பழமொழி.....

Saturday, March 16, 2013

வானூர்தி விபத்து -02

வானூர்தி விபத்துக்கான காலநிலை தவிர்த்த வேறு காரணிகள்..........
  1. பறவைகள்.
  2. தூரப்புலமானியின் (Redar) கண்காணிப்பிலிருந்து காணாமல்போதல்.
  3. மலிந்த விலை (Budget Carrier) வானூர்திப் பயணங்கள்.
  4. மனிதத் தவறுகள்.
  5. சமர்கள். (Wars)

                                                        பறவைகள்

சாதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள பறவைகள் வானூர்திகளில் மோதுவதால் வானூர்திகள் விபத்துக்களைச் சந்திக்க நேர்கின்றன. வானூர்தியின் இயந்திரப் பகுதியை நோக்கி அதிவேகமாகக் காற்று ஈர்க்கப்படும் நேரத்தில் அப்பகுதியில் பறந்துகொண்டிருக்கும் பறவைகளும் ஈர்க்கப்படுகின்றன. பறவைகள் குறித்த இயந்திர அலகுகளில் மோதுவதால் இயந்திரத்தின் உற்பகுதிக்குள் இழுக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டு வானூர்தி விபத்துக்குள்ளாகலாம்.

1988 முதல் உலகம் முழுதும் வானூர்திகளில் பறவைகள் மோதியதன் விளைவாக 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டில் வானூர்திகள் பறக்க ஆரம்பிக்கும்போது அல்லது இறங்கும்போது 5000 இற்கும் அதிகமான தடவைகள் பறவைகள் மோதிய நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு 155 பேருடன் பயணித்த அமெரிக்க வானூர்தி ஒன்றின் இயந்திரத்தில் பறவையொன்று சிக்கியதால் அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்காக வானூர்தி உடனடியாக நியுயோர்க் நதியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆய்வுக் குழு இப்பறவைகளை இறக்கையுள்ள தோட்டாக்கள் என வர்ணிக்கிறது. தரையிலிருந்து சில ஆயிரம் அடி உயரம் வரையான பகுதிகளிலேயே இத்தகைய அபாயம் காணப்படுகின்றது.


                       தூரப்புலமானியின் (Redar) கண்காணிப்பிலிருந்து                
                                                காணாமல்போதல்

வானூர்திகள் பறக்கும்போது அவை தூரப்புலமானியின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அதன்போதுதான் வானூர்தி செல்லும் பாதை பற்றியும் வரும் தடங்கள் பற்றியும் காலநிலை குறித்தும் எச்சரிக்க முடியும். தற்செயலாக தூரப்புலமானியின் கண்காணிப்பிலிருந்து வானூர்தி மறைந்தால் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். சமுத்திரங்களின் மீது பறக்கும் வானூர்திகளை தூரப்புலமானியால் அவதானிப்பது கடினம்.

அட்லான்டிக் சமுத்திரங்களைக் கடந்துவரும் பல வானூர்திகள் சிலநேரத்தில் தூரப்புலமானியின் கண்காணிப்பிலிருந்து விடுபடுவதால் எதிர் திசையிலிருந்து வரும் வானூர்திகளுடன், வர்த்தக வானூர்திகள் மோதி விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. சமுத்திரங்களின் மீது பறக்கும் வானூர்திகள் மோதிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு வானூர்திற்கும் 80 கடல்மைல் இடைவெளி இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.


                   மலிந்த விலை (Budget Carrier) வானூர்திப் பயணங்கள்

மலிந்த விலையில் வானூர்திப் பயணங்களை மேற்கொள்ளும் போது பல அசௌகரியங்களை எதிர்நோக்கவேண்டி வருகின்றது. நேரம் தவறாமை என்ற ஒழுங்குகள் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. பயணிகளை அதிகம் ஏற்றிச் செல்வதற்காக ஆசனங்கள் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். இங்கு விடப்படும் தவறுகள் காரணமாக கூடுதலான அளவு விபத்துக்கள் நிகழ்வது வழமையாகிவிட்டது.

                                              மனிதத் தவறுகள்

கட்டுப்பாட்டுக் கோபுரம் (Control Tower) கொடுக்கும் அறிவுறுத்தல்களை வானோடிகள் தவிர்ப்பதால் விபத்துக்கள் நிகழ்கின்றன. கட்டுப்பாட்டாளர்களின் தவறுகள், மாசடைந்த எரிபொருள், வானூர்திகள் முறையாகப் பராமரிக்கப்படாமை, அறிவித்தல்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றமை என்பன காரணமாகவும் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்கின்றன.

அத்துடன் பயணிகள் வானூர்தி பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் இருப்பதும் வானூர்தி விபத்துக்களுக்கும் மற்றும் விபத்துக்களின்போது நேரும் உயிர்ச்சேதங்களுக்கும் காரணமாகும். ஆசனப் பட்டிகளை அணியாமல் இருப்பது, இருக்கைகளை விட்டு எழுந்து விமானத்தில் உலாவுவது, போன்ற அநாவசியமான செயல்களால் சேதங்கள் அதிகளவில் நிகழ்கின்றன.


                                                                    சமர்கள்(Wars)

வானூர்திஙகள் தமது நாட்டு வான் பரப்பில் பறக்கும்போது சுட்டுவீழ்த்தப்படுவதாலும், வானூர்திக் கடத்தல்கள் மற்றும் குண்டுவைப்புகளாலும் சேதத்துக்குள்ளாகின்றன.

1988 ஜுலை 3ம் திகதி ஈரானியப் பயணிகள் வானூர்தி ஒன்று பாரசீக வளைகுடாவுக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்தபோது அமெரிக்கக் கடற்படைக்கலத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதனால் 290 பயணிகள் கொல்லப்பட்டனர். இதே ஆண்டில் அமெரிக்க வானூர்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து தரையில் வீழ்ந்ததால் தரையிலிருந்த 11 பேர் மற்றும் பயணிகள் 270 பேரும் உயிரிழந்தனர்.

Friday, March 15, 2013

வானூர்தி விபத்து - 01

வானூர்தி விபத்துக்கான காலநிலைக் காரணிகள்..........
  1. மின்னல்
  2. கொந்தளிப்பு நிலை
  3. புயல்
  4. பனிப்படிவுகள்

                                                      மின்னல்

மின்னல் தாக்கத்தினால் பல வானூர்திகள் வெடித்துச் சிதறியுள்ளன. 1963ம் ஆண்டில் அமெரிக்காவின் வானூர்தி ஒன்று மின்னல் தாக்கத்திற்குள்ளானதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். ரேடார் மற்றும் காலநிலை பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால் இடி, மின்னல் போன்றவற்றைத் தவிர்த்து செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 1980களின் முற்பகுதியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா Jet வானூர்தி ஒன்றை மின்னல்கள் நிறைந்த பகுதிக்குள் அனுப்பி சோதனை நடாத்தியதில் 45 நிமிடங்களில் 72 தடவைகள் அவ்வானூர்தி மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. இதன்மூலம் மின்னல் தாக்கம்தொடர்பாக பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டு அவை வானூர்தித் தயாரிப்பின்போது பிரயோகிக்கப்பட்டுகின்றன.

வர்த்தக வானூர்திகள் வருடத்திற்கு ஒரு தடவை வீதம் மின்னல் தாக்கத்திற்குள்ளாவதாக புளோரிடா பல்கழைக்கழகம் நடாத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பொதுவாக வானூர்தியின் இறக்கை முனைகள், வால், மூக்குப்பகுதி போன்ற பகுதிகளே மின்னல் தாக்கத்திற்குற்படுகின்றன. தற்போது நவீன வானூர்திகள் மின்னைக் கடத்தும் தன்மை குறைவாகவுள்ள உலோகப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.


                               கொந்தளிப்பு நிலை

பறந்துகொண்டிருக்கும் வானூர்திகள் எதிர்கொள்ளும் மற்றுமொரு அபாய நிலைதான் இது. வளிமண்டலத்தில் ஏற்படும் இத்தகைய கொந்தளிப்பு நிலைமையால் (Turbulence) வானூர்திப் பயணிகள் பெறும் பீதிக்குள்ளாகின்றனர். வளிமண்டல அமுக்க வித்தியாசம் காரணமாக இந்நிலை ஏற்படுகின்றது. இதனைக் கடந்துசெல்லும் போது வானூர்திகள் தட தட வென்று குலுங்கும் நிலை ஏற்படுகின்றது. கொந்தளிப்புகளை இலகுவில் கண்டறிய முடியாது. அவை திடீரென எதிர்பார்க்காத விதத்தில் நிகழ்கின்றன.

இந்நிலையினால் உயிர்ச்சேதங்கள் ஏற்படாதபோதிலும் வானூர்திப் பயணிகள் பலர் இதனால் காயமடைந்துள்ளனர். 1980 முதல் 2004 வரை அமெரிக்க வானூர்திகளில் இத்தகைய 198 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் 266 பேர்வரை கடுமையாகக் காயங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் அமெரிக்க வானூர்தி சேவைகள் நிர்வாகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


                                          புயல்

திடீரென்று உருவாகும் புயற் காற்றினாலும் வானூர்திகள் அலைக்கழிக்கப்படுகின்றன. இதனால் வானூர்திக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு விபத்துக்கள் நிகழ அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன. வானூர்திகளில் பொறுத்தப்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புயல் உருவாவதை முன்கூட்டியே அறிந்து அதற்குண்டானா நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. மோசமான வானிலை நிலவும் பகுதிகளைத் தவிர்த்துச் செல்வதற்காக வானிலை பற்றிய தகவல்கள் நிமிடத்திற்கு நிமிடம் வானூர்ததிக்கு அனுப்பப்படுகின்றன.


                                  பனிப்படிவுகள்

வானூர்தி இறக்கைகளில் குளிர்காலங்களில் படியும் பனிப்படடிவுகளால் பாரிய அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. கடும் குளிரான நீர்த்துளிகள் விமான இறக்கைகளில் ஒட்டிக்கொள்வதால் பனி தேங்குகின்றது. இறக்கைகளில் பனி அதிகளவில் தேங்குவது விமானம் மேலே எழும் தன்மையைப் பாதித்து அனர்த்தங்களுக்கு வழிவகுக்கலாம். பறக்கும்போது மட்டுமன்றி வானூர்தி நிலையங்ககளில் தரித்திருக்கும்போதும் பனி தேங்குவற்கு வாய்ப்புள்ளது. சிறிய வானூர்திகளின் உட்புறத்திலும் பனி உருவாகி இதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

1982 முதல் 2000 ஆம் ஆண்டுவரை 819 பேர் வானூர்திகளின் உட்புறத்தில் ஏற்படும் பனி காரணமாக இறந்துள்ளதாக அமெரிக்காவி
ன் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கிறது. பனிபடிவதைப் தடுப்பதற்காக வானூர்திகள் பறப்பதற்கு முன்னர் ஒருவகைப் பதார்த்தம் பூசப்படுகின்றது.

Saturday, March 9, 2013

நெகிழிக் கழிவு வானூர்தி.


பொதுவாக வானூர்திகள் gasoline மற்றும் kerosene போன்ற உயர் ரக பெட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் உயிரியல் (aviation biofuel) எரிபொருட்கள், சமையல் எண்ணை மற்றும் கழிவு எண்ணை மூலமும் இயக்கப்படுகின்றன. ஆனால் முதன் முதலாக நெகிழிக் (plastic) கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் டீசல் மூலம் வானூர்தியை இயக்க ஒரு வானோடி திட்டமிட்டுள்ளார். அவர் 41 வயதான (Jeremy Rowsell) ஜெரிமி ரவுசல் என்பவர். 


இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். எதற்கும் பயன்படாத மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழிக் கழிவில் இருந்து டீசல் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக 5 தொன் நெகிழிக் கழிவுப் பொருட்களை பல நாடுகளில் இருந்து சேகரித்துள்ளார்.

அதில் இருந்து 1000 கலன் டீசல் தயாரிக்கிறார். அயர்லாந்தில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனம் pyrolysis என்ற இரசாயனத்தைப் பபயன்படுதி நெகிழிக் கழிவுகளிருந்து வானூர்திக்கான டீசலை உற்பத்தி செய்து ஜெரிமி ரவுசலுக்கு வழங்க தீர்மானித்துள்ளது. 


அதன் மூலம் வருகிற ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு Cessna 172 என்ற வானூர்தியை இயக்க உள்ளார். அதன் தூரம் 16,898 கி.மீட்டர் ஆகும்.

Wednesday, March 6, 2013

நிஞ்சா வானூர்தி.



அதிரடியாக செயல்படக் கூடிய, தூரப்புலமானிகளுக்கு அகப்படாமல் தப்பிக்கக்கூடிய, விரும்பும் பக்கத்தில் திரும்பக்கூடிய வித்தியாசமான வடிவத்தைக் கொண்ட நவீன வானூர்தி தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் புளோரிடா (Florida State University aerospace engineer) பல்கலைக்கழக பேராசிரியர் Ge-Chen Zha கண்டுபிடித்துள்ளார்.


இதை மேலும் மேம்படுத்துவதற்காக அமெரிக்க டொலர் 1 லட்சத்தை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் (Nasa) ஒதுக்கீடு செய்துள்ளது. சாதாரண வானூர்திளுக்கு இறக்கைகள் பெரிதாக இருக்கும். இதில் இருக்கும் காற்றாடிகள் சுழலும்போதுதான் வானூர்திக்கு அதிக உந்துசக்தி கிடைத்து வானில் பறக்க முடிகிறது. போர் விமானங்களில் உந்து சக்தி தாரை (turbo engine) இயந்திரங்கள் மூலம் கிடைக்கின்றன.

இந்நிலையில், நிஞ்சா வீரனைபோல் அதிரடியாக செயல்படக்கூடிய அதிநவீன வானூர்தியை அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Ge-Chen Zha குழுவினர் தயாரித்துள்ளனர். இந்த வானூர்தி சாதாரண வானூர்திகளைப் போலவே தரையில் இருந்து மேலே எழும்பிச் செல்லும். ஆனால், வானத்தில் பறக்க ஆரம்பித்தவுடன் அதன் இறக்கைகள் பக்கவாட்டில் விரிந்து கொள்ளும், அதாவது நிஞ்சா வீரர்கள், எதிரியை பார்க்கும்போது, தங்களுடைய கைகளை அகலமாக விரிப்பார்கள். அப்போது அவர்களின் ஆடையும் பக்கவாட்டில் விரியும். அது பார்ப்பதற்கு, பிரம்மாண்டமான தோற்றத்தை தரும்.


இதேபோல் இந்த வானூர்தியின் இறக்கைகளும் பக்கவாட்டில் விரியும். தரையில் நீளமாக இருக்கும் இந்த வானூர்தி, ஆகாயத்தில் பறக்கத் தொடங்கும்போது அகலமாக தெரியும். இறக்கைகள் விரிந்தவுடன், Supersonic என்ற ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சக்தி கிடைக்கும். இதன் மூலம் மிக உயரமாக பறக்க முடியும். மேலும், இந்த வானூர்தி ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, சடாரென 90 பாகை வரையில் திரும்ப முடியும்.

இத்தொழில்நுட்பத்தில் வானூர்தி தயாரிக்கப்பட்டால், அது எப்படி பறக்கும் என்பது குறித்து விளக்கும் அனிமேஷன் காணொளி காட்சிகளை, பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.



இதன் சிறப்பம்சங்கள்....
  1. 70 பயணிகளுடன் பயணிக்கக் கூடியது.
  2. ஒலியை விட இரு மடங்கு வேகத்துடன் பயணிக்கக் கூடியது.
  3. தொடர்சியாக 4,000 மைல் பயணிக்கக் கூடியது.
  4. இதன் இறக்கை அமைப்பு Supersonic Bi-Directional Flying Wing என்று அழைக்கப்படுகிறது.

Friday, February 15, 2013

Qaher F-313



ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய நாடாக திகழ்கிறது. அங்கு சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் வானூர்தியை ஈரான் தயாரித்துள்ளது. அது தூரப்புலமானியில் அகப்படாமல் பறக்கும் Stealth தொழிநுட்பத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதற்கு Qaher F-313 (வெற்றியாளர்) என பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.

மேலும், அந்த வானூர்தியைப் பார்வையிட்ட அவர் அதன் தொழில் நுட்பத்தை வானோடியிடம் கேட்டறிந்தார். உலக நாடுகளில் இருக்கும் அதிநவீன போர் வானூர்திகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என அவர் வர்ணித்தார். அத்துடன் இது நவீனரக உலோகங்களினால் உருவாக்கப்பட்டது எனவும் இந்த வானூர்தியைப் பல ஆயிரம் மணி நேரம் வானோடிகள் பரிசோதித்ததாகவும் அதன் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.
பல போர் வானூர்தி வல்லுனர்கள் ஐக்கிய அமெரிக்காவின் F-22, F-35 ஆகிய போர் வானூர்திளின் தன்மைகளை ஈரானின் Qaher-313 வானூர்தி கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.


Qaher F-313 வானூர்தியின் சிறப்பம்சங்கள்.......

  1. ஒற்றை இருக்கை மட்டும் கொண்ட சிறிய வானூர்தி.
  2. புதியரக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக்கூடியது.
  3. தாக்குதலும் உளவும் செய்யக்கூடியது.
  4. வானூர்தியில் இருந்து வானூர்திக்கும், வானூர்தியிலிருந்து தரைக்கும் தாக்குதல் நடத்தக் கூடியது.
  5. தற்கால போர் வானூர்திகளுடன் ஒப்பிடுகையில் இதன் cockpit சிறிதாக இருப்பதுடன் அடிப்படையானதாகவும் இருக்கிறது.
  6. அனால் இதன் மூக்குப் பகுதி மிகச் சிறியதாக இருக்கிறது.
தூரப்புலமானிகளால் அடையாளம் காண முடியாத தொழில் நுட்பம் கொண்ட போர் வானூர்திகள் Stealth Fighter எனப்படும். உலகிலேயே சிறந்த ரக Stealth Fighter தன்னுடைய Qaher F313போர் வானூர்தி என ஈரான் தெரிவித்திருந்தது.



இது ஈரானின் பொய்........


ஈரான் வெளியிட்ட படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதன் படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

வானூர்தி மிகவும் சிறியதாக உள்ளமை, பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டதைப்
போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளமை, வானோடி ருவர் அமர்ந்து செலுத்துவதற்கான இடவசதி மிகவும் குறைவாக இருக்கின்றமை போன்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுவொரு மாதிரி 
வானூர்தி ன நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

காணொளி செய்தி 


Wednesday, February 6, 2013

Black Hornet



இங்கிலாந்து தரைப்படை ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்களுக்கு எதிரான போரில், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் உளவு வானூர்தியை தயாரித்து ஈடுபடுத்துகிறது. 4அங்குல நீளம் (10 cm) மற்றும் 1 அங்குல (2.5 cm)அகலம் கொண்ட இந்த உளவு வானூர்தியின் எடை வெறும் 15 கிராம் தான் அத்துடன் மணிக்கு 35k/m வேகத்தில் பயணிக்கும். 


வானூர்தியின் மூக்கு பகுதியில் உள்ள சக்திவாய்ந்த 3 மிகச் சிறிய ஒளிப்பதிவு கருவிகள் (tiny Cameras), எதிரியின் இலக்கை வெகு துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். ( படை வீரனின் கையில் இருக்கும் Hand Phone, Ipad, Tablet போன்றன தான் இதன் கட்டுப்பாட்டு அறை) G.P.S உதவியுடன் இயங்கும் இந்த உளவு வானூர்திக்கு "Black Hornet" (பிளாக் ஹார்னட்) என பெயரிடப்பட்டுள்ளது. 


து எதிரிகளின் இருப்பு, ஆட்பலம், ஆயுதபலம், எதிகளின் பலவீனங்கள் போன்ற விபரங்களை உளவு பார்த்து தாக்குதலில் ஈடுபடும் படையினர்களுக்கு வழங்கி படையினரின் தாக்குதலை இலகுபடுத்தி அவர்களின் இழப்புகளையும் குறைகிறது.


இந்த வானூர்தி எதிரி இலக்கின் மீது பறக்கும் போது யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஓசையை கூட கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



Saturday, February 2, 2013

Avian Infrasound Non-lethal Denial System


வானூர்தி நிலையங்களில் வானூர்திகளை சுற்றிவளைத்து தொல்லை கொடுக்கும் பறவைகளை விரட்ட புது கருவியை அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான Technology International நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

வானூர்தியை தரையிறக்கும்போது மற்றும் மேலே கிளப்பும்போது ஏன் நடுவானில் பறக்கும்போதும் கூட திடீர் திடீரென பறவைகள் குறுக்கே வரும். தற்செயலாக கண்ணாடியில் மோதினாலோ அல்லது இயந்திரத்தில் புகுந்தாலோ பயங்கர விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. வானூர்தி நிலைய பகுதியில் பறவைகள் நடமாட்டத்தை தடுக்க தானியங்கி விசிறி, பறவைகளை சிக்கவைக்கும் வலை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. 


இந் நிலையில், மெல்லிய ஒலி எழுப்பி பறவைகளை விரட்டும் கருவியை அமெரிக்காவின் லூசியானா (Louisiana) மாநிலம் லாபிளேஸ் (Laplace) நகரை சேர்ந்த Technology International என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. Avian Infrasound Non-lethal Denial System என்பது இதன் பெயர் அதாவது "பறவைகளை விரட்டும் ஆபத்தற்ற கேட்கமுடியாத ஒலியமைப்பு" என்பது இதன் பொருள். வானூர்திகள் நெருங்கி வருவதை கண்டறியும் உணரி (Detect) இதில் உள்ளது. வானூர்திகள் நெருங்கி வந்ததும் இக்கருவியில் இருந்து குறைந்த அளவு ஒலி (மனிதரால் கேட்க முடியாது) தொடர்ந்து எழுப்பப்படும். அவ்வகை ஒலி பறவைகளுக்கு அது தெளிவாக கேட்கும் என்பதால், பயந்துபோய் ஓடிவிடும்.

இக்கரு வியின் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் முறைப்படி அறிமுகப்படுத்தப்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

                                        பறக்கும் பறவைகளால் பாதிக்கபட்ட                                                                                                  
                                                     பறந்த வானூர்திகள் சில