தற்காலத்தில் வெளிநாடு செல்பவர்களுக்கு வானூர்திப் பயணம் மட்டும் தான் ஒரே தெரிவு . இதற்காகவே பல வானூர்தி நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் வானூர்திப் பயணத்தில் உள்ள பிரச்சினைகளில் ஒன்று (Baggage) பயணப்பொதிகள். நாம் வானூர்தியில் ஏற முன்னர் Check-in Counter இல் எமது பயணப்பொதிகளை கையளிப்போம். பல நேரங்களில் அந்தப் பயணப்பொதிகள் மீண்டும் நம் கைக்கு வராமல் போகின்றன.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக ஏர் பஸ் (Air Bus) நிறுவனம் ஒரு புது வித பயணப்பொதியைக் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பெயர் "Bag 2 Go".
இதன் மூலம் உங்கள் பயணப்பொதியை Check-in செய்த உடன் உங்களது கைப்பேசியில் உடனே Track செய்து கொள்ளலாம்.
இதன் உதவியுடன் நீங்கள் வானூர்தியில் ஏறும்போது கூட உங்கள் பயணப்பொதி வானூர்தியில் ஏற்றப்பட்டுவிட்டதா என தெரிந்து கொள்ளலாம்.
பின்னர் வானூர்தியிலிருந்து இறங்கிய பின்னரும் Track செய்து பயணப்பொதி எங்குள்ளது அல்லது யாராவது எடுக்கிறார்களா என கூடப் பார்க்க முடியும்.
இறக்கைகள் மற்றும் எரிபொருட்கள் இல்லாமல் வானூர்தியோ அல்லது உலங்கு வானூர்தியோ பறக்க இயலாது. ஆனால் இந்த வானூர்தி இறக்கைகள் மற்றும் எரிபொருட்கள் இல்லாமல் பறக்கக் கூடியது இதன் பெயர் தான் (Solar Ship) சூரியக் கப்பல்.
இந்த வானூர்தியின் மேற்ப்பகுதியில் ஹீலியம் (He) வாயு நிரப்பப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் தான் சூரியக் கப்பல் மேலே மிதந்து பறக்கிறது. ஹீலியம் வாயு அடங்கியது என்பதால் அது வடிவில் பெரியதாகவும் இருக்கிறது சூரியக் கப்பலின் மேற்புறத்தில் நிறைய சூரிய சக்திப் பலகைகள் (Solar panels) பொருத்தப்பட்டுள்ளன .இவை மின்சாரத்தை அளிக்கும். சூரியக் கப்பல் வானில் முன்னோக்கிச் செல்வதற்கு வலு கொடுக்கும் இயந்திரங்கள் இயங்க இந்த மின்சாரம் உதவும். சூரியக் கப்பலில் குளிர் சாதனப்பெட்டி இருக்கும். விசேஷ வகை மருந்துகளை இதில் எடுத்துச் செல்லலாம்.
சூரியக் கப்பல் தரையிலிருந்து கிளம்பவோ தரை இறங்கவோ நீண்ட ஓடுபாதை தேவையில்லை. பள்ளிக்கூட சிறிய மைதானம் அளவுக்குத் திறந்த வெளி இருந்தால் போதும்.சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்று ரகங்களில் இவை தயாரிக்கப்படும். சிறிய வானூர்தி ஒரு தொன் பொருட்களை ஏற்றிக்கொண்டு, அதிகபட்சம் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியது. பெரிய வானூர்தியில் 30 தொன் அளவுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லலாம்.
பூகம்பத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்ல சூரியக் கப்பல் ஏற்றதாக விளங்கும். அத்துடன் தகுந்த சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு வானூர்திகளோ அல்லது உலங்கு வானூர்திகளோ போய் இறங்க முடியாத பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பவும் நிபுணர்கள் செல்லவும் இந்த வாகனம் உதவியாக இருக்கும்.
கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சூரியக் கப்பலை உருவாக்கியுள்ளது. இதன் நிறுவனரான ஜே காட்சால் (Jay Godsall) ஆப்பிரிக்காவில் மருந்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இப்படியான ஒரு வானூர்தியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குது தோன்றியது. பல முயற்சிகளுக்குப் பிறகு அவரது கனவு நனவாகியது.
சூரியக் கப்பல் சோதனை ஓட்டமாகப் பல தடவைகள் பறந்துள்ளது.
வானூர்தியின் "உடற் தரையிறக்கம்" (belly landing or gear-up landing) என்பது வானூர்தியின் உடலால் தரையிறங்குவது அதாவது வானூர்தியின் வயிற்றுப்பகுதியை (கீழ்ப்பகுதி) ஓடுபாதையில் (Run Way) தேய்த்துக்கொண்டு தரையிறக்குவதாகும்.
‘belly landing’ என்பது மிகவும் ஆபத்தான நடைமுறை. ஆனால் வானோடிக்கு வேறு வழியில்லை என்றால் தரையிறங்க இதைவிட வேறு வழியுமில்லை. இப்படி தரையிறங்குவதன் காரணம் வானூர்தியின் சில்லுகள் (undercarriage or landing gear) வெளியே வராமல் வானூர்திக்கு உள்ளே சிக்கியிருப்பது தான்.
இதில் என்ன பயமென்றால்,
தரையிறங்கிய வானூர்தி ஓடு பாதையில் உராய்வதால் தீப்பற்றிக் கொள்ளலாம்.
வானூர்தி ஒரே மட்டத்தில் தரையில் தொடாவிட்டால் கவிழ்ந்து போகலாம்.
காற்று வேகமாக அடித்தால் வானூர்தியின் இறக்கை தரையில் மோதி உடையலாம் (இறக்கையில் தான் எரிபொருள் சேமிப்பகம் உள்ளது)
belly landing மூலம் தரையிறங்கும் போது,
வானூர்தியில் இறங்குவதற்கான எரிபொருளுடன் மட்டும் தரையிறக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு கோபுரத்துடன் துல்லியமான தொடர்பை பேணவேண்டும்.
வானூர்தி நிலையத்தில் Runway மற்றும் Taxiway எந்தவொரு வானூர்தியும் இல்லாது பார்த்துக் கொள்ளப்படவேண்டும்.
தீயணைப்பு வண்டிகள் மற்றும் மருத்துவ வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளப்படவேண்டும.
வானோடி மிகத் திறமையுடன் வேகம் மற்றும் உயரத்தைக் கணித்து ஓடுபாதையில் தரையிறக்க வேண்டும்.
ஓடுபாதையின் மீதான வானூர்தியின் தொடுகை மிக முக்கியம். அதில் தவறு ஏற்பட்டால் வானூர்தி சறுக்கி விபத்து ஏற்படும்.
வானோடிகளின் தவறுகள். (வானோடிகள் அறிவித்தல் பட்டியல் படி(Checklist) செயற்ப்படமை)
காலநிலை. (வானூர்தியின் landing gears அமைப்பின் உள்ளே பனிக்கட்டிகள் உருவாகி landing gears செயற்படாமல் இருத்தல்)
இயந்திரக் கோளாறு. (வானூர்தியின் landing gears அமைப்பைக் கட்டுப்படுத்தும் electric motors (மின் இயந்திரங்கள்) or hydraulic actuators (நீரியல் முனைப்பிகள்) பழுதடைதல் அல்லது செயற்ப்படாமை)
ஆனால் A-10 Thunderbolt II போன்ற சில வானூதி வகைகள் பாதுகாப்பாக belly landing மூலம் தரையிறக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு வானூர்தி ஒன்றை போயிங் (Boing) நிறுவனம் தயார் செய்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் இந்த உளவு வானூர்தியை தயாரிக்க அமெரிக்க இராணுவம் போயிங் நிறுவனத்திடம் அனுமதி வழங்கியது.
சோலார் ஈகிள் (Solar Eagle) ன்ற பெயரில் உளவு வானூர்தியைத் தயாரித்துள்ள போயிங் நிறுவனம் அதைப் பரிசோதித்து வருகிறது. இந்த வானூர்தி நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம்.
இந்த வானூர்தியின் இறக்கையில் உள்ள சூரியத் தகடுகள் (Solar Impulse) பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் வானூர்தியின் மின்னியல் இயந்திரங்கள் (Electric Motors) மற்றும் உந்துகணைகள் (Propellers) இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து படங்கள் மற்றும் உளவுத் தகவல்களைத் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த வானூர்தி அனுப்பிக் கொண்டிருக்கும்.
முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் வானூர்தி 30 நாள் தொடர்ந்து பறக்கவுள்ளது. இந்த சோலார் ஈகிள் வானூர்தி 2014ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
எதிரி நாட்டு ஏவுகணைகளை பல்வேறு நிலைகளிலும் வைத்து தாக்கி அழித்தொழிக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்த இரசாயன சீரொளிக் கதிர்களை (Chemical Laser) பாய்ச்சக் கூடிய நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்து அதனை போயிங் 747 வானூர்தியில் பொருத்தி, வானூர்தியின் மூக்குப் பகுதியில் உள்ள விசேட கட்டுப்பாட்டுக் கருவி மூலம் சீரொளியை தேவைக்கு ஏற்ப பாய்ச்சி எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க முடியும்.
இதில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி இரசாயன ஒக்சிசன் அயடீன் சீரொளி (Chemical Oxygen Iodine Laser) பல ஆயிரக்கணக்கு அலகுள்ள வலுவை உருவாக்கக் கூடியது. அவ்வலுவைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் அனைத்து வகை ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க முடியும் என்று இதனை வடிவமைத்துள்ள அமெரிக்க இராணுவ பொறியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அதி நவீன இரசாயன லேசர் வானூர்தியைக் கொண்டு எதிரி நாட்டு திரவ எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 600 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும்.. திண்ம எரிபொருள் கொண்டியங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 300 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும் வைத்து தாக்கி அழிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மற்றும் வட கொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக எழக் கூடிய ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை சமாளிக்க இது அவசியம் என்று அமெரிக்க பெளதீகத்துறை இராணுவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கையும் பலத்தையும் இந்த தொழில்நுட்பம் இன்னும் அமெரிக்கா பக்கம் உயர்த்தவே வழி செய்யும்..
வானூர்தியைக் கண்டுபிடிப்பதற்காக எடுத்த ஆரம்ப கட்ட முயற்சிகளிலேயே பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. உயர்ந்த மலைமேடுகளிலிருந்தும் உயரமான கட்டிடங்களிலிருந்தும் வானூர்திகளைப் பறக்கவிட்டு ஆய்வுகளை நடாத்திய சந்தர்ப்பங்களில் பல விபத்துக்களும் சேதங்களும் நிகழ்ந்துள்ளன.
ஆனாலும் 1920 களில் பயணிகள் வானூர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தான் வானூர்தி விபத்துக்கள் அதிகரிக்கத் துவங்கின. 1923 ஆம் ஆண்டில் வானூர்தி விபத்துக்களில் பலியானோரின் எண்ணிக்கிகை முதற்தடவையாக நூறைக் கடந்தது.
2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பாரிய வானூர்தி விபத்துக்கள் நடக்காத போதிலும் 2009 ஆம் ஆண்டு Air France நிறுவனத்தின் வானூர்தி அட்லான்டிக் சமுத்திரத்திற்கு மேலால் பறந்தபோது புயலில் அகப்பட்டு கடலில் வீழ்ததில் 228 உயிர்கள் பலியானார்கள்.
வானூர்தியைக் கண்டுபிடிப்பதற்காக எடுத்த ஆரம்ப கட்ட நடவடிக்கையின் போது ரைட் சகோதரர்களின் ஒருவரான Orville Wright செலுத்தும்போது உந்துகணை (Propeller) வெடித்து வானூர்தியில் மோதியதால் ஏற்ப்பட்ட விபத்தில் Orville Wright படுகாயமடைந்தார். இது தான் உலகின் முதல் வானூர்தி விபத்தாகும்.
உலகில் அதிகளவில் உயிர் இழப்புகளை ஏற்படுத்திய வானூர்தி விபத்தானது அமெரிக்காவில் நடந்த 11/9 தீவிரவாத தாக்குதல் ஆகும். இதில் 3,000 திற்கு அதிகமானோர் பலியானார்கள்.
உலகம் முழுதும் கடந்த 13 ஆண்டுகளில் நடந்த 2000 வானூர்தி விபத்துக்களில் 17,000 க்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக ஜெனிவாவில் உள்ள வானூர்தி விபத்து பதிவு அலுவலகம் (Aircraft Crashes Record Office) தனது பதிவை மேற்கோள் காட்டி அறிவித்துள்ளது.
வானூர்தி விபத்துக்கான வானிலை மற்றும் வானியக்கவியல் (Aerodynamics) காரணங்ள்........
நமது வளிமண்டலமானது பின்வரும் ஐந்து மண்டலங்களால் ஆனது
Troposphere / மாறன் மண்டலம் :- 7 கி.மீ தொடக்கம் 17 கி.மீ வரை,
Stratosphere / படைமண்டலம் :- 17 கி.மீ முதல் 50 கி.மீ வரை
Mesosphere / இடை மண்டலம் :- 50 கி.மீ முதல் 80 - 85 கி.மீ வரை
Thermosphere / வெப்பமண்டலம் :- 80 - 85 கி.மீ முதல் 640+ கி.மீ வரை
Exosphere / புறவளி மண்டலம்
மாறன் மண்டலத்தில் தான் மேகங்கள், மழை மற்றும் பிற வானிலை மாற்றங்கள் அதிகமாக நிகழும். இங்கு காற்றின் அடர்த்தி, வேகம் என்பன அதிகமாக இருப்பதால் பறப்பதற்கு அதிக எரிப்பொருளும் செலவாகும்.
படை மண்டலத்தில் மேகம், மழை எல்லாம் இல்லாவிடினும் மின்னல் மற்றும் பனி பொழிவு இருக்கும். அத்துடன் குறைவான அடர்த்தியில் காற்று இருப்பதால் வானூர்தி பறப்பதற்கு எரிப்பொருள் குறைதளவே செலவாகும்.
படை மண்டலத்தில் 35000 அடி உயரத்திலேயே பயணிகள் வானூர்திகள் (commercial airlines) இயக்கப்ப்டுகின்றன இங்கு உள்ள வானியக்கவியல் ஆபத்து தான் வானூர்தி விபத்துகளுக்கு பெரும்பாலும் வழிவகுப்பது.
வானியக்கவியல் ஆபத்து இங்கு சிறியதும் பெரியதுமான வளி வெற்றிடங்கள் (Air Pockets) காணப்படும். சில நேரங்களில் பெரிய வளி வெற்றிடத்தில் போதுமான காற்று இல்லாமல் இயந்திரம் நின்றுவிடும் சந்தர்ப்பம் உள்ளது. அதைத் தவிர்பதர்க்கு வானோடி இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவார். அப்படியே நின்றாலும் உடனே இயந்திரத்தை இயக்கிவிடுவார். இதற்காகவே வானூர்தி இயந்திரங்கள் பல முறை சோதிக்கப்படும். சோதனைகள் சரியாக இருந்தால் மட்டுமே அந்த இயந்திரத்திற்கு அனுமதி கிடைக்கும்.
மேலும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளப்பகுதியில் காற்று சென்று மோதும் போது அவை அப்படியே மேல் எழுந்து படை மண்டலம் வரைக்கும் செல்லும், அப்படிப்பட்ட காற்று அலையை வானூர்தி கடக்கும் போது வானூர்தியின் எடையை சம நிலையில் வைத்திருக்கும் இறக்கையின் தூக்கு விசை பாதிப்புக்குள்ளாகி வானூர்தியின் வானியக்கவியல் பாதிக்கப்படும்.
பயணிகள் வானூர்தி ஆனது காற்றில் ஒலியின் வேகத்தை விட குறைவான வேகத்தில் பயணிக்கும் வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வானூர்தியின் பாதுகாப்பான வேகம் "Mach 0.86" ஆகும். இதனால் வானூர்தியின் வேகம் எப்பொழுதும் ஒலியின் வேகத்தினை (mach speed)தாண்டாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
குறைவான வேகத்தில் ஓட்டினால் காற்றோடையினால் பாதிக்கப்படும் அத்துடன் அந்த உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவானதால், அதனை சமாளிக்க கண்டிப்பாக ஒரு குறைந்த பட்ச வேகம் இருக்க வேண்டும். அத்துடன் போதுமான மிதப்பு விசை கிடைக்க வேகமாக இயக்க வேண்டும், ஆனால் ஒலியின் வேகத்தை தொடக்கூடாது என்பதே வணிக வானூர்திகளுக்கான வானியக்கவியல் கட்டுப்பாடு ஆகும். வானூர்தி ஒலியின் வேகத்தில் பறக்கும் போது காற்று முகப்பிற்கும், வானூர்தியின் மூக்குப் பகுதிக்கும் இடையில் இடைவெளி இருக்காது. வானூர்தி வேகமாகச் சென்று முகப்பின் மீதே மோதும் இதனால் காற்றில் சீர்குலைவு ( sonic boom and turbulence ) ஏற்படும். இது இறக்கையின் மீது மோதும் காற்றின் வேகத்தினைக்குறைக்கும்.
இந்த நிலையில் வானோடி இறக்கையில் மோதும் காற்றின் வேகத்தை அதிகரிக்க காற்று மோதும் கோணத்தினை (angle of attack)உயர்த்துவார் இதனால் இறக்கையின் மீதாக கடக்கும் காற்றின் வேகம் கூடும், மோதும் கோணம் அதிகம் உயர்த்தப்பட்டால் வானூர்தி கீழ் நோக்கி இறங்கும்,சிறிது நேரத்தில் சரி செய்யவில்லை எனில் வானூர்தி செங்குத்தாக விழுந்து விடும். இதனை stall என்பார்கள். இதனால் தான் ஒலியின் வேகத்தினை தொடும் எல்லையை சவப்பெட்டி முனை (coffin corner or q corner)என்பார்கள். காற்றின் அடர்த்தி குறைந்தால் அதற்கு ஏற்ப வானூர்தியின் வேகத்தை மற்றும் காற்று மோதும் கோணத்தை மாற்ற வானோடியால் முடியாது அப்படி செய்தால் வானூர்தி மிதப்பு விசையை இழக்கும். சில சமயங்களில் காற்று ஓடைகளை வேகமாக இழுத்து செல்லும் அப்போது சரியாக வேகத்தினைக்கட்டுப்படுத்த வேண்டும் இல்லை எனில் ஒலியின் வேகத்தினை தொடுவதால் வானூர்தி மிதப்புவிசையை இழக்க நேரிடும். 35000 அடி உயரத்தில் வானூர்தி பறப்பதில் இத்தகைய அபாயம் இருந்தும் பறக்க ஒரே காரணம் எரிப்பொருள் குறைவாக செலவாகும் என்பது தான்.
மேலும் பனிப்பொழிவு, இடி மின்னல் போன்றவை படைமண்டலத்தில் இருந்தே கீழ் நோக்கிப்பாயும் அதிலும் சிக்க வாய்ப்புள்ளது.அதனால் கட்டுப்பாட்டுக்கருவிகள் செயலிழந்து போக நேரிடும். அதுவும் விபத்துக்கு வழி வகுக்கும். வானூர்திகளில் 50 கி.மீக்கு முன்னால் உள்ள வானிலையை காட்டும் ரேடார் உண்டு. அவை இடி ,மின்னல், பனிப்பொழிவினை சுட்டிக்காட்டும்.
இது போன்ற முன்னறிவிப்புகள்,காற்றின்,வேகம் , உயரம் எல்லாம் தானாகவே கறுப்புப்பெட்டியில் பதிவாகிவிடும், இதனால் தான் விபத்துக்கான காரணம் கருப்புப்பெட்டியில் கண்டுபிடிக்கலாம்.