பழமொழி.....

Monday, May 26, 2014

இன்மசெட் (Inmarsat)......

  

உலகிலுள்ள அனைத்து பயணிகள் வானூர்திகளுக்கும் அடிப்படையான ஒரு பாதை அறிவிப்பு சேவையை இலவசமாக வழங்க பிரிட்டனின் செயற்கைக்கோள் வலயமைப்பு நிறுவனமான இன்மசெட் (Inmarsat) முன்வந்துள்ளது.


மலேசிய வானூர்தி MH370 கடந்த மார்ச் எட்டாம் தேதி சுவடே இல்லாமல் காணாமல்போனதை அடுத்து இன்மசெட் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளது. மலேசிய வானூர்தியில் இருந்த இன்மசெட் கருவியில் இருந்து சற்று நேரம் வந்த மின் அலை ஒலிச் சமிக்ஞைகளைக் கொண்டுதான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதன் எச்சங்களைத் தேட நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்நிலையில் பறக்கும் வானூர்திகள் இருக்கும் இடம் பற்றி துல்லியமாக தகவல் வழங்கக்கூடிய இலவச சேவை ஒன்றை வழங்க இன்மசெட் முன்வந்துள்ளது.

பறக்கின்ற ஒரு வானூர்தி தான் இருக்கும் இடத்தை செயற்கைக்கோள் துணைகொண்டு அறிந்து அந்த விவரத்தையும் அது பயணிக்கும் வேகம், உயரம் பற்றிய தகவலை இன்மசெட்டின் உலகலாவிய செயற்கைக்கோள் கட்டமைப்புக்கு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை அனுப்பிக்கொண்டிக்கும் வகையிலான கட்டமைப்பு இது.

  "உலகிலுள்ள அகலமான வானூர்திகளில் தொண்ணூறு சதவீதமானவற்றில் இன்மசெட்டின் கருவி ஏற்கனவே இருக்கிறது. எனவே எவ்வித செல்வும் இல்லாமல் வானூர்திப் போக்குவரத்துத்துறை உடனடியாக தீர்வு காண்பதற்கான வழி இதுதான்" என இன்மர்சாட்டின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ் மெக்லவ்லின் பிபிசியிடம் தெரிவித்தார்.

சேட்டிலைட் டிராக்கிங் என்று சொல்லப்படுகின்ற செயற்கைக்கோள் மூலமாக பாதையை அறிவிக்கும் முறையை வானூர்தி நிறுவனங்கள் பயன்படுத்த தயங்குவது பெரும்பாலும் அது அதிக செலவாகும் என்பதால்தான்.
 
  வானூர்திகள் பறக்கும் இடத்தை அறிவதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்காக சர்வதேச சிவில் வானூர்திப் பயண நிர்வாக அமைப்பான ICAOவின் ஏற்பாட்டில் கனடாவின் மோண்ட்ரியல் நகரில் மாநாடு ஒன்று ஆரம்பிக்கவிருப்பதற்கு முன்பாக பிரிட்டிஷ் நிறுவனமான இன்மர்சாட் இந்த அறிவிப்பை செய்துள்ளது.

 மலேசிய வானூர்தி காணாமல் போன பின்னணியில் உலக வானூர்திப் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை ICAOவும் சர்வதேச வானூர்தி போக்குவரத்து சங்கமான IATA வும் பரிசீலித்து வருகின்றன.

போயிங் 777 ரகத்திலான பெரிய வானூர்தி ஒன்று இப்படி மறைந்து போனது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஒரு வானூர்தியினை அடையாளம் காட்டக்கூடிய கருவிகள் அதன் உள்ளிருந்தே நிறுத்தப்படலாம் என்பதும், பூமியில் உள்ள ராடார்களின் வீச்சை விட்டு நகர்ந்து விட்டால், ஒரு வானூர்தியின் இடம் பற்றி கண்டறிய வழியில்லாமல் இருப்பதும் பலருக்கும் ஏற்க முடியாத விஷயமாக இருக்கிறது.

 இப்படியான சூழ்நிலையில், இன்மர்சாட் வழங்க முன்வந்திருக்கும் சேவை பறக்கும் வானூர்தியின்  இடத்தை எப்போது வேண்டுமானாலும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் என்றால், அது நிச்சயம் வானூர்திப் போக்குவதத்துக்கு துறைக்கு பெரிய உதவியாக அமையும் எனக் கூறலாம்.







Monday, May 19, 2014

E -Fan வானூர்தி...


உலகில் முதல் முறையாக மின்கலம் (Electric battery) மூலம் இயங்கும் வானூர்தி வெற்றிகரமாக வானத்தில் பறக்கவைத்து, சோதனை செய்து பார்க்கப்பட்டதாக அதனை உருவாக்கியுள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "ஏர்பஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் உள்ள பிரச்சினைகளில் ஒன்றாக மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் சூரிய ஒளி, காற்று, கடல் அலை போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் மின்சாரத்தால் பறக்க கூடிய ஒரு குட்டி வானூர்தியை தயாரித்துள்ளது. அதற்கு E-Fan என பெயரிடப்பட்டுள்ளது.




பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கிலுள்ள போர்டாக்ஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள வானூர்தி நிலையத்தில் E-Fan என்று அழைக்கப்படக்கூடிய இந்த சிறிய ரக வானூர்தி கடந்த மாத இறுதியில் 10 நிமிடங்கள் பறக்கவைக்கப்பட்டு, சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த வானூர்தியானது சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய, சப்தமில்லாத மற்றும் விலைகுறைவான வானூர்தி பயணத்தை தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 19 அடியாகும். மின்சாரத்தை சேமிக்கும் விதமாக இதில் லித்தியம் தாது மற்றும் இரும்பு அடங்கிய சுமார் 120 மின்கலங்கள் பொருத்தப்பட்டிருந்தன.






ஒருமுறை இந்த மின்கலங்களை முழுவதுமாக மின்னேற்றினால் செய்தால், 1 மணி நேரம் வானூர்தி பறக்கக்கூடிய ஆற்றலைப் பெறும்.இவ் வானூர்தி மொத்தமே 19 அடி நீளமே உள்ளது. அதில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதிநவீன தொழில்நுட்பத்தினால் ஆன இந்த வானூர்தியின் சோதனை ஓட்டம் தென் மேற்கு பிரான்சில் உள்ள போர்டியாஸ் விமான நிலையம் அருகே நடந்தது.

அப்போது இந்த வானூர்தி சுமார் ஒரு மணி நேரம் பறந்து சாதனை படைத்தது. கடந்த மாதம் நடந்த சோதனை ஓட்டத்தில் 10 நிமிட நேரம் மட்டுமே பறந்தது. தற்போது நடந்த சோதனை ஓட்டம் மூலம்

பெரிய அளவில் ஆன வானூர்தியைத் தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.



E-Fan வரிசையில் E-Fan 2.0 மற்றும் E-Fan 4.0 என்ற 2 வகையான வானூர்திகளை Airbus நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.