பழமொழி.....

Thursday, March 21, 2013

வானூர்தி விபத்து -04


வானூர்தியைக் கண்டுபிடிப்பதற்காக எடுத்த ஆரம்ப கட்ட முயற்சிகளிலேயே பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. உயர்ந்த மலைமேடுகளிலிருந்தும் உயரமான கட்டிடங்களிலிருந்தும் வானூர்திகளைப் பறக்கவிட்டு ஆய்வுகளை நடாத்திய சந்தர்ப்பங்களில் பல விபத்துக்களும் சேதங்களும் நிகழ்ந்துள்ளன.

ஆனாலும் 1920 களில் பயணிகள் வானூர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தான் வானூர்தி விபத்துக்கள் அதிகரிக்கத் துவங்கின. 1923 ஆம் ஆண்டில் வானூர்தி விபத்துக்களில் பலியானோரின் எண்ணிக்கிகை முதற்தடவையாக நூறைக் கடந்தது.

2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பாரிய வானூர்தி விபத்துக்கள் நடக்காத போதிலும் 2009 ஆம் ஆண்டு Air France நிறுவனத்தின் வானூர்தி அட்லான்டிக் சமுத்திரத்திற்கு மேலால் பறந்தபோது புயலில் அகப்பட்டு கடலில் வீழ்ததில் 228 உயிர்கள் பலியானார்கள்.



வானூர்தியைக் கண்டுபிடிப்பதற்காக எடுத்த ஆரம்ப கட்ட நடவடிக்கையின் போது ரைட் சகோதரர்களின் ஒருவரான Orville Wright செலுத்தும்போது உந்துகணை (Propeller) வெடித்து வானூர்தியில் மோதியதால் ஏற்ப்பட்ட விபத்தில் Orville Wright படுகாயமடைந்தார். இது தான் உலகின் முதல் வானூர்தி விபத்தாகும்.



உலகில் அதிகளவில் உயிர் இழப்புகளை ஏற்படுத்திய வானூர்தி விபத்தானது அமெரிக்காவில் நடந்த 11/9 தீவிரவாத தாக்குதல் ஆகும். இதில் 3,000 திற்கு அதிகமானோர் பலியானார்கள்.

உலகம் முழுதும் கடந்த 13 ஆண்டுகளில் நடந்த 2000 வானூர்தி விபத்துக்களில் 17,000 க்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக ஜெனிவாவில் உள்ள வானூர்தி விபத்து பதிவு அலுவலகம் (Aircraft Crashes Record Office) தனது பதிவை மேற்கோள் காட்டி அறிவித்துள்ளது.

ஆண்டு    உயிர் இழப்புகள்விபத்துக்கள்
2012794119
2011828117
20101,115130
20091,103122
2008884156
2007971147
20061,294166
20051,459185
2004771172
20031,230199
20021,413185
20014,140200
20001,582189
19991,138211


Wednesday, March 20, 2013

வானூர்தி விபத்து -03


வானூர்தி விபத்துக்கான வானிலை மற்றும் வானியக்கவியல் (Aerodynamics) காரணங்ள்........



நமது வளிமண்டலமானது பின்வரும் ஐந்து மண்டலங்களால் ஆனது

  1. Troposphere / மாறன் மண்டலம் :- 7 கி.மீ தொடக்கம் 17 கி.மீ வரை, 
  2. Stratosphere / படைமண்டலம் :- 17 கி.மீ முதல் 50 கி.மீ வரை 
  3. Mesosphere / இடை மண்டலம் :- 50 கி.மீ முதல் 80 - 85 கி.மீ வரை 
  4. Thermosphere / வெப்பமண்டலம் :- 80 - 85 கி.மீ முதல் 640+ கி.மீ வரை 
  5. Exosphere / புறவளி மண்டலம்
மாறன் மண்டலத்தில் தான் மேகங்கள், மழை மற்றும் பிற வானிலை மாற்றங்கள் அதிகமாக நிகழும். இங்கு காற்றின் அடர்த்தி, வேகம் என்பன அதிகமாக இருப்பதால் பறப்பதற்கு அதிக எரிப்பொருளும் செலவாகும்.

படை மண்டலத்தில் மேகம், மழை எல்லாம் இல்லாவிடினும் மின்னல் மற்றும் பனி பொழிவு இருக்கும். அத்துடன் குறைவான அடர்த்தியில் காற்று இருப்பதால் வானூர்தி பறப்பதற்கு எரிப்பொருள் குறைதளவே செலவாகும்.

படை மண்டலத்தில் 35000 அடி உயரத்திலேயே பயணிகள் வானூர்திகள் (commercial airlines) இயக்கப்ப்டுகின்றன இங்கு உள்ள வானியக்கவியல் ஆபத்து தான் வானூர்தி விபத்துகளுக்கு பெரும்பாலும் வழிவகுப்பது.

                                   வானியக்கவியல் ஆபத்து
இங்கு சிறியதும் பெரியதுமான வளி வெற்றிடங்கள் (Air Pockets) காணப்படும். சில நேரங்களில் பெரிய வளி வெற்றிடத்தில் போதுமான காற்று இல்லாமல் இயந்திரம் நின்றுவிடும் சந்தர்ப்பம் உள்ளது. அதைத் தவிர்பதர்க்கு வானோடி இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவார். அப்படியே நின்றாலும் உடனே இயந்திரத்தை இயக்கிவிடுவார். இதற்காகவே வானூர்தி இயந்திரங்கள் பல முறை சோதிக்கப்படும். சோதனைகள் சரியாக இருந்தால் மட்டுமே அந்த இயந்திரத்திற்கு அனுமதி கிடைக்கும்.




மேலும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளப்பகுதியில் காற்று சென்று மோதும் போது அவை அப்படியே மேல் எழுந்து படை மண்டலம் வரைக்கும் செல்லும், அப்படிப்பட்ட காற்று அலையை வானூர்தி கடக்கும் போது வானூர்தியின் எடையை சம நிலையில் வைத்திருக்கும் இறக்கையின் தூக்கு விசை பாதிப்புக்குள்ளாகி வானூர்தியின் வானியக்கவியல் பாதிக்கப்படும்.

பயணிகள் வானூர்தி ஆனது காற்றில் ஒலியின் வேகத்தை விட குறைவான வேகத்தில் பயணிக்கும் வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வானூர்தியின் பாதுகாப்பான வேகம் "Mach 0.86" ஆகும். இதனால் வானூர்தியின் வேகம் எப்பொழுதும் ஒலியின் வேகத்தினை (mach speed)தாண்டாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

குறைவான வேகத்தில் ஓட்டினால் காற்றோடையினால் பாதிக்கப்படும் அத்துடன் அந்த உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவானதால், அதனை சமாளிக்க கண்டிப்பாக ஒரு குறைந்த பட்ச வேகம் இருக்க வேண்டும். அத்துடன் போதுமான மிதப்பு விசை கிடைக்க வேகமாக இயக்க வேண்டும், ஆனால் ஒலியின் வேகத்தை தொடக்கூடாது என்பதே வணிக வானூர்திகளுக்கான வானியக்கவியல் கட்டுப்பாடு ஆகும். வானூர்தி ஒலியின் வேகத்தில் பறக்கும் போது காற்று முகப்பிற்கும், வானூர்தியின் மூக்குப் பகுதிக்கும் இடையில் இடைவெளி இருக்காது. வானூர்தி வேகமாகச் சென்று முகப்பின் மீதே மோதும் இதனால் காற்றில் சீர்குலைவு ( sonic boom and turbulence ) ஏற்படும். இது இறக்கையின் மீது மோதும் காற்றின் வேகத்தினைக்குறைக்கும்.


இந்த நிலையில் வானோடி இறக்கையில் மோதும் காற்றின் வேகத்தை அதிகரிக்க காற்று மோதும் கோணத்தினை (angle of attack)உயர்த்துவார் இதனால் இறக்கையின் மீதாக கடக்கும் காற்றின் வேகம் கூடும், மோதும் கோணம் அதிகம் உயர்த்தப்பட்டால் வானூர்தி கீழ் நோக்கி இறங்கும்,சிறிது நேரத்தில் சரி செய்யவில்லை எனில் வானூர்தி செங்குத்தாக விழுந்து விடும். இதனை stall என்பார்கள். இதனால் தான் ஒலியின் வேகத்தினை தொடும் எல்லையை சவப்பெட்டி முனை (coffin corner or q corner)என்பார்கள்.


காற்றின் அடர்த்தி குறைந்தால் அதற்கு ஏற்ப வானூர்தியின் வேகத்தை மற்றும் காற்று மோதும் கோணத்தை மாற்ற வானோடியால் முடியாது அப்படி செய்தால் வானூர்தி மிதப்பு விசையை இழக்கும். சில சமயங்களில் காற்று ஓடைகளை வேகமாக இழுத்து செல்லும் அப்போது சரியாக வேகத்தினைக்கட்டுப்படுத்த வேண்டும் இல்லை எனில் ஒலியின் வேகத்தினை தொடுவதால் வானூர்தி மிதப்புவிசையை இழக்க நேரிடும்.
35000 அடி உயரத்தில் வானூர்தி பறப்பதில் இத்தகைய அபாயம் இருந்தும் பறக்க ஒரே காரணம் எரிப்பொருள் குறைவாக செலவாகும் என்பது தான்.

மேலும் பனிப்பொழிவு, இடி மின்னல் போன்றவை படைமண்டலத்தில் இருந்தே கீழ் நோக்கிப்பாயும் அதிலும் சிக்க வாய்ப்புள்ளது.அதனால் கட்டுப்பாட்டுக்கருவிகள் செயலிழந்து போக நேரிடும். அதுவும் விபத்துக்கு வழி வகுக்கும். வானூர்திகளில் 50 கி.மீக்கு முன்னால் உள்ள வானிலையை காட்டும் ரேடார் உண்டு. அவை இடி ,மின்னல், பனிப்பொழிவினை சுட்டிக்காட்டும்.

இது போன்ற முன்னறிவிப்புகள்,காற்றின்,வேகம் , உயரம் எல்லாம் தானாகவே கறுப்புப்பெட்டியில் பதிவாகிவிடும், இதனால் தான் விபத்துக்கான காரணம் கருப்புப்பெட்டியில் கண்டுபிடிக்கலாம்.

Saturday, March 16, 2013

வானூர்தி விபத்து -02

வானூர்தி விபத்துக்கான காலநிலை தவிர்த்த வேறு காரணிகள்..........
  1. பறவைகள்.
  2. தூரப்புலமானியின் (Redar) கண்காணிப்பிலிருந்து காணாமல்போதல்.
  3. மலிந்த விலை (Budget Carrier) வானூர்திப் பயணங்கள்.
  4. மனிதத் தவறுகள்.
  5. சமர்கள். (Wars)

                                                        பறவைகள்

சாதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள பறவைகள் வானூர்திகளில் மோதுவதால் வானூர்திகள் விபத்துக்களைச் சந்திக்க நேர்கின்றன. வானூர்தியின் இயந்திரப் பகுதியை நோக்கி அதிவேகமாகக் காற்று ஈர்க்கப்படும் நேரத்தில் அப்பகுதியில் பறந்துகொண்டிருக்கும் பறவைகளும் ஈர்க்கப்படுகின்றன. பறவைகள் குறித்த இயந்திர அலகுகளில் மோதுவதால் இயந்திரத்தின் உற்பகுதிக்குள் இழுக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டு வானூர்தி விபத்துக்குள்ளாகலாம்.

1988 முதல் உலகம் முழுதும் வானூர்திகளில் பறவைகள் மோதியதன் விளைவாக 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டில் வானூர்திகள் பறக்க ஆரம்பிக்கும்போது அல்லது இறங்கும்போது 5000 இற்கும் அதிகமான தடவைகள் பறவைகள் மோதிய நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு 155 பேருடன் பயணித்த அமெரிக்க வானூர்தி ஒன்றின் இயந்திரத்தில் பறவையொன்று சிக்கியதால் அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்காக வானூர்தி உடனடியாக நியுயோர்க் நதியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆய்வுக் குழு இப்பறவைகளை இறக்கையுள்ள தோட்டாக்கள் என வர்ணிக்கிறது. தரையிலிருந்து சில ஆயிரம் அடி உயரம் வரையான பகுதிகளிலேயே இத்தகைய அபாயம் காணப்படுகின்றது.


                       தூரப்புலமானியின் (Redar) கண்காணிப்பிலிருந்து                
                                                காணாமல்போதல்

வானூர்திகள் பறக்கும்போது அவை தூரப்புலமானியின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அதன்போதுதான் வானூர்தி செல்லும் பாதை பற்றியும் வரும் தடங்கள் பற்றியும் காலநிலை குறித்தும் எச்சரிக்க முடியும். தற்செயலாக தூரப்புலமானியின் கண்காணிப்பிலிருந்து வானூர்தி மறைந்தால் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். சமுத்திரங்களின் மீது பறக்கும் வானூர்திகளை தூரப்புலமானியால் அவதானிப்பது கடினம்.

அட்லான்டிக் சமுத்திரங்களைக் கடந்துவரும் பல வானூர்திகள் சிலநேரத்தில் தூரப்புலமானியின் கண்காணிப்பிலிருந்து விடுபடுவதால் எதிர் திசையிலிருந்து வரும் வானூர்திகளுடன், வர்த்தக வானூர்திகள் மோதி விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. சமுத்திரங்களின் மீது பறக்கும் வானூர்திகள் மோதிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு வானூர்திற்கும் 80 கடல்மைல் இடைவெளி இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.


                   மலிந்த விலை (Budget Carrier) வானூர்திப் பயணங்கள்

மலிந்த விலையில் வானூர்திப் பயணங்களை மேற்கொள்ளும் போது பல அசௌகரியங்களை எதிர்நோக்கவேண்டி வருகின்றது. நேரம் தவறாமை என்ற ஒழுங்குகள் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. பயணிகளை அதிகம் ஏற்றிச் செல்வதற்காக ஆசனங்கள் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். இங்கு விடப்படும் தவறுகள் காரணமாக கூடுதலான அளவு விபத்துக்கள் நிகழ்வது வழமையாகிவிட்டது.

                                              மனிதத் தவறுகள்

கட்டுப்பாட்டுக் கோபுரம் (Control Tower) கொடுக்கும் அறிவுறுத்தல்களை வானோடிகள் தவிர்ப்பதால் விபத்துக்கள் நிகழ்கின்றன. கட்டுப்பாட்டாளர்களின் தவறுகள், மாசடைந்த எரிபொருள், வானூர்திகள் முறையாகப் பராமரிக்கப்படாமை, அறிவித்தல்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றமை என்பன காரணமாகவும் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்கின்றன.

அத்துடன் பயணிகள் வானூர்தி பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் இருப்பதும் வானூர்தி விபத்துக்களுக்கும் மற்றும் விபத்துக்களின்போது நேரும் உயிர்ச்சேதங்களுக்கும் காரணமாகும். ஆசனப் பட்டிகளை அணியாமல் இருப்பது, இருக்கைகளை விட்டு எழுந்து விமானத்தில் உலாவுவது, போன்ற அநாவசியமான செயல்களால் சேதங்கள் அதிகளவில் நிகழ்கின்றன.


                                                                    சமர்கள்(Wars)

வானூர்திஙகள் தமது நாட்டு வான் பரப்பில் பறக்கும்போது சுட்டுவீழ்த்தப்படுவதாலும், வானூர்திக் கடத்தல்கள் மற்றும் குண்டுவைப்புகளாலும் சேதத்துக்குள்ளாகின்றன.

1988 ஜுலை 3ம் திகதி ஈரானியப் பயணிகள் வானூர்தி ஒன்று பாரசீக வளைகுடாவுக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்தபோது அமெரிக்கக் கடற்படைக்கலத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதனால் 290 பயணிகள் கொல்லப்பட்டனர். இதே ஆண்டில் அமெரிக்க வானூர்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து தரையில் வீழ்ந்ததால் தரையிலிருந்த 11 பேர் மற்றும் பயணிகள் 270 பேரும் உயிரிழந்தனர்.

Friday, March 15, 2013

வானூர்தி விபத்து - 01

வானூர்தி விபத்துக்கான காலநிலைக் காரணிகள்..........
  1. மின்னல்
  2. கொந்தளிப்பு நிலை
  3. புயல்
  4. பனிப்படிவுகள்

                                                      மின்னல்

மின்னல் தாக்கத்தினால் பல வானூர்திகள் வெடித்துச் சிதறியுள்ளன. 1963ம் ஆண்டில் அமெரிக்காவின் வானூர்தி ஒன்று மின்னல் தாக்கத்திற்குள்ளானதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். ரேடார் மற்றும் காலநிலை பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால் இடி, மின்னல் போன்றவற்றைத் தவிர்த்து செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 1980களின் முற்பகுதியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா Jet வானூர்தி ஒன்றை மின்னல்கள் நிறைந்த பகுதிக்குள் அனுப்பி சோதனை நடாத்தியதில் 45 நிமிடங்களில் 72 தடவைகள் அவ்வானூர்தி மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. இதன்மூலம் மின்னல் தாக்கம்தொடர்பாக பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டு அவை வானூர்தித் தயாரிப்பின்போது பிரயோகிக்கப்பட்டுகின்றன.

வர்த்தக வானூர்திகள் வருடத்திற்கு ஒரு தடவை வீதம் மின்னல் தாக்கத்திற்குள்ளாவதாக புளோரிடா பல்கழைக்கழகம் நடாத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பொதுவாக வானூர்தியின் இறக்கை முனைகள், வால், மூக்குப்பகுதி போன்ற பகுதிகளே மின்னல் தாக்கத்திற்குற்படுகின்றன. தற்போது நவீன வானூர்திகள் மின்னைக் கடத்தும் தன்மை குறைவாகவுள்ள உலோகப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.


                               கொந்தளிப்பு நிலை

பறந்துகொண்டிருக்கும் வானூர்திகள் எதிர்கொள்ளும் மற்றுமொரு அபாய நிலைதான் இது. வளிமண்டலத்தில் ஏற்படும் இத்தகைய கொந்தளிப்பு நிலைமையால் (Turbulence) வானூர்திப் பயணிகள் பெறும் பீதிக்குள்ளாகின்றனர். வளிமண்டல அமுக்க வித்தியாசம் காரணமாக இந்நிலை ஏற்படுகின்றது. இதனைக் கடந்துசெல்லும் போது வானூர்திகள் தட தட வென்று குலுங்கும் நிலை ஏற்படுகின்றது. கொந்தளிப்புகளை இலகுவில் கண்டறிய முடியாது. அவை திடீரென எதிர்பார்க்காத விதத்தில் நிகழ்கின்றன.

இந்நிலையினால் உயிர்ச்சேதங்கள் ஏற்படாதபோதிலும் வானூர்திப் பயணிகள் பலர் இதனால் காயமடைந்துள்ளனர். 1980 முதல் 2004 வரை அமெரிக்க வானூர்திகளில் இத்தகைய 198 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் 266 பேர்வரை கடுமையாகக் காயங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் அமெரிக்க வானூர்தி சேவைகள் நிர்வாகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


                                          புயல்

திடீரென்று உருவாகும் புயற் காற்றினாலும் வானூர்திகள் அலைக்கழிக்கப்படுகின்றன. இதனால் வானூர்திக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு விபத்துக்கள் நிகழ அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன. வானூர்திகளில் பொறுத்தப்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புயல் உருவாவதை முன்கூட்டியே அறிந்து அதற்குண்டானா நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. மோசமான வானிலை நிலவும் பகுதிகளைத் தவிர்த்துச் செல்வதற்காக வானிலை பற்றிய தகவல்கள் நிமிடத்திற்கு நிமிடம் வானூர்ததிக்கு அனுப்பப்படுகின்றன.


                                  பனிப்படிவுகள்

வானூர்தி இறக்கைகளில் குளிர்காலங்களில் படியும் பனிப்படடிவுகளால் பாரிய அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. கடும் குளிரான நீர்த்துளிகள் விமான இறக்கைகளில் ஒட்டிக்கொள்வதால் பனி தேங்குகின்றது. இறக்கைகளில் பனி அதிகளவில் தேங்குவது விமானம் மேலே எழும் தன்மையைப் பாதித்து அனர்த்தங்களுக்கு வழிவகுக்கலாம். பறக்கும்போது மட்டுமன்றி வானூர்தி நிலையங்ககளில் தரித்திருக்கும்போதும் பனி தேங்குவற்கு வாய்ப்புள்ளது. சிறிய வானூர்திகளின் உட்புறத்திலும் பனி உருவாகி இதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

1982 முதல் 2000 ஆம் ஆண்டுவரை 819 பேர் வானூர்திகளின் உட்புறத்தில் ஏற்படும் பனி காரணமாக இறந்துள்ளதாக அமெரிக்காவி
ன் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கிறது. பனிபடிவதைப் தடுப்பதற்காக வானூர்திகள் பறப்பதற்கு முன்னர் ஒருவகைப் பதார்த்தம் பூசப்படுகின்றது.

Saturday, March 9, 2013

நெகிழிக் கழிவு வானூர்தி.


பொதுவாக வானூர்திகள் gasoline மற்றும் kerosene போன்ற உயர் ரக பெட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் உயிரியல் (aviation biofuel) எரிபொருட்கள், சமையல் எண்ணை மற்றும் கழிவு எண்ணை மூலமும் இயக்கப்படுகின்றன. ஆனால் முதன் முதலாக நெகிழிக் (plastic) கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் டீசல் மூலம் வானூர்தியை இயக்க ஒரு வானோடி திட்டமிட்டுள்ளார். அவர் 41 வயதான (Jeremy Rowsell) ஜெரிமி ரவுசல் என்பவர். 


இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். எதற்கும் பயன்படாத மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழிக் கழிவில் இருந்து டீசல் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக 5 தொன் நெகிழிக் கழிவுப் பொருட்களை பல நாடுகளில் இருந்து சேகரித்துள்ளார்.

அதில் இருந்து 1000 கலன் டீசல் தயாரிக்கிறார். அயர்லாந்தில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனம் pyrolysis என்ற இரசாயனத்தைப் பபயன்படுதி நெகிழிக் கழிவுகளிருந்து வானூர்திக்கான டீசலை உற்பத்தி செய்து ஜெரிமி ரவுசலுக்கு வழங்க தீர்மானித்துள்ளது. 


அதன் மூலம் வருகிற ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு Cessna 172 என்ற வானூர்தியை இயக்க உள்ளார். அதன் தூரம் 16,898 கி.மீட்டர் ஆகும்.

Wednesday, March 6, 2013

நிஞ்சா வானூர்தி.



அதிரடியாக செயல்படக் கூடிய, தூரப்புலமானிகளுக்கு அகப்படாமல் தப்பிக்கக்கூடிய, விரும்பும் பக்கத்தில் திரும்பக்கூடிய வித்தியாசமான வடிவத்தைக் கொண்ட நவீன வானூர்தி தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் புளோரிடா (Florida State University aerospace engineer) பல்கலைக்கழக பேராசிரியர் Ge-Chen Zha கண்டுபிடித்துள்ளார்.


இதை மேலும் மேம்படுத்துவதற்காக அமெரிக்க டொலர் 1 லட்சத்தை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் (Nasa) ஒதுக்கீடு செய்துள்ளது. சாதாரண வானூர்திளுக்கு இறக்கைகள் பெரிதாக இருக்கும். இதில் இருக்கும் காற்றாடிகள் சுழலும்போதுதான் வானூர்திக்கு அதிக உந்துசக்தி கிடைத்து வானில் பறக்க முடிகிறது. போர் விமானங்களில் உந்து சக்தி தாரை (turbo engine) இயந்திரங்கள் மூலம் கிடைக்கின்றன.

இந்நிலையில், நிஞ்சா வீரனைபோல் அதிரடியாக செயல்படக்கூடிய அதிநவீன வானூர்தியை அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Ge-Chen Zha குழுவினர் தயாரித்துள்ளனர். இந்த வானூர்தி சாதாரண வானூர்திகளைப் போலவே தரையில் இருந்து மேலே எழும்பிச் செல்லும். ஆனால், வானத்தில் பறக்க ஆரம்பித்தவுடன் அதன் இறக்கைகள் பக்கவாட்டில் விரிந்து கொள்ளும், அதாவது நிஞ்சா வீரர்கள், எதிரியை பார்க்கும்போது, தங்களுடைய கைகளை அகலமாக விரிப்பார்கள். அப்போது அவர்களின் ஆடையும் பக்கவாட்டில் விரியும். அது பார்ப்பதற்கு, பிரம்மாண்டமான தோற்றத்தை தரும்.


இதேபோல் இந்த வானூர்தியின் இறக்கைகளும் பக்கவாட்டில் விரியும். தரையில் நீளமாக இருக்கும் இந்த வானூர்தி, ஆகாயத்தில் பறக்கத் தொடங்கும்போது அகலமாக தெரியும். இறக்கைகள் விரிந்தவுடன், Supersonic என்ற ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சக்தி கிடைக்கும். இதன் மூலம் மிக உயரமாக பறக்க முடியும். மேலும், இந்த வானூர்தி ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, சடாரென 90 பாகை வரையில் திரும்ப முடியும்.

இத்தொழில்நுட்பத்தில் வானூர்தி தயாரிக்கப்பட்டால், அது எப்படி பறக்கும் என்பது குறித்து விளக்கும் அனிமேஷன் காணொளி காட்சிகளை, பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.



இதன் சிறப்பம்சங்கள்....
  1. 70 பயணிகளுடன் பயணிக்கக் கூடியது.
  2. ஒலியை விட இரு மடங்கு வேகத்துடன் பயணிக்கக் கூடியது.
  3. தொடர்சியாக 4,000 மைல் பயணிக்கக் கூடியது.
  4. இதன் இறக்கை அமைப்பு Supersonic Bi-Directional Flying Wing என்று அழைக்கப்படுகிறது.