பழமொழி.....

Tuesday, June 25, 2013

நுளம்பு உளவாளி..



அமெரிக்க விஞ்ஞானிகள் நுளம்பு வடிவிலான வானூர்தி ஒன்றைத் தயாரித்துள்ளனர். இது முற்றிலும் ஒரு உளவாளியைப் போல் கண்காணிக்கும் திறனுள்ள மிகச் சிறிய ஆளில்லா
வானூர்தியாகும்.

இதனை இன்னும் தயாரித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து தூர இயக்கி (Remote Control) மூலமாக விரும்பியவாறு இயக்கலாம்.

இந்த நுளம்பு நவீனரக மிகச் சிறிய ஒளிப்படக்கருவி (Camera) மற்றும் ஒலிவாங்கி (Microphone) ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
நுளம்பு போன்று பறக்கும் மேற்ப்படி வானூர்தியை Remote மூலமாக நுளம்பைப் போலவே பறக்கச் செய்து கச்சிதமாக மனிதர்கள் மீது உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம்.

பின்னர் தமது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்தியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதி) எடுத்து விடலாம். முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரைப் பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த நுளம்பு வானூர்தியால் முடியும்.

சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடகவே பறந்து சென்று ஒருவரின் வீட்டிற்குள் நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.
அத்துடன், இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஓட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டுக்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

மேலும், அதிக திறமை வாய்ந்த இவ்வகை வானூர்திகள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும் தான் பெரிதும் பயன்படுகின்றன.

No comments: