு அழுத்தியே (single stage) காணப்படுகின்றது. படகின் பின்புறத்தில் அமைந்திருக்கும் நீர்த்தாரை வழியின் (nozzle) திசையை மாற்றுவதன்மூலம் படகு பயணிக்கும் திசை மாற்றப்படுகின்றது (the boat is steared by changing the direction of nozzle). இருப்பினும் சில படகுகளில் நீர்த்தாரை வழியின் இருபுறத்திலும் சிறு தடுபபுக்ககள் (small gates) பொருத்தப்பட்டிருக்கும். நீர்த்தாரை வழிகள் நிலையாக இருக்க இந்தச் சிறுதடுப்புக்ளை திருப்புவதன் மூலம் நீர்த்தாரை வழியினூடாக வெளியேறும் நீரின் திசை மாற்றப்படுகின்றது. இதன்காரணமாகப் படகின் திசை மாற்றப்படுகின்றது.
சாதாரண படகு ஒன்றில் அதன் சுழலியின் சுழல்திசை மாற்றப்படுவதன் மூலம் பின்னோக்கிய உந்துவிசை (reverse thrust) உருவாக்கப்பட்டு அதன் வேகம் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் நீருந்து விசைப்படகுகளில் நீர்த்தாரைவழியினூடாக வெளியேறும் நீரின் திசையானது திசைமாற்றி (deflector) ஒன்றின் மூலமாக மாற்றப்பட்டு பின்னோக்கிய உந்துவிசை (reverse thrust) உருவாக்கப்பட்டு வேகம் கட்டுப்படுத்தப்படுகின்றது. நீருந்து விசைப் படகுகளில் நீர்த்திசைமாற்றி (deflector) அமைக்கும்போது நீர்த்திசைமாற்றியினால் திசைதிருப்பப்படும் நீர் மீண்டும் படகின் இயந்திரத்தினால் உள்ளிளுக்கப்படாதவாறு நீரானது திசைதிருப்பப்பட வேண்டும். நீர்த்திசைமாற்றியினால் திருப்பப்படும் நீரானது மீண்டும் இயந்திரத்தினால் உள்ளிளுக்கப்பட்டால் மேலதிக வளி நீருடன் சேர்த்து உள்ளிளுக்கப்படும். இவ்வாறு மேலதிக வளி உள்ளிளுக்கப்பட்டால் இயந்திரத்தினாற் சீரான நீர்த்தாரைகளை உருவாக்க முடியாது. இதன்காரணமாக படகின் சீரான ஓட்டம் தடைப்படும். அதுமட்டுமன்றி இவ்வாறு மேலதிக வளி இயந்திரத்தினால் உள்ளிளுக்கப்பட்டால் அது பின்னோக்கிய உந்துவிசையை அதிகரித்துவிடும். நீர்த்திசைமாற்றியை அரைவாசியளவு திருப்பியநிலைக்கு மாற்றுவதன்மூலம் முன் மற்றும் பின் திசைகளில் சம அளவான உந்துவிசைகள் பிரயோகிக்கப்படுவதன் காரணமாக படகினை அசைவின்றி ஓரிடத்தில் நிறுத்த முடியும். இ்வ்வாறு வேகமாகப் படகினை நிறுத்துவதன் மூலம் படகினைச் சடுதியாக திருப்பமுடிகின்றது. சாதாரண படகுகளில் இவ்வாறு படகினைச் சடுதியாக திருப்ப முடியாது.
இவ்வகையான நீருந்துவிசைப் படகுகள் இவற்றுக்கென பிரத்தியேகமான சிறப்பு வடிவமைப்புக்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. குறிப்பாக நீருந்து விசைப்படகுகளின் கீட்புற வடிவமைப்பு ஏனைய வகைப் படகுகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவ்வகைப் படகுகளின் கீட்புறம் பெரும்பாலும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டவையாகக் காணப்படுவதன் காரணமாக, அதிக வேகத்திற் பயணிக்கும்போது கீட்புறத்தின் பின்பகுதி மாத்திரமே நீருடன் தொடுகையுற்றுக் காணப்படும். இதன்காரணமாக நீரினால் ஏற்படுத்தப்படும் உராய்வு பெருமளவிற் குறைக்கப்படுகின்றது. இருப்பினும் குறைந்த வேகத்திற் பயணிக்கும்போது படகின் அதிகளவான கீட்பகுதி தொடுகையுற்றுக் காணப்படுவதால் நீருராய்வு அதிகமாகவே காணப்படும்.
boat_rearநீருந்து விசைப்படகின் வடிவமைப்பில், நீர்த்தாரை வழியின் அமைவிடமே படகின் வேகம் மற்றும் ஆழங்குறைந்த நீர்ப்பரப்பில் பயணித்தல் என்பவற்றைச் சாத்தியமாக்குகின்றது. படகின் நீர்த்தாரை வழியானது நீர் மேற்பரப்பின் மேலாகக் காணப்படுவதால், படகின் அடிப்பரப்பைத் தட்டையாக வடிவமைப்பது இலகுவாகின்றது. இதன்காரணமாக இவ்வகைப் படகுகளால் ஆழங்குறைந்த நீர்ப்பரப்பிற் பயணிப்பது சாத்தியமாகின்றது. தற்காலத்தில் சாதாரண வகைப் படகுகள் பயன்படுத்தப்படும் அனைத்து பயன்பாடுகளிலும் நீருந்து விசைப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. நீருந்து விசைப்படகுகளின் மிகச் சிறப்பியல்பு, அதன் வெளிப்புறத்தே அசையும் பகுதிகள் எவையும் காணப்படமாட்டா. இது கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்குச் சிறந்தது.
இவ்வகைப் படகுகளின் மிக முக்கியமான பிரதிகூலம் இதன் எரிபொருட்செலவு. அதிகரித்த எரிபொருட்செலவு காரணமாக இவ்வகைப் படகுகளை நீண்டதூரப் பயணச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்துவதென்பது பொருட்செலவு மிகுந்ததாகும்.

Friday, April 15, 2011

குரூஸ் ஏவுகணை (Cruise Missile).....



நவீன உலகின் வல்லரசு நாடுகளின் இராணுவ பலத்தினைத் தீர்மானிக்கும் விடையங்களில் மிக முக்கியமானதொரு இடம் அந்நாடுகளிடம் காணப்படும் ஏவுகணைப் பலத்திற்கே உண்டெண்றால் அது மிகையன்று. ஒவ்வொரு நாட்டிடமும் காணப்படும் ஏவுகணைகளின் தூரவீச்சே அந்நாடுகளின் தாக்குதிறன் வீச்செல்லையை இன்று தீர்மானிக்கின்றது.பலத்தின் மூலமான அமைதி (Peace through Strength) என்பதனூடாகப் போருக்குத் தயாராயிருத்தலே அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதே இவ்வுலகின் நிரந்தரக் கோட்பாடாகிவிட்ட இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது இராணுவ பலத்தைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக உழைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்பலப் பெருக்கப் போட்டியில் புதிய புதிய ஏவுகணைகளின் உருவாக்கமும் அவற்றுக்கான நவீன தொழிநுட்ப உருவாக்கமும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
குரூஸ் வகை ஏவுகணைகள் ஏவுகணைத் தொழிநுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய படிக்கல். சிறியதொரு ஆளில்லா விமானத்தைப் போன்று இயங்கும் இவ்வகை ஏவுகணைக்குத் தாரை இயந்திரம் (Jet Engine) ஒன்றின்மூலம் 250px-Moskit_missileஉந்துசக்தி வழங்கப்படுவதுடன், இவை தன்னியக்க வழிச்செலுத்தி (Autopilot) மூலம் இலக்கை நோக்கி வழிநடாத்தப்பட்டு மிகவும் துல்லியமாக இலக்கினைத் தாக்கவல்லன. இவ்வகை ஏவுகணைகள் பொதுவாக பாரிய சாதாரண வெடிமருந்திகாலான வெடிபொருட்களையோ அல்லது அணுவாயுதங்களையோ காவிச்செல்ல வல்லனவாகக் காணப்படுகின்றன. மிகவும் தாழ்வான உயரத்தில் ஒரு விமானத்தைப்போன்று பறந்துசெல்லவல்ல இவ்வகை ஏவுகணைகள் எதிரிகளின் ரேடார் திரைகளிற் படாது தன்னியக்கமாக வழிநடாத்தப்பட்டு இலக்கைநோக்கிப் பயணிக்கவல்லன. அத்துடன் தாரை இயந்திரங்களால் இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை ஏவுகணைகள் இலக்கை அடைவதற்காக வழிமண்டலத்தைத் தாண்டிச்செல்ல வேண்டிய தேவை இல்லை.
ஓர் ஆளில்லா விமானம் போன்றே இவ்வகை ஏவுகணைகள் இயங்குகின்ற போதிலும், அடிப்படையில் இவை பறந்துசென்று இலக்கைத் தாக்கவல்ல வெடிகுண்டுகளே.
1916 இல் விமானப் பொறியாளர் ஒருவரால் TNT வெடிமருந்தைக் காவியபடி தன்னியக்கமாகப் பறக்கவல்ல விமானம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இதன்பால் கவரப்பட்ட அமெரிக்கப் பாதுகாப்புத்துறை, Kettering Bug என்றழைக்கப்படும் விமானமொன்றின் வடிவையொத்த, 120 கிலோமீற்றர்கள் பறந்துசென்று தாக்கவல்ல பறக்கும் வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்தது. இதனைத்தொடர்ந்து பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் இவ்வகையான ஏவுகணைகளைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டின. இவ்வகைப் பறக்கும் வெடிகுண்டுகள் Areal Torpedo என்றே அழைக்கப்பட்டன. அத்துடன், ஆரம்பகாலங்களிற் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஏவுகணை வடிவங்களிற் சிலவற்றில் உந்துகணைகளே (Rockets) அவற்றுக்கான உந்து சக்திக்காகப் பயன்படுத்தப்பட்டன.
நவீன குரூஸ் ஏவுகணைகளில் அவற்றின் உந்துசக்திக்காக தாரை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அவற்றின் தொடக்கநிலை ஏவுதற் (Launch) செயற்பாட்டிற்காக உந்துகணைகளே பயன்படுத்தப்படுகின்றன. ஏவுபீடத்திலிருந்து (Launching Pad) ஏவப்பட்டதும் தொடக்கநிலை உந்துகணை தனியாகப் பிரிந்துவிட ஏவுகணையின் இயந்திரம் செயற்பட்டு ஏவுகணையை உந்திச்செல்லும்.
நவீன இராணுவங்களின் பயன்பாட்டிலுள்ள இவ்வகை ஏவுகணைகளில் பிரபல்யமான ஒன்று அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகளாற் பயன்படுத்தப்படும் BGM-109 Tomahawk ஏவுகணையாகும். 2500 கிலோமீற்றர் தூரவீச்சுக்கொண்ட இவ்வகை ஏவுகணைகள் 450 கிலோக்கிராம் வரையான வெடிபொருட்களைக் காவிச்செல்ல வல்லன என்பதுடன் சுழலிக்காற்றாடி (Turbo fan) இயந்திரத்தின் மூலம் வலுவூட்டப்படும் இவை மணிக்கு 880 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கவல்லன.
Tomahawk வகை ஏவுகணை தன்னியக்க வழிச்செலுத்தி மூலம் இலக்கைநோக்கி வழிநடாத்தப்பட்ட போதிலும், இவ் ஏவுகணை யுத்தகள வலையமைப்புடன் இணைந்து செயற்படும் (network-centric warfare-capability) வல்லமைமிக்கது. அதாவது இது இலக்கைநோக்கிப் பயணிக்கும்போது, யுத்தக்களத்தைக் கண்காணிக்கும் செய்மதிகள், வேவு விமானங்கள், முன்னணித் தாக்குதற் கலங்கள் போன்றவற்றிடமிருந்து தேவையான தகவல்களைப் பொற்றுக்கொள்ளவும், இதனது வழிகாட்டற் தொகுதியினால் சேகரிக்கப்படும் தகவல்களை வலையமைப்பிலுள்ள ஏனைய தாக்குதற்கலங்களுக்கு வழங்கவும் வல்லது. இவ்வேவுகணையின் (Tomahawk) இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில், இந்த ஏவுகணை தாக்குதலுக்காகப் பறக்கும்போது இதன் மூக்குப்பகுதியிலுள்ள ஒளிப்படக்கருவியினால் (video camera) யுத்தக்களக் காட்சியை ஒளிப்படமெடுக்கு கட்டுப்பாட்டு அறையிலிருக்கும் இலக்குக் கண்காணிப்பாளருக்கு அனுப்பியவாறே தாக்குதல் இலக்கைநோக்கி நகரும். கட்டுப்பாட்டு அறையிலிருக்கும் இலக்குக் கண்காணிப்பாளர், தாக்குதல் இலக்கு ஒளித்திரையில் தெரியும்போது, அத்தாக்குதல் இலக்கு பிற தாக்குதல்களால் போதுமானளவு சேதமாக்கப்பட்டு விட்டதாகக் கருதுவாராயின் ஏவுகணையைப் பிறிதொரு இலக்குநோக்கித் திருப்பிவிட முடியும்.
நேட்டோ நாடுகளால் SS-N-22 Sunburn என்ற சங்கேதப் பெயரில் அழைக்கப்படும் ஏவுகணை, இரஸ்யத் தயாரிப்பு குரூஸ் வகை ஏவுகணையாகும். இந்த ஏவுகணை எதிரிக் கப்பல்களை இலக்கு வைப்பதற்காக இரஸ்யக் கடற்படையால் (முன்னை சோவியத் ஒன்றியக் கடற்படை) பயன்படுத்தப்படுகின்றது. 320 கிலோக்கிராம் சாதாரண வெடிபொருட் தொகுதியையோ அல்லது 200 கிலோதொன் அணுவாயுதத்தையோ காவிச்செல்லக்கூடிய இந்த ஏவுகணை, அதிவேகமான ramjet இயந்திரத்தால் இயக்கப்படுவதன் காரணமாக, ஏவப்பட்டு 25 தொடக்கம் 30 செக்கன்களினுள் எதிரிக்கப்பலைத் தாக்கியழிக்கவல்லது. உலகின் நவீன இராணுவங்களாற் பயன்படுத்தப்படும் அதிகூடிய வேகமான ஏவுகணைகளுள் இதுவும் ஒன்றாகும்.
250px-BrahMosஇதேபோன்று, இந்திய, இரஸ்ய கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்ட BrahMos, மற்றொரு குரூஸ் வகை ஏவுகணையாகும். தரையிலமைந்துள்ள ஏவுதளம், கப்பல், நீர்மூழ்கி மற்றும் விமானம் ஆகியவற்றிலிருந்து ஏவக்கூடியவாறு இந்த ஏவுகணை பல்வேறு வடிவங்களிற் காணப்படுகின்றது. இரஸ்யத் தயாரிப்பான ramjet இயந்திரத்தைக் கொண்ட இந்த ஏவுகணை 300 கிலோகிராம் வெடிபொருளை 290 கிலோமீற்றர் தூரத்திற்குக் காவிச்சென்று இலக்கைத் தாக்கவல்லது. இந்த ஏவுகணை ஒரு இந்திய, இரஸ்யக் கூட்டுத்தயாரிப்பு என்பதை உணர்த்தும்விதமாக, இந்த ஏவுகணையின் பெயர் இந்தியாவின் நதிகளில் ஒன்றான பிரம்மபுத்ராவினதும் (Brahmaputra) இரஸ்யாவின் நதிகளில் ஒன்றான மொஸ்க்வாவினதும் (Moskva) பெயர்களைத் தாங்கியுள்ளது.
இவ்வகை ஏவுகணைகள் அவற்றின் அளவு, வேகம், தாக்குதல் வீசசெல்லை மற்றும் ஏவப்படும் தளத்தின் 300px-Brahmos_imdsஅமைவிடம் என்பவற்றைக்கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஒரு ஏவுகணையானது வெவ்வேறுபட்ட ஏவுதளங்களிலிருந்து ஏவத்தக்கவாறு வடிவமைக்கப்படுகின்றன. இவ்வகை ஏவுகணைகளின் தன்னியக்க வழிச்செலுத்திகளில் செய்மதி வழிகாட்டற் தொகுதி (Satellite Navigation System), இலத்தினியல் வரைபட ஒப்பீடு (Terrain Contour Matching) போன்ற பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.





Thursday, April 14, 2011

நீர்மூழ்கிக் கப்பல்கள்.......


180px-HMCS_Windsor_SSK_877நீர்மூழ்கிக் கப்பல்கள் மனிதனின் கடற்பயண வரலாற்றில் இன்னொரு மைற்கல். பறவையைக் கண்டு விமானம் படைத்து, பறந்து, பாயும் மீன்களில் படகினைக் கண்டு தண்ணீரின் மேலாகப் பயணித்த மனிதனின் ஆசை அத்துடன் நின்றுவிடவில்லை. அவன் தண்ணீருக்கு அடியாலும் பயணிக்க ஆசைப்பட்டான். ஆசை என்பதைவிட தண்ணீரின் அடியாற் பயணிக்கவேண்டிய தேவை அவனுக்கு எழுந்தது. ஆம், போர் மனிதனுக்கு அந்தத் தேவையை உருவாக்கியது. போர்களின்போது எதிரிகளை நெருங்கிச்சென்று தாக்குவதற்கோ எதிரிகள் அறியாது பயணிப்பதற்கோ தேவையான வழிமுறைகள் பற்றிய தேடலின் விளைவே நீர்மூழ்கிக் கப்பல்கள்.
1620 ஆம் ஆண்டில் டச்சுக் கண்டுபிடிப்பாளர் ஒருவர் நீரின் அடியால் பயணிக்கவல்ல கலம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். நீர்மூழ்கிக் கப்பல்களின் வரலாறு இக்கலத்திலிருந்தே180px-2004-Bremerhaven_U-Boot-Museum-Sicherlich_retouchedதொடங்குகின்றது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நீர்மூழ்கிகள் பரந்துபட்டளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்காலக் கடற்படைகளின் பயன்பாட்டில் நீர்மூழ்கிகள் தாக்குதல், விமானந்தாங்கிகளின் பாதுகாப்பு, ஏவுகணைக் கட்டுப்பாடு மற்றும் வேவு போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
கடற்கலங்களின் வடிவமைப்பே அவை நீரில் மிதப்பதற்குக் காரணமாகின்றது. அதாவது கப்பல் ஒன்று அதன் மொத்தக் கனவளவிலும் அதிகமான நீரினை இடம்பெயர்க்கும்போது அக்கப்பல் நீரில் மிதக்கின்றது. நீர்மூழ்கிகளும் நீரின் மேற்பரப்பில் இருக்கும்போது இதே தத்துவத்தின் அடிப்படையிலேயே நீரில் மிதக்கின்றன. எனவே நீர்மூழ்கிகள் நீருக்கு அடியிற் செல்ல வேண்டுமாயின், ஒன்றில் அவற்றின் நிறையினை அதிகரிக்க வேண்டும். இல்லாது போனால் அவற்றினால் இடம்பெயர்க்கப்படும் நீரின் கனவளவைக் குறைக்க வேண்டும். எனவே, நீர்மூழ்கிகளில் அவற்றின் நிறையினைக் கட்டுப்படுத்துவதற்காக, அவற்றிக் கீழ்ப்பகுதியில், புறச்சுவரின் உட்புறமாக Ballast Tanks என்றழைக்கப்படும் தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நீரினாலோ அல்லது வளியினாலோ நிரப்பப்படுவதன் மூலம் நீர்மூழ்கிகளின் நிறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.
180px-Submarine_control_surfaces2.svgஇத்தாங்கிகள் Main Ballast Tanks என்றழைக்கப்படுகின்றன. இத்தாங்கிகளில் நீரினை நிரப்புவதன் மூலம் நீர்மூழ்கியை நீருக்கடியிற் கொண்டு செல்லவோ இல்லது நீரினை வெளியேற்றி வளியினை நிரப்புவதன் மூலம் நீர்மூழ்கியை நீரின் மேற்பரப்புக்குக் கொண்டுவரவோ முடியும். பொதுவாக நீருக்குள் இருக்கும்போது இந்தத் தாங்கிகள் நீர் நிரப்பப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் இத்தாங்கியில் நிரப்பப்பட்ட நீரின் காரணமாக நீர்மூழ்கியானது நீர் மேற்பரப்பிலிருந்து குறிப்பிட்டதோர் ஆழத்திலேயே பேணப்படும். இக்குறிப்பிட்ட ஆழத்திலிருந்து மேலதிக ஆழத்தைக் கூட்டிக்குறைப்பதற்காக ஆழக் கட்டுப்பாட்டுத் தாங்கி (Depth Control Tank) என்றழைக்கப்படும் மேலுமோர் சிறிய தாங்கி பயன்படுத்தப்படுகின்றது. இத்தாங்கி உயர் அழுத்தத்தைத் தாங்கவல்லது. இத்தாங்கியின் நீர்க்கொள்ளளவைக் கட்டுப்படுத்துவதன்மூலம் ஆழத்தைக் கூட்டிக்குறைக்க முடியும். இத்தாங்கியானது நீர்மூழ்கியின் புவியீர்ப்பு மையப் பகுதியிலோ அல்லது நீர்மூழ்கியின் சமநிலையைப் பேணக்கூடியவாறு அதன் அடிப்பரப்பில் சமச்சீராகப் பரந்தோ காணப்படும்.
நீர்மூழ்கிகள் நீரினுள் செல்லும்போது, நீரில் காணப்படும் உப்பின் தன்மை, ஆழத்தின் காரணமாக நீரினால் ஏற்படுத்தப்படும் அழுத்தம் போன்றவற்றினால் இத்தாங்கிகளின் அழுத்தம் உயர்கின்றது. இவ்வுயர் அழுத்தத்தைத் தாங்கவல்லதாக நீர்மூழ்கிகளின் இத்தாங்கிகள் உருக்கிரும்பினாலோ அல்லது ரைற்றானியம் உலோகத்தாலோ ஆக்கப்படுகின்றன.
நீர்மூழ்கியின் சமநிலைக் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அதன் சுழலியின் அருகில் கிடையாகப்180px-USS_Greeneville_SSN_772_in_Dry_Dockபொருத்தப்பட்டிருக்கும் சமநிலைக் கட்டுப்பாட்டுச் செட்டையும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோன்று நீர்மூழ்கியின் புவியீர்ப்பு மையப்புள்ளியை அண்மித்துக் கிடையாகப் பொருத்தப்பட்டிருக்கும் பிரதான கட்டுப்பாட்டுச் செட்டைகள் நீர்மூழ்கியின் ஆழக்கட்டுப்பாட்டுச் செயற்பாட்டில் பங்காற்றுகின்றன. அவசர நேரத்தில் நீர்மூழ்கியை நீர்மேற்பரப்புக்குக் கொண்டுவருவதற்கு நீர்மூழ்கியிலிருக்கும் இரண்டுவகையான ஆழ மற்றும் சமநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதன்போது நீர்மூழ்கி மிக வேகமாக நீர் மேற்பரப்புக்குக் கொண்டுவரப்படுகின்றது.
தற்போது பயன்பாட்டில் காணப்படும் அநேகமாக அனைத்து நீர்மூழ்கிகளும் அணு சக்தியினால் இயங்குபவையாகவே காணப்படுகின்றன. ஆனால், ஆரம்பத்தில் நீர்மூழ்கிகள் மனிதவலுவால் இயக்கப்படுபவையாகவே காணப்பட்டன. 1863 இல் முதலாவது இயந்திரவலுவால் இயக்கப்படும் நீர்மூழ்கி பிரான்சில் உருவாக்கப்பட்டது. இது அழுத்தப்பட்ட வளியின்மூலம் வலுவூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து 1864 இல் முதலாவது நீராவி இயந்திரத்தால் இயங்கும் நீர்மூழ்கி ஸ்பெயினில் உருவாக்கப்பட்டது. நீர்மூழ்கியில் அணுசக்திப் பயன்பாடு அறிமுகப்படுத்தப்படும்வரை 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான நீர்மூழ்கிகள் நீருக்கடியில் பயணிக்கும்போது மின்கலத்தின் மூலமும் நீர்மேற்பரப்பில் பயணிக்கும்போது டீசல் இயந்திரத்தின் மூலமும் இயங்கிக் கொண்டிருந்தன. இவ்வாறு இயந்திரத்தின்மூலம் இயங்கும்போது அவற்றின் மின்கலங்கள் மீள்மின்னேற்றம் செய்யப்பட்டன.
இரண்டாம் உலகப்போர்க் காலப்பகுதியில் ஜேர்மனியப் பொறியாளர்கள் ஐதரசன் எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் நீர்மூழ்கியை உருவாக்கினர். போரின் பின்னரான காலப்பகுதியில் ரஸ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் நீர்மூழ்கிக்கான ஐதரசன் எரிபொருள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டபோதிலும் அதன் முடிவு திருப்திகரமாக அமையவில்லை.
சாதாரணமாக ஓர் அணுசக்தி நீர்மூழ்கியில் 80 இற்கும் அதிகமான பணியாளர்களும் சாதாரண நீர்மூழ்கிகளில் அரைவாசியளவு பணியாளர்களும் பணியாற்றுவர். 1985 இல் நோர்வஜியக் கடற்படை தமது நீர்மூழ்கிகளில் முதலாவதாகப் பெண்களைப் பணிக்கு அமர்த்தியது. அதைத்தொடர்ந்து டென்மார்க், சுவீடன், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் தமது கடற்படை நீர்மூழ்கிகளில் பெண்களைப் பணிக்கு அமர்த்தியது.