பழமொழி.....

Tuesday, July 19, 2011

வானூர்தியின் பாகங்களும், இயக்கமும்..





1. cabin & cockpit:: விமானிகள் உட்கார்ந்து இயக்கும் இடம்.
2. engine: உந்து விசையளிக்கும் எந்திரம்
3. wing: இறக்கைகள் இதில் இருந்துதான் மேலெ தூக்கும் விசை உற்பத்தியாகிறது.
4. horizontal stabilizer: இது விமானம் உருளாமல் இருக்க உதவுகிறது.



5. vertical stabilizer: இதுவும் விமானம் உருளாமல் இருக்க உதவும்.
6. rudder: இது விமானத்தை இடது அல்லது வலது பக்கம் திருப்ப உதவும்.
7. elevator: இது விமானத்தை மேலே ஏற்றவும் கீழே இறக்கவும் பயன்படும்.
8. flap: இது குறைந்த தூரம் ஒடுதளத்தில் ஒடி Take Off செய்ய உதவும்.


  
9. aileron: இதுவும் ரடரும் சேர்ந்துதான் விமானத்தை திருப்ப பயன்படும்.
10.spoilers:இது விமானத்தை தரையிறக்கும் போது விரைவாக வேகத்தை குறைக்க பயன்படும்.
11. Slats: இதுவும் flap இரண்டுமே குறை தூரம் ஓடி Take Off செய்ய பயன்படும்.
12. fuselage: இதுதான் விமானத்தின் உடம்பு.





Monday, July 18, 2011

செல்போனால் விமான விபத்துகள்.



சர்வதேச விமான போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில், கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் 75 விமான விபத்துக்கள் செல்போனால் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 


இதில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, யாரேனும் செல்போன் பேசினால், விமானத்தில் முக்கிய சாதனங்கள் அனைத்தும் மின்னணுவால் இயங்குபவை என்பதால் அவை பெரும் பாதிப்பு ஏற்படும், இதனால் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முதலில் துண்டிக்கப்படும் எனவும் இதனால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அதிலும் ஐபேடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல்கள் போன்று சில உயர் ரக மொபைல்கள் பெரும் ஆபத்தை விளைவிக்ககூடியன. இவை போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்களில் உள்ள விமான பைலட்டுகள் அமரும் கேபின் பகுதிகளில் ஜி.பி.எஸ்.கருவி உள்ளதால் முதலில் அவைகளைத்தான் ‌தாக்கும். இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விமானத்தில் பயணிக்கும் போது செல்போன்களை பயன்படுத்தினால் ஆபத்து  ஏற்படும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது செல்போன்களில் உள்ள  மைக்ரே (Micro) அலைகள் ‌பறக்கும் விமானத்தின் பேசினால் , விமானத்தில் உள்ள மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பழுதடைய  செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில் , கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.


Saturday, July 16, 2011

ஏரியன் ஸ்கவுட்





வானத்தில் பறந்த படியே ஆயிரம் அடி தொலைவில் இருந்து தெள்ளத் தெளிவாக படம் எடுக்கக் கூடிய ரோபோ கமெராவை கனடாவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கனடாவை சேர்ந்த நிறுவனம் ஏரியன் லேப்ஸ். உளவு நிறுவனங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது. 


சமீபத்தில் இந்நிறுவனம் உருவாக்கியிருப்பது "ஏரியன் ஸ்கவுட்" எனப்படும் ரோபோ கமெரா. இதில் உள்ள தொடுதிறன் திரையின் மூலம் முதலில் கூகுள் நிறுவனத்தின் உலக வரைபட மென்பொருள் மூலமாக நமக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். 

உதாரணமாக நியூயார்க் என்று தேர்வு செய்தால் ஏரியன் ஸ்கவுட் உடனே புறப்பட்டு நியூயார்க் நோக்கி பறக்கத் தொடங்கும். அங்கு சென்றதும் 500 அடி உயரத்தில் பறந்தபடியே கீழே நடப்பவற்றை தனது டிஜிட்டல் கமெராவில் புகைப்படமாக அல்லது வீடியோ காட்சியாக தொடர்ச்சியாக பதிவு செய்யும். 
கீழே இருந்து பார்த்தால் ரோபோவை கண்டுபிடிக்க முடியாது. சுமார் ஆயிரம் அடி தொலைவில் இருந்துகூட தெள்ளத் தெளிவான படங்களை எடுக்கும். பதிவாகும் காட்சிகளை மின்னஞ்சலுக்கோ, ஐபோனுக்கோ அனுப்பிக் கொண்டே இருக்கும். 
இதன் விலை ரூ.22 லட்சம். காரில் மிக வேகமாக செல்பவரின் முகத்தைக்கூட இக்கமெரா தெளிவாக படம் பிடிக்கும். தப்பிச் செல்லும் கொள்ளையரை பிடிக்கவும், மறைந்திருக்கும் குற்றவாளிகளை பிடிக்கவும் இது உதவிகரமாக இருக்கும் என்கிறது ஏரியன் லேப்ஸ் நிறுவனம்.





Friday, July 15, 2011

சூரிய வானூர்தி.





சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 அன்று ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விமானம் தனது பயணத்தை சுவிஸ்லாந்தின் PAYERNE விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் LUXEMBOURG ஆகிய நாடுகளுக்கு மேலாக 12400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் BRUSSELS விமான நிலையத்தில் தரையிறங்கியது.

200 அடி நீளமான இந்த விமானத்தில் 12000 சூரிய கலங்கள் பொருத்தப்பட்டு விமானத்துக்கு தேவையான சக்தி வழங்கப்பட்டது. .இதில் பொருத்தப்பட்டுள்ள சூரிய கலங்களில் சேமிக்கப்படும் சக்க்தியைக்கொண்டு இந்த விமானம் 26 மணித்தியாலங்கள் பறக்கும் வல்லமை கொண்டது.




After seven years in the making, the Solar Impulse made its first real flight this morning from an airbase in Switzerland. The solar-powered plane got up to 5,500 ft in altitude and performed test maneuvers in order to see if the plane handled as well as simulations predicted. Everything went perfectly for the first test flight and proved that the plane is capable of taking off and landing. With this important test flight behind them, the Solar Impulse team can push on towards gearing up for their solar powered around-the-world flight in 2012.






Wednesday, July 13, 2011

Prototype. (புரோட்டோ டைப்)


பறக்கும் தட்டு விமானங்களைப் போல புதுவகையான விமானங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு புரோட்டோ டைப் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இப் புதியவகை விமானங்கள் பாரிய இயந்திரங்களால் இயக்கப்படும் மற்றும் எரிபொருட்களைப் பாவிக்கும் சாதாரண விமானங்களை விட மாறுபட்டதாகவே காணப்படுகின்றது.



புதியவையான இவ் விமானங்கள் ஒருவகை காற்றால் நிரப்பப்பட்ட சுவர்களைக் கொண்டதால் புவியீர்ப்பு சக்தியில் இருந்து இவை இலகுவாக மிதக்கும் தன்மை கொண்டவையாக அமைகின்றது. எனவே அதனை ஒருபாதையில் செலுத்த மட்டும் சிறியவகை எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகிறது.

இப் புதியவகை விமானங்கள் இலகுவாகப் பறப்பதாலும், செலவுகள் குறைவு என்பதாலும் இவற்றிக்கு அதிக கிராக்கி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


 இந்தக் காணோளிகளைப் பாருங்கள்...


Tuesday, July 12, 2011

Solar Eagle. (சோலார் ஈகிள்)


ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு விமானம் ஒன்றை போயிங் நிறுவனம் தயார் செய்துள் ளது. சூரிய சக்தியில் இயங்கும் உளவு விமானம் தயாரிக்க போயிங் நிறுவனத்திடம் அமெரிக்க ராணுவம் ஆர்டர் கொடுத்தது.
சோலார் ஈகிள் என்ற பெயரில் உளவு விமானத்தை தயாரித்துள்ள போயிங் விமானம் அதை பரிசோதித்து வருகிறது. இந்த விமானம் நிற்காமல் விண்ணில் தொடர்ந்து அய்ந்து ஆண்டுகள் பறக்குமாம். இந்த விமானத்தின் இறக்கையில் உள்ள சோலார் தகடுகள், பகல் நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் விமானத்தின் எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் புரொப்பலர்கள் இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து, படங்கள் மற்றும் உளவுத் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு  இந்த விமானம் அனுப்பிக் கொண்டிருக்கும். முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் விமானம், 30 நாள் நிற்காமல் பறக்கவுள்ளது. இந்த சோலார் ஈகிள் விமானம் 2014ஆம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சோலார் ஈகிள் மேல் எழும்புவதும், தரை இறங்குவதும் காணொளியில்.....



Monday, July 11, 2011

புதிய உளவு வானூர்தி




ஆயுதத் தளபாட தயாரிப்பு (தனியார்) நிறுவனமான Northrop Grumman, புதிய உளவு விமானம் ஒன்றை அமெரிக்க ராணுவத்துக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. தற்போது ஒரேயொரு விமானம் மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் இதை வாங்கச் சம்மதிக்கும் பட்சத்தில் மேலதிக விமானங்கள் தயாரிக்கப்படும் என்கிறது Northrop Grumman.

ஏற்கனவே அமெரிக்காவிடம் இருக்கும் உளவு விமானங்களுக்கும், இந்தப் புதிய விமானத்துக்கும் இடையே என்ன வித்தியாசம்?
இதை ஆளில்லாத உளவு விமானமாகவும் பயன்படுத்தலாம், அதேநேரத்தில் ஒரு விமானியும் செலுத்திச் செல்லலாம். இப்படி இரு வகையிலும் பயன்படுத்தப்படக்கூடிய விமானங்கள் ஏதும் தற்போது பாவனையில் இல்லை.

அத்துடன் இந்த விமானம் பறக்கும்போது, நான்கு ஹைடெக் (Hi-Def) சென்சார்கள் ஒரே நேரத்தில் இயங்கும் (தற்போது பாவனையிலுள்ள உளவு விமானங்களில் அதிகபட்சம் 2 ஹெடெக் சென்சார்களே உள்ளன) அது மாத்திரமல்ல, விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே கீழே தரையில் நடைபெறும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும் முடியும்.

அமெரிக்க ராணுவத்துக்கு நீண்ட காலமாக யுத்த தளவாடங்களை சப்ளை செய்யும் நிறுவனம் இந்த Northrop Grumman. இதனால் இவர்கள் தமது விமானத்தை அமெரிக்க ராணுவத்துக்கு விற்பதில் அதிக சிரமம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.


         இந்தக் காணோளிகளைப் பாருங்கள்.....