பழமொழி.....

Wednesday, November 23, 2011

குட்டி ரோபோ வானூர்தி.....



இதன் எடை மிகவும் குறைவு என்பதால் இதனை குட்டி ரோபோ வானூர்தி என்று அழைக்கலாம். இதன் நீளம் 80 சென்டி மீட்டர்தான் இந்தக் குட்டி ரோபோட்டின் நீளம். இதனை சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடட்டைச் (The Swiss Federal Institute) சேர்ந்த ஜீன் கிரிஸ்டோப் மற்றும் டேரியோ ப்ளோரீனோ என்ற ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த குட்டி பறக்கும் ரோபோட் வானூர்தி மிகவும் சிக்கலான இடங்களில் அதாவது குகை, சுரங்க வழிப்பாதை போன்றவைகளில் எந்த இடத்திலும் மோதாமல் பறக்கும் தன்மைக் கொண்டது. இதுபோன்ற இடங்களில் மீட்புப் பணி மற்றும் தேடும் பணிக்கு மிகவும் உதவிகரமாக இந்த மிகச்சிறிய பறக்கும் ரோபோட் இருக்கும். இதன் சிறப்பம்சமே எந்த இடத்திலும் மோதாமல் தானாகவே சரி செய்து கொள்ளும் ஆற்றல்தான்.
இதனை ஆராய்ச்சியாளர்கள் கார்பன் இழைகள், மிக லேசான பிளைவுட் மற்றும் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பிலிம்களால் தயாரித்துள்ளனர். இதனுடைய வால் மற்றும் இறக்கைகள் பிளாஸ்டிக் ப்லிம்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இறக்கைகளின் முனைகளிலும் முறையே இரண்டு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மிகுந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 30 கிராம் எடையுள்ள பறக்கும் ரோபோட்டின் இறக்கையில் கேமிரா என்றால் அது எவ்வளவு நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
விமானத்தின் முன்புறமும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இக்கேமிரா ஒரு வினாடியில் 20ல் பங்கு நேரத்தில் எதிரே தட்டுப்படும் சுவரோ மற்றும் பொருளையோ படம் எடுத்து உடனடியாகக் கணக்கிட்டு மோதலை தவிர்க்கக்கூடியது. இதன் அடுத்தக்கட்டமாக ஆராய்ச்சியாளர்கள் இதைவிட மிகச்சிறிய அதாவது அதிகபட்சம் 12 கிராம் எடை மற்றும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள பறக்கும் மிகச்சிறிய ரோபோட்டை தயாரிக்கும் பணியில் உள்ளனர்.
The Swiss Federal Institute of Technology has developed an ultralight robotic aircraft that mimics the navigational abilities of a fly. The plane is completely autonomous, weighs 10 grams and has a 14 inch wingspan. It is designed to fly indoors, which is difficult because of the many potential obstacles. It can fly around a room completely unassisted for nearly five minutes.


Monday, November 21, 2011

மோபி ஏர்.. (MobyAir)


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள வோர்ல்ட் வைட் ஏரோஸ் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் (worldwide aeros corporation california)  இந்த பறக்கும் கப்பலை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் உலகிலேயே வானூர்தி தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவம் மற்றும் தனி நபருக்கான வானூர்தி, சொகுசு வானூர்தி என்று பல நவீன ரக வானூர்திகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
தற்போது தயாராகி வரும் பறக்கும் சொகுசு கப்பல் ‘பறக்கும் குயின் மேரி-2  என்று வர்ணிக்கிறார்கள். அதாவது தற்பொழுது உலகிலேயே பெரிய பயணிகள் சொகுசு கப்பலாக ‘குயின் மேரி-2′ உள்ளது இந்த கப்பல் பறந்தால் எப்படியிருக்குமோ அது போல இந்த நவீன வானூர்தி இருக்கும் என்பதால் இது இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது.
மோபி ஏர் (MobyAir) என்று பெயரிடப்பட்டுள்ள இதனுடைய அளவு என்ன தெரியுமா? சுமார் ஒரு ஏக்கர். அதாவது இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவிற்கு இது சமமானது.
இதனுடைய உயரம் 165 அடி. அதாவது சுமார் 8 மாடிக்கட்டிடம் உயரம் கொண்டது. அகலம் 244 அடி, நீளம் 647 அடி கொண்டது. 6ஆயிரம் மைல் தூரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 250 பயணிகள் தங்கள் வீட்டில் இருப்பது போன்ற வசதிகளை அனுபவித்தபடி பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
இக்கப்பலை வடிவமைக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் இகோர் பாஸ்டர்னாக் கூறுகையில், “பயணிகள் கப்பலை தயாரிக்கும் பல நிறுவனங்கள் இப்பெரிய விமானத்தை தயாரிக்கும் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான மைல்கள் செல்லும் இந்த பறக்கும் (கப்பல்) வானூர்தி மணிக்கு 174 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. 18 மணி நேரத்தில் அமெரிக்காவையே வலம் வந்துவிடும்” என்கிறார்.
8 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போதே பயணிகள் முக்கிய நகரங்களையும், பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களையும், புகழ்பெற்ற வானுயர்ந்த கட்டிடங்களையும் கண்டுகளிக்கலாம்.
மேலும் வானூர்தியின் உள்ளேயே சொகுசு விருந்தினர்கள் அறைகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் முதலியவை இருக்கும். இதில் பயணம் செய்யும் போது ஒரு உல்லாசக் கப்பலில் இருப்பது போன்ற உணர்வு தான் இருக்கும். இதனுடைய இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மோபி ஏர் உலங்குவானூர்தி போலவே செங்குத்தாக மேலெழும்பவும், கீழிறங்கவும் கூடியது. இது புறப்பட ஓடுதளம் (RunWay) தேவையில்லை.
உள்ளே இருக்கும் பயணிகளுக்கு வானூர்தி பறக்கும் சப்தம் கேட்காத வகையில் உந்து சக்தி இயந்திரங்கள் வானூர்தியின் பின் புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வானூர்தி பறக்க ஹைட்ரஜன் எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. உள்ளே பயணிகளின் நடமாட்டம் மற்றும் வானூர்தியின் வெளிப்புற காலநிலை மற்றும் அழுத்தம் இவைகளை ஈடுகட்டும் விதமாக நவீன தொழில் நுட்பத்துடன் மிதவை முறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பறக்கும்போது வானூர்தியின் எடையை சமாளிக்கும் விதமாக இதனுடைய தானியங்கி முறைகள் மூலம் வெளிப்புறத்திலிருந்து காற்றை உள்வாங்கி அதற்கேற்ப சுருக்கி வானூர்தி முழுவதும் கொடுக்கிறது. மேலும் இந்த வானூர்தியை அவசர காலத்தில் பனிக்கட்டி நிறைந்த தரையிலும், தண்ணீரிலும் தரையிறக்க முடியும்.

                              A FLYING QUEEN MARY-2 

 AEROSCRAFT is not a BLIMP!    It’s a sort of a flying cruise ship that could change the way you think about air travel.  When the first one is completed in 2010, it will ferry pampered passengers across continents and oceans as they stroll leisurely about the one-acre cabin or relax in the staterooms.
     
Unlike its dirigible ancestors, the AEROSCRAFT is not lighter than air.  It’s 14 million cubic feet of helium hoist only two-thirds of the craft’s weight.  The rigid and surprisingly aerodynamic body, driven by hugh rear-ward propellers, generates enough additional lift to keep the 400-ton payload aloft while cruising. 
     
Even though the AEROSCRAFT  dwarfs the largest commercial airliners, it requires less net space on the ground because it doesn’t need a runway.  The airship takes off and lands like a helicopter, straight up and down.  Six turbo-fan jet engines push the ship up or ease its descent.
     
The craft will have a range of several thousand miles, and with an estimated top speed of 175 MPH, it will traverse the continental United States nonstop in 18 hours.
     
During the flight, passengers will view national landmarks just 8,000 feet below, or they can enjoy the amenities aboard, such as luxury staterooms, restaurants, even a casino.
                       AEROSCRAFT — UP, UP AND AWAY!





Wednesday, November 16, 2011

Elastic Wing (எலாஸ்டிக் இறக்கை)


F-A 18 ரக போர் வானூர்தி


வானூர்திகள் தயாரிப்பதில் புகழ் பெற்ற ‘போயிங்’ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’ ஆகியவை இணைந்து இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தின. இந்த ஆய்வுக்காக அமெரிக்க ராணுவத்தின் F-A 18 ரக போர் வானூர்தியை எடுத்துக் கொண்டனர். இந்த வானூர்தியின் கணணி கருவிகள், இறக்கை அமைப்புகள் போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வந்து சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆய்வுத் திட்டத்துக்கு ‘வானூர்தி பொருள் மீள்மையியல் இறக்கைத் திட்டம்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஆய்வின் மூலம் வானூர்தி இறக்கை வடிவமைப்பில் இருந்து வரும் தொழில் நுட்பங்களை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளனர்.

சாதாரணமாக வானூர்திகள் பறக்கும் போது இடது அல்லது வலது புறமாக திரும்ப வாலிற்கு மற்றும் பிளாப்ஸ் (Flaps) போன்ற கட்டுப்பாட்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வானூர்தியின் இறக்கையின் முன் மற்றும் தொடர் முனைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.




இந்த கட்டுப்பாடு சாதனங்கள் மேலும், கீழும் இயக்கப்பட்டு இதன் மூலம் மாறுபடும் இறக்கையின் தூக்கு விசையினால் வானூர்தி இடமாகவோ, வலமாகவோ திரும்புகிறது.

ஆனால் புதிய ‘எலாஸ்டிக் இறக்கை’ முறையில் விமானியின் (கணணி) கட்டளைக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மை கொண்ட இறக்கைகள் இடது_வலது என வளைந்து கொள்ளும். இதன் காரணமாக வானூர்தி இறக்கைகளில் வாலிறகு மற்றும் ‘பிளாப்ஸ்’ பொருத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் வளையும் தன்மை கொண்ட இறக்கை மூலம் வானூர்தியின் மொத்த எடையில் கணிசமான பகுதி குறைகிறது. வானூர்தியின் எடை குறைய குறைய எரிபொருள் செலவும் குறைகிறது.




உதாரணமாக ஒரு ஜாம்போ ஜெட் (Jambo Jet) விமானத்தின் மொத்த எடையில் 10 சதவிகிதம் குறைத்தால் அந்த விமானத்திற்கு ஒரு ஆண்டுக்கு ஆகும் எரிபொருள் செலவில் ரூ.6 கோடியே 58 லட்சம் மிச்சமாகும்.

‘எலாஸ்டிக் இறக்கை’ திட்டத்தின் ஆய்வுப் பணிகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட சோதனைகள் கடந்த வருடம் நடந்தது. இதில் jவானூர்தியை கட்டுப்படுத்துவதற்கு இறக்கைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இறக்கையில் ஸ்டிரெயின் காஜ் பயன்படுத்தி அதன் இயக்கங்களை கண்காணித்தனர்.

எலாஸ்டிக் இறக்கைகள் பொருத்தப்பட்ட F-A 18 வானூர்திகளின் இயக்க சோதனை விரைவில் நடக்க இருக்கிறது. இந்த சோதனை தொடங்கும் முன்பு ‘கணணி மூலம் வானூர்தியை கட்டுப்படுத்தும் முறை’யின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானிக்கு எந்த ஒரு பயமும் இன்றி வானூர்தியை இயக்கும் ஆர்வம் ஏற்படும்.




F-A 18 வானூர்தியில் மோட்ட ரோலா 68040 ரக சி.பி.யு. பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 18 சி.பி.யு.க்கள் ஒருங்கிணைந்து வானூர்தியின் இயக்கத்தை கண்காணித்து கட்டுப்படுத்தும். ஒரு வேளை கணனியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் விமானிக்கு அது உடனே தெரிவிக்கப்படும். இதையடுத்து அவர் வானூர்தியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இயக்கும் வசதிகளும் பொருத் தப்பட்டுள்ளது...

Sunday, November 13, 2011

வானூர்தியில் கணணி மென்பொருட்கள்...



 வானூர்திகள் ஓடுதளத்தில் இருந்து பறக்க தொடங்குவது முதல் தரை இறங்குவது வரை அனைத்து செயல்களும் கணணி வழிகாட்டுதலில் அதன் கட்டுப்பாட்டிலும் தான் இயங்குகின்றன. நடுவானில் பறக்கும் பொது  ‘Auto Pilot’ தானியங்கி வானோடி என்ற வசதியை பயன்படுத்தி விமானியின் உதவி இல்லாமல் தானாகவே வானூர்திகள் செயல்படும் வசதி முழுக்க முழுக்க கணணி உதவியுடன் தான் செயல்படுகிறது. வானூர்திகளில் பயன்படுத்தப்படும் கணணி கருவிகள் மற்றும் கணணி மென்பொருள்கள் போன்ற தகவல்கள் பாருங்கள்.
விமானங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் மென்பொருட்கள்......
விமானங்களில் பயன்படுத்தப்படும் கணணி மற்றும் மென் பொருட்களில் காலதாமதம், செயலற்று போதல் போன்றவை இருக்க கூடாது.
சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வேண்டும் என்று விமானி கட்டளையிட்டால் அதை ஏற்று உடனே செயல்படும் வகையில் விமானகணணி மற்றும் அதன் மென்பொருட்கள் இருக்க வேண்டும். விமானியின் கட்டளையை எவ்வளவு துரிதமாக முடிக்க வேண்டுமோ அவ்வளவு வேகமாக முடித்து அடுத்த கட்டளையை நிறைவேற்றத் தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற நேர நிர்ணயத்தையும் வானூர்தி கணணி மற்றும் அதன் மென்பொருட்கள்களே செய்கின்றன. விமானி தொடர்ந்து கட்டளைகளை பிறப்பித்தவுடன் கணணி  அதை ஏற்று வரிசைப்படுத்திக் கொள்ளும். பின்னர் ஒவ்வொரு கட்டளையாக நிறைவேற்றும். வேலையின் தரத்துக்கு ஏற்ப 2.2 மில்லி விநாடி முதல் 6.25 மில்லி விநாடி நேரத்துக்குள் இந்த பணிகள் செய்து முடிக்கப்படும்.
ஒரு பணியை செய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதில் மாற்றம் கொடுக்கும் வரை பழைய கட்டளைப் படியே கணணி தொடர்ந்து செயல்படும். அதாவது சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் 75 டிகிரி தென் கிழக்கு திசையில் பறக்க மணிக்கு 500 km வேகத்தில் வேண்டும் என்று விமானி கணனிக்கு கட்டளையிட்டால் அதை ஏற்று உடனடியாக கணனி செயல்படும். இந்த கட்டளைக்கு ஏற்ப வானூர்தி இயந்திரத்தின் செயல்திறன் மணிக்கு 500 km வேகம் கொண்டதாக மாற்றப்படும். குறிப்பிட்ட உயரத்தில், திசையில் பறக்கும் வகையில் மற்ற கருவிகளும் இயங்கத் தொடங்கும். விமானி புதிய கட்டளையை கொடுக்கும் வரை இந்த பழைய உத்தரவுப்படியே வானூர்தி பறக்கும்.
விமான கணனிக்கு என்று சில மென் பொருள்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்ரு மெண்ட்ஸ் ஆப் ஆஸ்டின் என்ற நிறுவனம் தயாரித்த மேட்ரிக்ஸ்  மென்பொருளாகும். பல்வேறு சிக்கலான ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு சாதனம் மற்றும் வானூர்தியின் பிற கட்டுப்பாட்டு கருவிகளிடம் இருந்துபெறப்படும் தகவல்கள் அனைத்தும் வரிசைப்படுத்தப்படுகின்றன. இதன் அடிப்படையில் வானூர்தியில் உள்ள கருவிகளின் செயல் திறன் கண்காணிக்கப்படுகிறது. மேலும் விமானியின் கட்டளைக்கு ஏற்பவும் வானூர்தி கருவிகளின் தகவல்களுக்கு ஏற்பவும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் இந்த மேட்ரிக்ஸ் மென்பொருள்  வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக கிழக்கு திசையில் 37 டிகிரியில் 7 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு விமானம் பறந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அப்போது விமானி தென்கிழக்கு திசையில் 42 டிகிரியில் 8 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறார்.
விமான கருவிகளில் இருந்து பெறப்பட்டுள்ள தகவல் மற்றும் விமானியின் கட்டளை இரண்டையும் மேட்ரிக்ஸ் மென்பொருள் ஒப்பிட்டு பார்க்கும். பின்னர் விமானியின் கட்டளைக்கு ஏற்ப தற்போது பறக்கும் உயரம், திசையில் எவ்வளவு மாற்றம் தேவை என்பதை கணக்கிட்டுக் கொள்ளும். பின்னர் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப பறக்கும் கட்டளையை கருவிகளுக்கு கணணி அனுப்பும். இந்த செயல்கள் அனைத்தும் மில்லி செகண்டுகள் நேரத்தில் நடந்து விடுகிறது. இத்தகைய மென்பொருள் துரிதமாகவும் சிக்கல்கள் இல்லாமலும் செயல்படுவதால் வானூர்தியின் பாதுகாப்பான இயக்கம் உறுதி செய்யப்படுகிறது.
சிறப்புகள்
மற்ற மென்பொருளில் இருப்பது போன்ற குழப்பம் விளைவிக்கும் பல தொகுப்புக்கள் இந்த ‘மேட்ரிக்ஸ்’ மென்பொருட்களில் இல்லை. வானூர்தி கணணி வன்பொருள்(Hard ware) மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டு அதில் மென்பொருள் ஏற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் ஆய்வுக் கூடத்தில் நடத்திப் பார்த்த பின்னரே வானூர்திகளில் பொருத்தப்படுகிறது.
பறக்கும் பொது விமானி கொடுப்பது போன்ற கட்டளைகள் ஆய்வுக் கூடத்திலும் கொடுக்கப்படுகின்றன. அதே போல் கணணி கட்டளைக்கு ஏற்ப வானூர்தியின் இறக்கை, சுக்கான் மற்றும் சக்கரம் போன்ற  பகுதிகள் சரியாக இயங்குகின்றனவா என்று சோதனை செய்து பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் வானூர்தி கணணி மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
வானூர்தி மென்பொருட்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் மொத்தமாக சோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. அவ்வாறு செய்தால் மென்பொருள்களில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் அதைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிக்கலான காரியமாகும். இதற்கு பதிலாக வானூர்தி மென்பொருள்கல் தனி 420 கூறுகளாக பிரிக்கப்பட்டு பின் ஒவ்வொரு தனித்தனியே சோதனைகள் மேற்கொள்ள ப்படுகிறது.
ஒவ்வொரு கூறுகளும் ஒன்றே அல்லது அதற்கு மேற்பட்ட எளிதான செயல்களை கொண்டிருக்கும். பிரத்தியேக தவறு முக்கால் பாங்கு (Debugging Mode) ஒன்றை விமான கணினிக்குப் பொருத்தப்பட்டது. இதன் மூலம் தனித்தனி கூறுகளை ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியது. பலரக உள்ளீட்டுக் கட்டளைகளை உட்செலுத்தபட்டு இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வகை தனித்தனி கூறுகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகு மிகப் பெரிய அளவில் இவற்றை இணைத்து சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கடுத்தப்படியாக சோதனை வானோடிகள் (Test Pilot) கொண்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இது இரண்டாவது கட்ட சோதனையாகும். இதில் திறன் மிகுந்த பாவனைக் காட்டிகள் (Simulatros) பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனை போயிங் நிறுவனத்தில் செயிண்ட் லூயிஸ் பிரிவில் மேற்கொள்ளபடுகிறது.  HILS (Hardware In the Loob Simulators)I F/A 1-8 வானூர்தியின் உண்மையான விமானி அறையேடு புதிய வானூர்தி கட்டுபாட்டு கணினி இணைக்கப்படுகிறது. இதில் முக்கியமான செயல்பாடு என்னவென்றால் விமானிகள் சோதனை வானூர்தி முறையிலிருந்து மூலவிமான கணினி CPUக்குமாற்றும் போது கட்டுபாட்டை இழக்காமல் இருப்பதை HILS உறுதி செய்கிறது. ஜுலை மாத மத்தியில் AAW மென்பொருள்களின் இறுதிக்கட்ட சோதனைகள் நாசாவின் டிரெய்டென் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் வானூர்தி சரியாகத்தான் இயங்கியது என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, டிரெய்டென் சோதனைத் தளத்தில் வானூர்தியில் பழுது ஏற்பட்டால் மேற்கொள்ளவேண்டிய மென்பொருள்களின் நடவடிக்கைகள் சரிபார்க்கபடுகிறது. இந்த வானூர்தி மென்பொருள் மேம்படுத்தப்பட்ட சோதனை முறைகள் இம்மாதத்தில் நடைபெறவிருக்கின்றன. இதில் சோதனை விமானிகள் FA 1-8 விமானத்தை (மீள் நிகழ் இறக்கைகள் பொருத்தப்பட்ட) ஒட்ட இருக்கிறார்கள். வானூர்தியின் இயக்கங்கள் நிலப் பரப்பிலிருந்து கண்காணிக்கப்பட்டாலும் விமானியும் வானூர்தியும் தன்னிச்சையாகவே செயல்படுவார்கள்.
நடுவானில் சாகசம் காட்டும் FA 1-8 போர்விமானம்....

இவ்விதமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சோதனைகளின் முடிவைக் கொண்ட  AAW திட்டத்தின் அடுத்த நடவடிக்கைகள் அமையும். இதற்கு அடுத்தக்கட்டத்தில் Flaps இல்லாமல் விமானத்தை திருப்புவதற்கேதுவான இறக்கைகள் வடிவமைக்கப்படும். இதில் இறக்கைகளின் குறைவான எடை மிகவும் சாதகமாக அமையும், இதற்கும் அடுத்தக்கட்டமாக வரப்போவது மார்பிள் இறக்கைகள் எனப்படுவது. இவ்விறக்கைகள் விமானம் ஆகாயத்தில் பறக்கும் பொது சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைத்தானே முடுக்கிக்கொள்ளும் விதமாக அமையப்போகிறது. இதன் மூலமாக மிகுந்த எரிபொருள் சேமிப்பும் மிகச்சிறந்த பறக்கும் திறனும் எதிர்கால வானூர்திகள் கொண்டிருக்கப்போகின்றன. மேலும் மற்ற சாதாரண வானூர்திகளில் இருக்கும் வாலிறகு, சுக்கான்கள் மற்றும் Flaps தேவைகள் அகற்றப்பட்டு ஒரு பறவை போல் இருக்கும்

Wednesday, November 9, 2011

உலகின் பெரிய உலங்குவானூர்திகள் - 4

7 Hughes XH-17
50,000 இறாத்தல் (22,680 kg)



இது  உலகின்  ஏழாவது பெரிய உலங்குவானூர்தி  ஆகும். இது XH-17 பறக்கும் கொக்கு  என்று அழைக்கப்படும். அதிக செலவினால் இதன் உற்பத்தி ஒன்றுடன் நிறுத்தப்பட்டது. இது 1940 இல் இருந்து கட்டுமான ஒரு ஆராய்ச்சி வாகனமாக பயன்படுத்தப்படுகிறது.



RoleHelicopter
ManufacturerHughes Helicopters
First flight23 October 1952
RetiredDecember 1955
StatusScrapped
Number built1






8. Sikorsky CH-54
 47,000 இறாத்தல் (21,320 kg)


இது  உலகின்  எட்டாவது பெரிய உலங்குவானூர்தி  ஆகும். இது அமெரிக்காவின்  உற்பத்தியாகும். இது தீயணைப்பு துறையில் மிகவும் சிறப்பாக செயல்ப்படுகிறது.

RoleHeavy-lift cargo helicopter
ManufacturerSikorsky Aircraft
First flight9 May 1962
Statusretired
Primary userUnited States Army
Number built105
VariantsS-64 Skycrane


Monday, November 7, 2011

உலகின் பெரிய உலங்குவானூர்திகள் - 3

5. Sikorsky CH-53E 
73,500 இறாத்தல் (33,340 kg)
இது  உலகின்  ஐந்தாவது பெரிய உலங்குவானூர்தி  ஆகும் இது அமெரிக்க இராணுவத்திடம்  உள்ள மிகப்பெரிய ஹெலிகாப்டர் ஆகும். இது  கடல் டிராகன் என அழைக்கப்படுகிறது.



RoleHeavy-lift cargo helicopter
ManufacturerSikorsky Aircraft
First flight1 March 1974
Introduction1981
StatusActive service
Primary usersUnited States Marine Corps
United States Navy
Japan Maritime Self-Defense Force
Number built≈115
Unit costUS$24.36 million (1992) average[1]
Developed fromCH-53 Sea Stallion
Developed intoSikorsky CH-53K





6. Boeing Vertol MH-47E/G 
54,000 இறாத்தல் (24,495 kg)



இது  உலகின்  ஆறாவது பெரிய உலங்குவானூர்தி  ஆகும். 1960 களின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட இவ்வகை உலங்குவானூர்திகள் 170 நொட்ஸ்                      
வேகத்தில் பறக்கவல்லதாகக் காணப்பட்டன. இவ்வேகம், அப்போது பயன்பாட்டிலிருந்த ஏனைய தாக்குதல் உலங்குவானூர்திகளைவிட அதிகமானதாகும். அதுமட்டுமன்றி அக்காலத்திற் பயன்படுத்தப்பட்டு, தற்போதும் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் காணப்படும் ஒருசில வானூர்திகளில் இவ்வானூர்தியும் ஒன்றாகும்.
இவ்வகை வானூர்திகள், இராணுவப் பயன்பாட்டில் பிரதானமாக துருப்புக்களை இடம்நகர்த்துதல், முன்னணி நிலைகளுக்கான வழங்கல்களை மேற்கொள்ளல் மற்றும் கனரக ஆயுத, வாகனங்களை இடம்நகர்த்துதல் போன்ற செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.


RoleTransport helicopter
National originUnited States
ManufacturerBoeing Rotorcraft Systems
(Ridley Park, PA plant)
First flight21 September 1961
Introduction1962
StatusActive service, in production
Primary usersUnited States Army
Japan Ground Self-Defense Force
Royal Netherlands Air Force
See CH-47 operators for others
Produced1962 – present
Number builtover 1,179[1]
Unit cost$35 million (2008) average[2]
Developed fromVertol Model 107
VariantsBoeing Chinook (UK variant


Friday, October 14, 2011

விபத்தை தவிர்க்கும் உலங்குவானூர்தி


UNSW@ADFA gas-turbine powered helicopter.This helicopter is fitted with laser range finder, embedded vision sensor, GPS and Inertial Measurement Sensors.
   வானூர்தி என்றாலே எங்கேயாவது மோதி சிதறிவிடும் என்றுதான் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் இதனாலேயே வெளிநாட்டுப் பயணத்தையே தவிர்த்துவிட்டார்கள். இப்பொழுது நகரில் இருக்கும் வாகன நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு உலங்குவானூர்தி  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நெருக்கடி மிகுந்த நகரில் தரையிறங்குவது மிகக் கடினம்.
இம்மாதிரியான நிலைமைகளை தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சியை மேற்கொண்டுதானிருக்கிறார்கள். அமெரிக்காவின் பெர்க்லி நகரில் இருக்கும் லிபோர்னியா பல்கலைக்கழகம் ரோபோ காப்டர்ஸ் என்றழைக்கப்படும் USRA MAXIMA-2 என்ற விபத்தை தவிர்க்கும் ஆளில்லா உலங்குவானூர்திகளை தயாரித்துள்ளார்கள். இதன்மூலம் எதிர்காலத்தில் விபத்தை தவிர்க்கும் வானூர்திகள் கண்டுபிடிக்க முடியும். இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால், LASER RANGER FINDER  என்ற உணரி மூலம் எதிரே வரும் அல்லது எதிரே இருக்கும் பொருளை இந்த உணரியின் மூலம் கண்டுபிடித்து தன்னுடைய திசையை மாற்றிக்கொள்ளும். இது திசை மற்றும் கணினி கட்டுப்பாட்டுக் கருவிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு வானூர்தி அல்லது உலங்குவானூர்தி ஒரு இடத்திற்கு சென்றால் அது செல்லக்கூடிய பாதை எப்படிப்பட்டது? அதன் தன்மை, காலநிலை எவ்வாறு இருக்கும்? என்று ஆராய்ந்து பிறகு சென்றிறங்கக் கூடிய இடம் எப்படிப்பட்டது? என்றெல்லாம் ஆராய்ந்து பின் அதற்கேற்ற சாதகமான நிலை இருந்தால் மட்டுமே வானூர்தி பயணம் செய்யும். இல்லாவிட்டால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடுமையான மூடுபனி காலங்களில் வானூர்தி மலைகளில் மோதி நொறுங்க வாய்ப்புள்ளது. இவையெல்லாம் எதிர்பாராத விதமாகவோ அல்லது வானோடியின் கவனக்குறைவாகவோ இருக்கலாம்.
இல்லாவிட்டால் வானூர்தி செல்லும் பாதையில் மற்றொரு வானூர்தியோ அல்லது பறவைகளோ பறந்தால்கூட விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பறவை மோதி வானூர்தியில் கோளாறால் திடீரென தரையிரங்கியது. இவையெல்லாம் எதிர்பாராது நடக்கக் கூடியதுதான்.
இந்தவகை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏரோபாட் திட்டத்தில் (AEROBOT PROJECT) USRA MAXIMA-2 ) என்ற இந்த உலங்குவானூர்தியை  தயாரித்துள்ளது. எத்தனையோ நிறுவனங்கள் இந்த விபத்து தவிர்க்கும் வானூர்திகளை கண்டுபிடித்தாலும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஏரோபாட் நிறுவனம் எல்லாவற்றிற்கும் முதன்மையாக விளங்குகிறது. 12 அடி நீளமுள்ள ரோபோ காப்டர்ஸ்  என்றழைக்கப்படும் இந்த உலங்குவானூர்தி தன் எதிரே வரும் வானூர்தி அல்லது உலங்குவானூர்தி இவைகளை லேசர் கதிர் உணரியால் கண்டறிந்து தன்னுடைய பாதையை மாற்றிக்கொள்ளும் அல்லது திசையை திருப்பிக்கொள்ளும்.
அதாவது எதிரே பொருட்கள் தட்டுப்பட்டால் லேசர் உணரியால் ஒளிக்கற்றைகளை பாய்ச்சும். இதனால் எதிரே இருக்கும் பொருளிலோ அல்லது வானூர்தியிலோ மோதாமல்  விபத்தை தவிர்த்துவிடும்.எந்தவித முன் அனுபவமில்லாத இடத்திலும் அல்லது நெருக்கடியான நகரிலும் பறக்கக்கூடிய வல்லமைக் கொண்டது.
வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. எதிர் காலத்தில் வான் போக்குவரத்து நெருக்கடி, விபத்து இவைகளை தவிர்க்கும் பொருட்டு நவீன யுத்திகள் கொண்ட வானூர்திகள் உருவாக்கப்படுவது நிச்சயம்.