பழமொழி.....

Thursday, May 14, 2015

Greased Lightning........



மின்கலத்தில் கிடைக்கும் மின்சாரத்தின் சக்தியைக் கொண்டு இயங்கும் 10 இயந்திரங்கள் கொண்ட நாசாவின் புதிய வானூர்தியின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.


ஒரு வானூர்தியின் சக்தியைக் கொண்ட Greased Lightning அல்லது GL-10 என்று அழைக்கப்படும் இந்த வானூர்தி ஒரு உலங்குவானூர்தியைப் போல் மேல் கிளம்பி, தரையிறங்கும் vertical takeoff and landing (VTOL) அத்துடன் பறக்கும் போது வானூர்தியைப் போல் பறக்கும்.


இவ் ஆளில்லா வானூர்தி பல்வேறு சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாக ஹாம்டனில் உள்ள நாசா மையத்தின் விண்வெளி பொறியாளர் பில் அறிவித்துள்ளார். This Unmanned Air Vehicle (UAV) has a wingspan of 20 ft (6.1 m), a dry weight of 55 lb (24.9 kg), and a takeoff weight of 62 lb (28.1 kg).


இந்த வானூர்தி குறித்து பில் கூறுகையில் “சிறிய பொருட்களை இடம் மாற்றம் செய்ய இந்த வானூர்தி உதவும். மற்றும் விவசாயத்தை நீண்டநேரம் கண்காணிப்பது, உளவு, தனி நபர் உபயோகம் என்று பல வகையில் இந்த வானூர்தி பயன்படும்” என்றார்.


Thursday, April 16, 2015

PAK TA....

7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்க தயாராகும் அதிநவீன ரஷ்ய விமானம்.


 அமெரிக்காவின் வல்லாதிக்க கனவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்துவரும் ரஷ்யா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

உக்ரைன் நாட்டை உடைத்து வெகு சாதுர்யமாக கிரிமியாவை பிரித்து தனிநாடாக்கி, தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் அரசியல் ராஜதந்திரத்தை கண்டு உலக நாடுகள் அசந்துப்போய் வாயடைத்து நிற்கும் வேளையில் எதிர்கால போர் யுத்திகள் தொடர்பாகவும், போர்க்காலங்களை எதிர்கொள்ள வேண்டிய எதிர்கால அணுகுமுறைகள் தொடர்பாகவும் ரஷ்ய ராணுவம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துள்ளது.


அந்த சிந்தனையின் விளைவாக, ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த மூலைக்கும் ஆயுதங்களையும், ராணுவ டாங்கிகளையும், காலாட்படைகளையும் அனுப்பி வைக்கும் ராட்சத சக்தி கொண்ட அதிநவீன வானூர்தியை  தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

‘PAK TA’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் இந்த வானூர்தி ராணுவ பயன்பாட்டிற்கான விசேஷ அம்சங்களுடன் தயாரிக்கப்பட உள்ளது. ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை விரைவாக கொண்டு சேர்க்கும் வல்லமை கொண்ட இவ்வானூர்தி 400 ராணுவ டாங்கிகளையும், அவற்றுக்கு தேவையான வெடிப் பொருட்களையும் ஒரே வேளையில் சுமந்து கொண்டு ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் சென்றடைந்து விடும்.


இந்த வானூர்தியை பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைபிரிட் நுட்பம் கொண்ட வானூர்தியாக இதனை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனாலும், இந்த பிரம்மாண்ட வானூர்தியில் பேட்டரிகள் மற்றும் மின்மோட்டார்களில் இயங்கும் தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்துவதில் கடும் சவால்கள் உள்ளன.

மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வழியில் எங்கும் நிற்காமல் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையில் பறக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த வானூர்தி, 200 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதாக இருக்கும். 

இந்த வானூர்திக்குள் ஏராளமான அர்மதா டாங்கிகளையும், அதற்குண்டான வெடிப்பொருட்களையும் எடுத்துச் செல்ல முடியும். வரும் 2024ம் ஆண்டில் இந்த வானூர்தி தயாரிப்பு நிறைவடைந்து அறிமுகம் செய்யப்படும்.

எதிரி நாடுகளால் இருக்கும் அச்சுறுத்தலை குறைத்துக் கொள்ளும் விதத்தில், இந்த இராணுவ வானூர்தி திட்டத்தை ரஷ்யா கையிலெடுத்துள்ளது. மேலும், உலகின் எந்த ஒரு மூலையிலும், சில மணிநேரத்தில் தற்காலிக ராணுவ தளத்தை அமைக்கும் விதத்தில் இந்த வானூர்தியை தயாரிக்க அந்நாடு திட்டமிட்டிருக்கிறது.


Wednesday, December 3, 2014

MQ-4C Triton Unmanned Aircraft System...



 அமெரிக்கா MQ-4C Triton unmanned aircraft system  என்னும் ஆளில்லாப் போர்வானூர்திகள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர்.  அமெரிக்கா உருவாக்கும்  இவ் வகை ஆளில்லாப் போர் வானூர்திகள் தற்போது கடற்படையின் பாவனையில் உள்ள ராடார்கள், சோனார்கள், அல்லது வானோடிகள்  ஓட்டும் வானூர்திகள் செய்வதைவிட, பல மடங்கு உபயோகமானது. MQ-4C வானூர்தி அமெரிக்காவின் Boeing P-8 Poseidon என்னும் வானோடிகள்  ஓட்டும் கண்காணிப்பு வானூர்திகளுடன் இணைந்து செயற்படக் கூடியவை.


உலகின் அதி உயரம் பறக்கும் இவ் ஆளில்லாப் போர் வானூர்திகள் 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்டு உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும்  மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும்.




2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் MQ-4C Triton ஆளில்லா வானூர்திகள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை. இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போது வெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்க முடியும்.


 
வானில் பறந்தபடியே ஒரு flying communications relay station ஆக இயங்கும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால், கடலுக்கு மேல் எடுக்கும் படங்களையும், வீடியோக்களையும் கப்பல்களுக்கு நேரடியாக அனுப்புவதுடன், இரு கப்பல்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களையும் இந்த வானூர்திகள் செய்து கொடுக்க முடியும்.

 

50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical / infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களூடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும்.

2014 ஒக்டோபர் மாதம் செய்யப்பட்ட இரண்டாவது பரீட்சார்த்த பறப்புக்கள் மிகவும் சிறப்பாக அமைந்ததாக அமெரிக்கக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.





Monday, May 26, 2014

இன்மசெட் (Inmarsat)......

  

உலகிலுள்ள அனைத்து பயணிகள் வானூர்திகளுக்கும் அடிப்படையான ஒரு பாதை அறிவிப்பு சேவையை இலவசமாக வழங்க பிரிட்டனின் செயற்கைக்கோள் வலயமைப்பு நிறுவனமான இன்மசெட் (Inmarsat) முன்வந்துள்ளது.


மலேசிய வானூர்தி MH370 கடந்த மார்ச் எட்டாம் தேதி சுவடே இல்லாமல் காணாமல்போனதை அடுத்து இன்மசெட் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளது. மலேசிய வானூர்தியில் இருந்த இன்மசெட் கருவியில் இருந்து சற்று நேரம் வந்த மின் அலை ஒலிச் சமிக்ஞைகளைக் கொண்டுதான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதன் எச்சங்களைத் தேட நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்நிலையில் பறக்கும் வானூர்திகள் இருக்கும் இடம் பற்றி துல்லியமாக தகவல் வழங்கக்கூடிய இலவச சேவை ஒன்றை வழங்க இன்மசெட் முன்வந்துள்ளது.

பறக்கின்ற ஒரு வானூர்தி தான் இருக்கும் இடத்தை செயற்கைக்கோள் துணைகொண்டு அறிந்து அந்த விவரத்தையும் அது பயணிக்கும் வேகம், உயரம் பற்றிய தகவலை இன்மசெட்டின் உலகலாவிய செயற்கைக்கோள் கட்டமைப்புக்கு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை அனுப்பிக்கொண்டிக்கும் வகையிலான கட்டமைப்பு இது.

  "உலகிலுள்ள அகலமான வானூர்திகளில் தொண்ணூறு சதவீதமானவற்றில் இன்மசெட்டின் கருவி ஏற்கனவே இருக்கிறது. எனவே எவ்வித செல்வும் இல்லாமல் வானூர்திப் போக்குவரத்துத்துறை உடனடியாக தீர்வு காண்பதற்கான வழி இதுதான்" என இன்மர்சாட்டின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ் மெக்லவ்லின் பிபிசியிடம் தெரிவித்தார்.

சேட்டிலைட் டிராக்கிங் என்று சொல்லப்படுகின்ற செயற்கைக்கோள் மூலமாக பாதையை அறிவிக்கும் முறையை வானூர்தி நிறுவனங்கள் பயன்படுத்த தயங்குவது பெரும்பாலும் அது அதிக செலவாகும் என்பதால்தான்.
 
  வானூர்திகள் பறக்கும் இடத்தை அறிவதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்காக சர்வதேச சிவில் வானூர்திப் பயண நிர்வாக அமைப்பான ICAOவின் ஏற்பாட்டில் கனடாவின் மோண்ட்ரியல் நகரில் மாநாடு ஒன்று ஆரம்பிக்கவிருப்பதற்கு முன்பாக பிரிட்டிஷ் நிறுவனமான இன்மர்சாட் இந்த அறிவிப்பை செய்துள்ளது.

 மலேசிய வானூர்தி காணாமல் போன பின்னணியில் உலக வானூர்திப் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை ICAOவும் சர்வதேச வானூர்தி போக்குவரத்து சங்கமான IATA வும் பரிசீலித்து வருகின்றன.

போயிங் 777 ரகத்திலான பெரிய வானூர்தி ஒன்று இப்படி மறைந்து போனது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஒரு வானூர்தியினை அடையாளம் காட்டக்கூடிய கருவிகள் அதன் உள்ளிருந்தே நிறுத்தப்படலாம் என்பதும், பூமியில் உள்ள ராடார்களின் வீச்சை விட்டு நகர்ந்து விட்டால், ஒரு வானூர்தியின் இடம் பற்றி கண்டறிய வழியில்லாமல் இருப்பதும் பலருக்கும் ஏற்க முடியாத விஷயமாக இருக்கிறது.

 இப்படியான சூழ்நிலையில், இன்மர்சாட் வழங்க முன்வந்திருக்கும் சேவை பறக்கும் வானூர்தியின்  இடத்தை எப்போது வேண்டுமானாலும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் என்றால், அது நிச்சயம் வானூர்திப் போக்குவதத்துக்கு துறைக்கு பெரிய உதவியாக அமையும் எனக் கூறலாம்.







Monday, May 19, 2014

E -Fan வானூர்தி...


உலகில் முதல் முறையாக மின்கலம் (Electric battery) மூலம் இயங்கும் வானூர்தி வெற்றிகரமாக வானத்தில் பறக்கவைத்து, சோதனை செய்து பார்க்கப்பட்டதாக அதனை உருவாக்கியுள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "ஏர்பஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் உள்ள பிரச்சினைகளில் ஒன்றாக மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் சூரிய ஒளி, காற்று, கடல் அலை போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் மின்சாரத்தால் பறக்க கூடிய ஒரு குட்டி வானூர்தியை தயாரித்துள்ளது. அதற்கு E-Fan என பெயரிடப்பட்டுள்ளது.




பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கிலுள்ள போர்டாக்ஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள வானூர்தி நிலையத்தில் E-Fan என்று அழைக்கப்படக்கூடிய இந்த சிறிய ரக வானூர்தி கடந்த மாத இறுதியில் 10 நிமிடங்கள் பறக்கவைக்கப்பட்டு, சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த வானூர்தியானது சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய, சப்தமில்லாத மற்றும் விலைகுறைவான வானூர்தி பயணத்தை தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 19 அடியாகும். மின்சாரத்தை சேமிக்கும் விதமாக இதில் லித்தியம் தாது மற்றும் இரும்பு அடங்கிய சுமார் 120 மின்கலங்கள் பொருத்தப்பட்டிருந்தன.






ஒருமுறை இந்த மின்கலங்களை முழுவதுமாக மின்னேற்றினால் செய்தால், 1 மணி நேரம் வானூர்தி பறக்கக்கூடிய ஆற்றலைப் பெறும்.இவ் வானூர்தி மொத்தமே 19 அடி நீளமே உள்ளது. அதில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதிநவீன தொழில்நுட்பத்தினால் ஆன இந்த வானூர்தியின் சோதனை ஓட்டம் தென் மேற்கு பிரான்சில் உள்ள போர்டியாஸ் விமான நிலையம் அருகே நடந்தது.

அப்போது இந்த வானூர்தி சுமார் ஒரு மணி நேரம் பறந்து சாதனை படைத்தது. கடந்த மாதம் நடந்த சோதனை ஓட்டத்தில் 10 நிமிட நேரம் மட்டுமே பறந்தது. தற்போது நடந்த சோதனை ஓட்டம் மூலம்

பெரிய அளவில் ஆன வானூர்தியைத் தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.



E-Fan வரிசையில் E-Fan 2.0 மற்றும் E-Fan 4.0 என்ற 2 வகையான வானூர்திகளை Airbus நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

Thursday, March 27, 2014

தொலைந்த MH 370..




மலேசியா எயர்லைன்ஸ் விமானம் MH 370 என்பது ( MH 370 மற்றும் Codeshare உடன்படிக்கை மூலம் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ 748) 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரோடு காணாமல் போன போயிங் 777 வகை விமானம் ஆகும்.

மலேசியா எயர்லைன்க்கு சொந்தமான போயிங் 777 வகை விமானங்களில் அதிக சேதம் விளைவித்ததும், உலகின் போயிங் 777 வகை விமானத்தினால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதும் இந்த நிகழ்வாகத் தான் இருக்கும். போயிங் 777 வகை விமானம் இத்தகைய மீட்கமுடியா விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.



மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 8 மார்ச் 2014 இவ் விமானம் புறப்பட்டது.
இது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.

கோலாலம்பூரில் ஆரம்பித்த இதன் பயணம் அந்தமான் கடல், தாய்லாந்து வளைகுடா, மலாக்கா நீரிணை, தென் சீனக் கடல் மூலம் பெய்ஜிங்கை சென்றடைந்திருக்க வேண்டும்.



அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்சு, மலேசியா சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய கடற்படையினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடும் பணியில் இந்தியாவும் இணைந்து இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 விமானங்கள் அந்தமான் கடலில் தேடுதல் பணியைத் தொடங்கின. இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் சுமார் 35,000 சதுர கி. மீட்டர் பரப்பளவுக்கு விமானத்தைத் தேடி வந்தன. தேடும் பணிகள், ஏழாவது நாளில் இந்தியப் பெருங்கடலுக்கு விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் தேடுதல் பணிகளை மத்திய மற்றும் கிழக்கு வங்காள விரிகுடாவில் தீவிரப்படுத்தியது. சுமத்ராவிலிருந்து தெற்கு இந்தியப் பெருங்கடல்வரை தேடும் பணிகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகள் முன்னெடுத்து வந்தன. லாவோசிலிருந்து காப்சியன் கடல்வரை தேடும் பணிகளில் சீனாவும் கசகஸ்தானும் முன்னெடுத்து வந்தன.

இவ்விமானத்தின் பொறுப்பாளர் (captain) சாகிரே அக்மத் ஷா ஆவார். 53 வயதான இவர் மலேசியாவை சேர்த்தவர் 1981இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்த இவர் 18,365 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர். முதல் அதிகாரியான (first officer) இபரிக் அப்துல் அகமதுவும் மலேசியாவை சேர்த்தவர். 12 பணிக்குழுவினரும் மலேசியராவர்.



                               9M-MRO விமானத்தின் கட்டுப்பாட்டு அறை



விமானத்தின் விவரங்கள்..
  1. வகை                      : போயிங் 777 – 2H6ER
  2. வரிசை எண்           : 28420
  3. பதிவு எண்              : 9M-MRO
  4. தயாரிப்பு விவரம்  : போயிங் 777 வகையில் 404ஆவது விமானம்
  5. முதல்முறையாக பறந்த நாள்  : 14 மே 2002
  6.  விற்கப்பட்ட நாள்                      : 31 மே 2002
  7.  இயந்திரங்கள்                            : இரண்டு Rolls-Royce Trent 892
  8. விமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282 (35 வர்த்தக வகுப்பு, 247 சாதாரண வகுப்பு)

இந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதற்க்கான காரணத்தை ஆராய்ந்த அந்த நாட்டின் உளவுத்துறை partial ping தகவலை காரணம் காட்டியுள்ளது. இந்த Pinging என்பது விமானத்திற்க்கும் செயற்க்கைக்கோளுக்குமான தொடர்பு ஆகும். மணிகொரு தடவை விமானம், ‘நான் இருக்கிறேன்’ என்று விமானம் செய்மதி மூலம் காட்டிக் கொள்ளும்........



Thursday, February 27, 2014

S-512 Spike Aerospace..

மிகவிரைவாக செல்லும் புதிய வானூர்திகளை தயாரிக்கும் நிறுவனமான ஸ்பைக் ஏரோஸ்பேஸ்(Spike Aerospace) தனது வானூர்தியில் கண்ணாடிகளுக்கு பதிலாக முழுஅளவிலான திரைகள் அமையும் என தெரிவித்துள்ளது. கண்ணாடிகள் இல்லாமல் செய்வதன் மூலம் வானூர்தியின் திறன் அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



2018ம் ஆண்டளவில் S-512 எனபெயரிடப்பட்டுள்ள இந்த வானூர்தி அறிமுகப்படுத்தபடும் என எதிர்பார்க்கபடுகிறது. கண்ணாடிகள் மேலதிகமான அமைப்புகளையும் நிறையையும் அதிகரிக்கின்றன, அதை நுன் நிழற்படக்கருவி (micro camera) மற்றும் திரைகள் மூலமாக பிரதியீடு செய்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. பொஸ்டனில் இருந்து இயக்கும் இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் இதைபற்றி அறிமுகப்படுத்தியது. இதுவே முதல் வியாபார மீயொலி ஜெட் வானூர்தியாக (supersonic Business Jet) அமையும்.





கிட்டத்தட்ட 80 மில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள இந்த வானூர்தி 18பேரை ஏற்றிச்செல்லக்கூடியது.1.6 மக் (Mach) (மணித்தியாலத்திற்கு 1800 கிலோ மீற்றர்கள் அல்லது 1100 மைல்கள்) வேகத்தில் செல்லக்கூடிய இந்த வானூர்தி ஆகக்கூடிய வேகமாக 1.8 வரை செல்லும். தற்போது பாவனையில் உள்ள வானூர்தியான போயிங் 777-300 0.8மக் வரையே செல்லும். நியுயோர்கில் இருந்து லண்டன் செல்ல 3-4 மணித்தியாலங்களே எடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தத் தூரத்தைக் கடக்க 6-7 மணித்தியாலங்கள் எடுக்கிறது. இந்த வானூர்தி 131 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்டது. 2 இயந்திரங்களைக் கொண்ட இதன் பறப்பு எல்லை 6500 கிலோ மீற்றர்கள் (4000 மைல்கள்) ஆகும்.




 

Saturday, November 9, 2013

RQ-4 GLOBAL HAWK....


எதிரி நாடுகளை வேவு பார்ப்பது என்பது பாதுகாப்பு உத்திகளுள் மிக முக்கியமான ஒன்று. ஒற்றர்கள் மூலமாக மட்டுமே எல்லாவற்றையும் வேவு பார்த்துவிடமுடியாது. ஒற்றர்கள் நுழைய முடியாத இடத்திலும் தொழில்நுட்பம் நுழைந்து விடுகிறது.

உலக நாடுகள் அனைத்தையும் தனது ஆயுத பலத்தால் கட்டி வைத்திருக்கும் அமெரிக்காவின் அதி நவீன கண்காணிப்பு வானூர்திகளுள் ஒன்று RQ-4 GLOBAL HAWK எனப்படும் இந்த ஆளில்லா வானூர்தி. பயணிகள் வானூர்திகளைக் காட்டிலும் 2 மடங்கு உயரத்தில் பறந்தபடி, ஒரே நாளில் சுமார் 40000 சதுர மைல் பரப்பைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டது இந்த வானூர்தி.


ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் உலகின் மேற்பரப்பில் பாதியைச் சுற்றி வந்துவிடலாம். எவ்வளவு அடர்த்தியான மேக மூட்டம் இருந்தாலும் பூமியில் நடப்பவற்றைத் கண்காணிக்கும் திறன் இந்த ஆளில்லா வானூர்திக்கு உண்டு. இந்தத் திறன்கள் காரணமாக, எதிரி நாட்டின் வான் எல்லைக்குள் செல்லாமலேயே அந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் நேரலையாக அமெரிக்காவில் உள்ள பென்டகனுக்கு அனுப்பிவிடும்.

இந்த வானூர்தியின் உயரம் 15 அடி, நீளம் 48 அடி. சிறகுப் பகுதியின் அகலம் 132 அடி. இந்த வானூர்தியில் 1360 கிலோ எடை கொண்ட மின்னணுக் கருவிகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த வானூர்தி பற்றிய முக்கியமான பல தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.


அண்மைக்கால மதிப்புப்படி, ஒரு RQ-4 GLOBAL HAWK வானூர்தியைத் தயாரிப்பதற்கு ஆகும் செலவு மட்டும் சுமார் 5000 கோடி ரூபாய். அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இது போன்ற 45 வானூர்திகளைப் பயன்படுத்தி வருகின்றன.

போர்க்காலங்கள், ஆய்வுப் பணி, உளவு பார்ப்பது தவிர, அணுஉலை வெடிப்பு, கலிபோர்னியா காட்டுத் தீ உள்ளிட்ட பேரிடர்க் காலங்களிலும் இந்த வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் நேட்டோ நாடுகள் சார்பில் இதுபோன்ற 5 வானூர்திகள் வாங்கப்பட்டுள்ளன.


தற்போது தென் கொரியாவும் ஒரு வானூர்தியை வாங்க முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதையும் ஒரே நேரத்தில் பார்க்கும் அமெரிக்காவின் கண்கள் என்றே இந்த ஆளில்லா வானூர்திகளைக் கூறலாம்.



Thursday, October 31, 2013

விண்வெளியில் VIRGIN ATLANTIC...


VIRGIN ATLANTIC நிறுவனம் விண்வெளிக்கு செல்வதற்கு விசேட வானூர்தியை வடிவமைத்து அதனை வெள்ளோட்டம் விடவும் தயாராகிவிட்டது. VIRGIN ATLANTIC நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சாட் பிரான்சன் அவர்கள் இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பூமிக்கு வெளியே இவ் வானூர்தி பறப்பில் ஈடுபட்டு பின்னர் பூமியை வந்தடையும் எனவும் மிகவும் பாதுகாப்பாகவும் நேர்த்தியாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளியில் செல்லும் இவ்வானூர்தியில் இருந்து பூமியின் பூகோளத்தை அவதானிக்க முடிவதோடு, முதல் முறையாக புவி ஈர்ப்பு சக்தியற்ற அண்டவெளியில் நாம் மிதக்கும் அனுபவமும் எமக்குக் கிடைக்கும். ஆசனப் பட்டிகளை விலக்கி, வானூர்தியினுள் மிதக்கவும் முடியும். 


VIRGIN ATLANTIC நிறுவனதின் திட்டப்படி, இந்த விண்வெளி சுற்றுலா என்பது இரண்டு கட்டப் பயணம். ஒன்று White Knight Two எனப்படுகிறது. இது விண்வெளியில் பறக்காது. மற்றது SpaceShipTwo எனப்படும் இன்னொரு குட்டி வானூர்தி. White Knight Two இன் கீழ்ப் பகுதியில் SpaceShipTwo பொருத்தப்பட்டிருக்கும். விண்வெளி சுற்றுலா போகும் பயணிகள், SpaceShipTwo இல் தான் இருப்பார்கள். பயணிகளோடு SpaceShipTwo வையும் சுமந்துகொண்டு, White Knight Two பறக்கத் தொடங்கும். சுமார் 52 ஆயிரம் அடி உயரத்துக்குப் போனதும், White Knight Two நிதானமாக பறந்துகொண்டிருக்க சேர்ந்து வந்த SpaceShipTwo தனித்து இயக்க ஆரம்பித்து, கணப்பொழுதில் White Knight இல் இருந்து விடுபட்டு அசுர வேகத்தில் பறக்கத் தொடங்கும்.


பூமியிலிருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள பகுதியைத்தான் விண்வெளி (Space) என்கிறார்கள். (சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றுவது சுமார் 150 கி.மீ. உயரத்தில்) அந்த உயரம் வரை சென்று விண்வெளியை சுற்றிக்காட்டிவிட்டு, SpaceShip பூமிக்கு திரும்பிவிடும். மேலே செல்வதற்கு மட்டுமே White Knight இன் உதவி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சேர்த்து மொத்தம் இரண்டரை மணி நேரப் பயணம். அதில் விண்வெளியைத் தொடும் நேரம் 6 நிமிடங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எடையில்லாத் தன்மையை பயணிகள் அப்போது மட்டும் உணர்வார்கள்.


SpaceShipTwo குட்டி வானூர்தி என்பதால் அதில் 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.





Tuesday, October 29, 2013

Improved Gray Eagle..


மேம்படுத்தப்பட்ட சாம்பல் நிறக் கழுகு (Improved Gray Eagle) என்னும் பெயருடைய ஆளில்லாப் போர் வானூர்தி தொடர்ந்து 45.3 மணித்தியாலங்கள் பறந்து சாதனை படைத்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நிறுவனமான General Atomics Aeronautical Systems இந்த Gray Eagle வானூர்தியை உருவாக்கியுள்ளது.


Improved Gray Eagle நீண்ட தூரம் மற்றும் அதிக நேரம் தாக்குப் பிடிக்கக் கூடிய ஆளில்லா வானூர்தியாகும். A Medium-Altitude Long-Endurance (MALE) . 1.7கனமுடைய டீசல் பிஸ்டன் பொறியில் இது இயங்குகிறது. 25ஆயிரம் அடிகள்(7600மீ) உயரத்தில் பறக்கக் கூடியது. 

நிலத்தில் நகரும் பொருட்களை துல்லியமாக இனம் காணும் தூரப்புல மானி (Synthetic Aperture Radar) பொருத்தக் கூடிய வகையில் Gray Eagle ஆளில்லாப் போர் வானூர்தியின் மூக்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. இது எண்ணூறு இறாத்தல்(360கிலோ) எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியது. 


Gray Eagle ஆளில்லாப் போர் வானூர்தி AGM-114 Hellfire missiles என்னும் ஏவுகணைகளையும் GBU-44/B Viper Strike guided bombs என்னும் வழிகாட்டப்பட்டுச் செல்லும் குண்டுகளையும் தாங்கிச் சென்று தாக்கக் கூடியவை. 

                                             The AGM-114 Hellfire

The AGM-114 Hellfire ஏவுகணைகள் தரையிலிருந்து தரைக்கும் வானூர்திகளில் இருந்து தரைக்கும் ஏவக் கூடியவை (ASM). பலதரப்பட்ட இலக்குகளையும் இவை தாக்கி அழிக்கக் கூடியவை. 

                                  GBU-44/B Viper Strike guided bombs            

GBU-44/B Viper Strike guided bombs என்னும் குண்டுகளை GPSமூலமாகவும் laser-guidance மூலமாகவும் வழிகாட்டி இலக்குகளைத் தாக்கலாம்.

அமெரிக்கா தீவிரவாதிகளைக் கொல்லும் நடவடிக்கைகளுக்கு ஆளில்லாப் போர் வானூர்திகளில் பெரிதும் தங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல அது தனது எதிர்காலப் போர் நடவடிக்கைகளுக்கும் போர் முனை உளவு பார்த்தல் நடவடிக்கைகளுக்கும் ஆளில்லாப் போர் வானூர்திகளையே நம்பியிருக்கிறது.

Thursday, October 17, 2013

Airbus A350 XWB..


அமெரிக்க தயாரிப்பான போயிங் ரீம்லைனர் (Boeing Dreamliner 787-9) வானூர்திக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்கள் கொண்ட புதிய வானூர்தியை ஏர்பஸ் (Airbus) நிறுவனம் முதல்முறையாக பிரான்ஸ்சில் உள்ள Toulouse-Blagnac Airport இல் பறக்கவிட்டுள்ளது. A350 XWB என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வானூர்தி அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏர் பஸ்ஸின் புதிய A350 XWB வானூர்தி 400க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவுக்கு பெரியது. அத்துடன் புதிய காற்றியக்கவியல் (Aerodynamics) வடிவமைப்பு மற்றும் நவீன தொழிநுட்பங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் Airframe டைட்டானியம் மற்றும் அலுமினிய கலவைகள் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வானுடல் (Fuselage) Carbon Fibre Reinforced Plastic (CFRP) என்ற நிறை குறைந்த Plastic ஆல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் செலவும் குறைவு, பராமரிப்பும் எளிது.


இவ் வானூர்தியில் முழுமையாக எரிபொருள் நிறப்பினால், 8,400 மைல் பறக்கக்கூடியது. அதாவது, Toronto - Hong kong தொடர்ச்சியாக சிக்கல் எதுவுமின்றி பறக்கக் கூடியது.



Wednesday, October 16, 2013

New Dreamliner 787-9


அமெரிக்காவில் போயிங் (Boeing) நிறுவனத்தின் புதிய வகை கனவுவானூர்தியின் 787-9 (New Dreamliner 787-9) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

போயிங் வானூர்திகள் குறிப்பாக Dreamliner எனப்படும் கனவு வானூர்திகள் பயணிகள் போக்குவரத்திற்கு மிகவும் வசதியானதாகும். குறைந்த எரிபொருளில் நீண்ட தூரம் பயணிக்கக் கூடியதாகவும், நடுத்தர அளவு கொண்டவையாகவும் தயாரிக்கப்படுகின்றன.


787-8 வகையைச் சேர்ந்த, போயிங் வானூர்தி கடந்த 2011-ம் ஆண்டு, சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 290 இருக்கைகளைக் கொண்ட இந்த வானூர்தியை விட மேம்பட்டதாக, 787-9 வகை போயிங் வானூர்தி தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. 

இது 310 இருக்கைகளைக் கொண்டதுடன் 250 knots வேகத்திலும் செல்லக்கூடியது (இது ஒலியின் வேகத்தை விட சற்று குறைவானது), இதன் வெள்ளோட்டம் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள எவரெட் பகுதியில் Paine Field என்னுமிடத்தில் போயிங் தொழிற்சாலைக்கு வெளியில் எடுத்துவரப்பட்டு வானோடிகள் Mike Bryan மற்றும் Randy Neville ஆகியோரின் தலைமையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இவ் வெள்ளோட்டம் செப்டம்பர் 17ஆம் திகதி நடத்தப்பட்டது. வெள்ளோட்டதின் போது இவ் வானூர்தி 20,400 அடி உயரத்தில் 5 மணி 16 நிமிடம் வெற்றிகரமாக பறந்து தனது புதிய வரவை உலகுக்கு அறிவித்தது.

இப்புதிய வரவு 2014 மத்தியில் Air New Zealand வானூர்தி நிறுவனமூடாக வான் பயணிகளுக்காக சேவையில் ஈடுபடவுள்ளது. இப்போது போயிங் (Boeing) நிறுவனம் தனது மூன்றாம் பதிப்பான Dreamliner 787-10 இல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.


Seating: 
250 to 310 passengers

Range:
8,000 to 8,500 nautical miles (14,800 to 15,750 kilometers)

Cross Section:
226 inches (574 centimeters)

Wing Span:
197 feet (60 meters)

Length:
206 feet (63 meters)

Height:
56 feet (17 meters)

Cruise Speed:
Mach 0.85

Maximum Takeoff Weight:
553,000 lbs (250,836 kg)

Total Cargo Volume:
5,400 feet3 (153 m3)

Program Milestones:
Final assembly: May 2013
First flight: Sept. 17, 2013
First delivery: Mid-2014



Monday, October 14, 2013

மாற்றி அமைக்கப்பட்ட F-16


வானூர்திப் படையில் இருந்து ஒய்வு கொடுத்து அனுப்பப்பட்ட ஜெட் போர் வானூர்திகளை மீண்டும் புதுப்பித்து ஆளில்லா வானூர்தியாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் போயிங் (Boing ) வானூர்தி நிறுவனம் Lockheed Martin F-16 ரக வானூர்தி ஒன்றை ஆளில்லா வானூர்தியாக ஆக்கியிருப்பதாகக் கூறியிருக்கிறது

Lockheed Martin F-16 ரக வானூர்திகள் தரத்திலும் திறனிலும் சிறந்தவை என்றாலும் இப்பொழுது அவை தயாரிக்கப்படுவதில்லை.


இந்த F-16 ரக போர் வானூர்தி வானோடிகள் இல்லாமல், கடந்த மாதம் அமெரிக்காவில் பறக்கவிடப்பட்டது. அமெரிக்க மாநிலமான புளோரிடாவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடாவிற்கு பறந்த இந்த ஆளில்லா எப்.16 வானூர்தியை , தரையிலிருந்து இரண்டு அமெரிக்க வான்படை வானோடிகள் இயக்கினர்.

கடந்த 15 ஆண்டுகளாக அரிஸோனா மாநிலத்தின் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் பழைய வானூர்தி மணிக்கு 1800 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்தது.

இந்தப் பறத்தலின் போது,அது தலைகீழாகப் பறப்பது உள்ளிட்ட பல வான் சாகசங்களையும் செய்தது.