பழமொழி.....

Wednesday, December 3, 2014

MQ-4C Triton Unmanned Aircraft System...



 அமெரிக்கா MQ-4C Triton unmanned aircraft system  என்னும் ஆளில்லாப் போர்வானூர்திகள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர்.  அமெரிக்கா உருவாக்கும்  இவ் வகை ஆளில்லாப் போர் வானூர்திகள் தற்போது கடற்படையின் பாவனையில் உள்ள ராடார்கள், சோனார்கள், அல்லது வானோடிகள்  ஓட்டும் வானூர்திகள் செய்வதைவிட, பல மடங்கு உபயோகமானது. MQ-4C வானூர்தி அமெரிக்காவின் Boeing P-8 Poseidon என்னும் வானோடிகள்  ஓட்டும் கண்காணிப்பு வானூர்திகளுடன் இணைந்து செயற்படக் கூடியவை.


உலகின் அதி உயரம் பறக்கும் இவ் ஆளில்லாப் போர் வானூர்திகள் 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்டு உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும்  மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும்.




2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் MQ-4C Triton ஆளில்லா வானூர்திகள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை. இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போது வெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்க முடியும்.


 
வானில் பறந்தபடியே ஒரு flying communications relay station ஆக இயங்கும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால், கடலுக்கு மேல் எடுக்கும் படங்களையும், வீடியோக்களையும் கப்பல்களுக்கு நேரடியாக அனுப்புவதுடன், இரு கப்பல்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களையும் இந்த வானூர்திகள் செய்து கொடுக்க முடியும்.

 

50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical / infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களூடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும்.

2014 ஒக்டோபர் மாதம் செய்யப்பட்ட இரண்டாவது பரீட்சார்த்த பறப்புக்கள் மிகவும் சிறப்பாக அமைந்ததாக அமெரிக்கக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.