பழமொழி.....

Friday, December 28, 2012

ஆளில்லா பயணிகள் வானூர்தி


ஆளில்லா போர் வானூர்திகள் இப்போது படைத் துறையில் பிரபலமாகிவிட்டன. இனி இந்தத் தொழில் நுட்பம் பயணிகள் வானூர்தியிலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது வானோடி இல்லாமல் வானூர்தி இயங்கப்போகிறது

இரட்டை இயந்திரம் கொண்ட பயணிகள் வானூர்தி ஒன்று பிரித்தானியாவில் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது. இது தரையில் இருந்து தொலைக் கட்டுப்பாட்டு மையம் (Remote Control), வானூர்தியில் அதிசக்தி வாய்ந்த உள்ள கணனிகள் மற்றும் காணொளிப் பதிவுக் கருவிகள் அத்துடன் செய்மதி தொலைத் தொடர்பு அமைப்பு (satellite communications) போன்றவற்றின் மூலம் பறக்க வைக்கப்பட இருக்கிறது. பிரித்தானிய அரசும் ஏழு வானூர்தி நிறுவனங்களும் இணைந்து 62 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றன. இத்திட்டம் Autonomous Systems Technology Related Airborne Evaluation and Assessment (ASTRAEA) என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டதில் முதலில் பறக்க விடும் வானூர்தி Jetstream எனப் பெயரிடப்பட்டுள்ளது. அது The Flying Test Bed எனவும் ஆழைக்கப்படுகிறது. தற்போது வானோடிகள் ஓட்டும் பல வானூர்திகளில் பல தானியங்கிக்கருவிகள் உள்ளன. வானூர்திகள் மேலெழுதல் தரையிறங்குதல் போன்றவை தானியங்கிகள் மூலமே செய்யப்படுகின்றன.

ASTRAEAஇன் Jetstreamஇல் உருவங்களை இனம் காணும் காணொளிப்பதிவு கருவிகள் முக்கிய பாகம் வகிக்கின்றன. வேறு வானூர்திகளில் மோதும் சூழல் உருவாக்கப்பட்டு அதில் வானோடியில்லா வானூர்திகள் எப்படி செயற்படுகின்றன என்றும் பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கிறது.

அத்துடன் இதில் 3 முக்கிய செயற்ப்பாடுகள் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது.

1)  Weather Avoidance Test.... (காலநிலையைச் சமாளித்தல்)


Cockpit இல் உள்ள electronic eye ஆக செயற்படும் காணொளி கருவி கணணி அமைப்புடனும், நிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும். weather avoidance system ஆனது செய்மதி மூலமும், காணொளி கருவி மூலமும் மேகம், முகில், மழை, காற்று, இடி, மின்னல், காற்றின் ஈரப்பதன், காற்றின் அடர்த்தி, காற்றின் அமுக்கம் போன்றவற்றின் துல்லியமான தகவல்களைப் பெற்று நிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு அறிவிப்பதுடன், தன்னிச்சையான முடிவுகளையும் எடுத்து காலநிலையைச் சமாளிக்கிறது.


2) Sense And Avoid Test...... (உணர்ந்து தவிர்த்தல்) 


காணொளி கருவி (Camera) மற்றும் வானூர்தியின் அடையாளம்காண் உணரி (Aircraft Identification Antenna) ஆகியவை இணைந்து செயற்பட்டு வானூர்திக்கு அண்மையில் உள்ள வானூர்திகள் மற்றும் வேறு பறக்கும் பொருட்களை இனம் கண்டு அதிலிருந்து விலகிகொள்வதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறது. Aircraft Identification Antenna சமிக்ஞைகளை வெளியிட்டு அதனை உள்வாங்கி கொள்வதன் மூலம் அயலில் உள்ளவற்றை உணர்கிறது. Camera அயலில் உள்ளவற்றை படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புகிறது.


3) Emergency Landing Test.. (அவசர தரையிறக்கம்)


வானூர்தி பயணங்களிற்கு அவசர தரையிறக்கம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் ஆளில்லா வானூர்தி பயணங்களில் அவசர தரையிறக்கம் என்பது முக்கியமானதும் சிக்கலானதும் ஆகும். தரையிறக்கும் இடத்தை கண்டு பிடித்தல், தரையிறக்கும் இடம் பாதுகாப்பானது என உறுதிசெய்தல் அதில் உள்ள தடைகளை தவிர்த்தல், ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக தரையிறங்குதல் போன்றவற்றை தீர்மானிக்கிறது.



வானோடிகள் இல்லாத வானூர்திகளை மலிவாக இயக்க முடியும். 2020ஆண்டு வானோடிகள் இல்லாத வானூர்திகள் ஐம்பது பில்லிய டாலர் பெறுமதியான விற்பனை வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Wednesday, December 5, 2012

Neuron வானூர்தி..


ஆறு ஐரோப்பிய நாடுகளின் Stealth தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா தாக்குதல் போர் வானூர்தியின் unmanned combat air vehicle (UCAV) முதலாவது பறப்பு 01/12/2012அன்று நடைபெற்றது. பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், ஸ்பெயின், கிரேக்கம், சுவிற்சலாந்து ஆகிய 6 நாடுகள் இத்திட்டத்தில் இணைந்திருந்தன. 500 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த வானூர்திக்கு நியுரோன் nEUROn எனப் பெயரிடப்பட்டுள்ளது.




தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பம்
Stealth என்பதன் தமிழ் அர்த்தம் தவிர்த்து அல்லது அகப்படாமல் முன்னேறுதல். போர் முனையில் எதிரி வானூர்திகளை தூரப்புலமானி (Radar) மூலம் கண்டறிவர். தூரப்புலமானியால் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு Stealth தொழில் நுட்பம் உதவிகிறது. இதன்படி வானூர்தி தட்டையாக வடிவமைக்கப்படும். அத்துடன் தூரப்புலமானியில் இருந்து வரும் வானொலி அலைகளை உறிஞ்சும் இரசாயனப் பதார்த்தம் வானூர்தியில் பூசப்பட்டிருக்கும். ஈழ வான்படையின் வானூர்திகள் கூட தூரப்புலமானியில் அகப்படாமல் இருந்தது. அது எப்படியோ தெரியாது. 


ஆளில்லாப் போர் வானூர்திகள்
உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் வானூர்திகளின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் வானூர்திகள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் வானூர்திகள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. 

நியுரோன் வானூர்திகள்
நியுரோன் வானூர்திகள் ஆளில்லாத தொழில்நுட்பத்தையும் (Drone Technology) தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth Technology) தொழில் நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்படுகின்றன. இது இரண்டு Adour mk951 இயந்திரங்கள் மூலம் இயக்கப்படுகிறது. lesar உதவியுடன் செல்லக்கூடிய 250kg எடையுடைய இரு குண்டுகளையும் காவிச் செல்லக்கூடியது. இதன் உயர் வேகம் Mach 0.8 ஆகவும் எடை 4,500 கிலோ ஆகவும் காணப்படுகிறது.


Saturday, November 24, 2012

X-48C வானூர்தி


எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய முக்கோண வடிவ பயணிகள் (Hybrid wing-body plane) வானூர்தியை நாசா அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்காலத்தில் வானூர்தி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் ஐக்கிய இராட்சியத்தின் Cranfield Aerospace Limited நிறுவனத்தின் உதவியுடன் போயிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதலில் X-48C ரக முக்கோண வடிவ வானூர்தியை மட்டும் தயாரித்துள்ளது. இது கலிபோர்னியாவின் எட்வார்ட் வான்படை தளத்திலிருந்து (Edwards Air Force Base in California) தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.

வானோடி இல்லாமல் இயங்கும் இந்த வானூர்தி X-48B Blended Wing Body வானூர்தியின் மாதிரியைக் கொண்டு வேகம், கட்டுப்பாட்டு அமைப்புகள், மூக்குப்பகுதி, வானூர்தியின் சத்தம் போன்ற மாற்றங்களுடன் தயாரிக்கப்பட்டது. அத்துடன் உடல் அகலம் 20 அடியாக நீட்டப்பட்டது. 


பின்னர் விரிவுபடுத்தப்பட்டு பல வானூர்திகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முக்கோண வானூர்தியின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த வானூர்திகளே அடுத்த 20 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எனவே இந்த விமானம் அடுத்த 15-20 ஆண்டுகளில் மிகச்சிறந்த பயணிகள் விமானங்களாக மாறுவதுடன், ராணுவ பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்று நாசா கூறியுள்ளது.


உளவு வானூர்தியைப் போன்று உள்ள இந்த வானூர்தியில் ஜன்னலோர இருக்கைகளே இருக்காது. மாறாக அதிக இருக்கைகள் மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும். அத்துடன் அதிக சரக்குகளையும் இதில் ஏற்றிச் செல்லவும் முடியும். முக்கோண வடிவில் இருப்பதால், இது காற்றை எளிதில் கிழித்துக்கொண்டு வேகமாக செல்ல முடியும். 500 இறாத்தல் நிறையையும், மணிக்கு 140 மைல் வேகத்திலும் பறக்கும் இவ் வானூர்தி 10,000 அடி உயரத்திற்கு மேல் பயணிக்கக்கூடியது. 


Friday, November 23, 2012

HTV-2 மிகையொலி வானூர்தி.


அமெரிக்க ராணுவத்தின் Falcon (Force Application and Launch from Continental United States) HTV-2 ( Hypersonic Technology Vehicle 2) மிகையொலி (Hypersonic) வானூர்தி சாதாரண வர்த்தக வானூர்தியைக் விட 22 மடங்கு அதிவேகமாக சீறி செல்லக்கூடியதாகும். கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் உந்துகணை (Rocket) பின்புறத்தில் இணைக்கப்பட்ட இந்த வானூர்தி சீறிப் பாய்ந்து சென்றது. இந்த அதிவேக வானூர்தி புறப்பட்ட 9 நிமிடத்தில் தொடர்பை நிறுத்திக் கொண்டது. இந்த வானூர்தி பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 


இந்த வானூர்தி 2000 சென்டிகிரேடு வெப்பநிலையை தாங்கக் கூடியதாகும். அதிவேக வானூர்தி ஏற்கனவே ஏவும் திட்டம் கைவிடப்பட்டு வடிவமைப்பு மாற்றப்பட்டது. வானூர்தியில் குறைபாடு இருந்ததைத் தொடர்ந்து அப்போது வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இந்த மிகையொலி வானூர்தி 139 வினாடிகளில் மணிக்கு 16700 மைல் வேகத்தில் சென்று உள்ளது. அதிவேக வானூர்தி கட்டுப்பாட்டை இழந்ததை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கடலில் விழ உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த HTV-2 வானூர்தியானது ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு பயணிக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டது. அதாவது Mach 22. வேகத்தைக் கொண்டது.இது நியூயோக்கிலிருந்து லொஸ் ஏஞ்சல்சிற்கு 12 நிமிடங்களில் பயணிக்கக்கூடியதெனக் கூறப்படுகின்றது. அத்துடன் அமெரிக்கப் படையால் உலகின் எந்தவொரு இடத்திற்கும் 1 மணித்தியாலத்திற்குள் சென்று இலக்கைத் தாக்கக்கூடியவாறு இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

கடலில் விழ உத்தரவிடப்படுவதற்கு அதாவது அதன் தொடர்புகள் இல்லாமல் போக முன்னர் 9 நிமிடங்களிற்கும் மேலாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டுவந்ததாக அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வுநிறுவனம் கூறியது. லொஸ் ஏஞ்சல்சின் வடமேற்காக 130 மைல்கள் தூரத்திலுள்ள வன்டன்பேக் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இவ்வானூர்தி திட்டமிட்ட பறப்புப் பாதையான பசுபிக் வழியாகச் செல்லும்போதே வீழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இது இத்திட்டத்தின் இரண்டாவது பரிசோதனையாகும். ஏப்ரல் 2010 இல் ஏவப்பட்ட முதல் வானூர்தியும் தொடர்பையிழந்து வீழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் Minotaur 4 உந்துகணையுடன் பறக்க தயார் நிலையில் 

ஈட்டிமுனை போன்ற வடிவமுள்ள இந்த HTV-2 வானூர்தியானது, இதனை ஏவும் Minotaur 4 உந்துகணையிலிருந்து தனியாகப் பிரிந்து விண்வெளி எல்லைக்குச் சென்று பின்னர் பூமியின் பரப்பிற்குள் மணிக்கு 13,000 மைல் வேகத்தில் திரும்பி வரும். இந்த வேகத்தில்தான் இது சமுத்திரத்திற்குள் விழும்போதும் பயணித்திருந்தது. HTV-2 இன் நிர்வாகி கூறுகையில், ‘எங்களுக்கு வானூர்தியை விண்வெளிக்கருகே கொண்டுசெல்லத் தெரிகின்றது. அதனை மணிக்கு 13,000 மைல் வேகத்துடன் புவிச்சுற்றுவட்டத்திற்குள் எப்படி நுழைப்பதென்றும் தெரிகின்றது. ஆனால் அதனை இந்தளவு வேகத்துடன் எப்படி விரும்பிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதென்றுதான் தெரியவில்லை. இது கவலைக்குரியதே என்று குறிப்பிட அவர் எதற்கும் ஒரு தீர்வு இருக்குமென்பதில் நாம் உறுதியாயிருக்கிறோம் என்றும் நாங்கள் அதைத்தான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார்.


FLIGHT OF THE FALCON

பெயர் : பல்கன் HTV-2

உயர்வேகம் : 13,000mph or Mach 22. A MiG-25 
can typically reach Mach 2.3, or 1,520mph

நீளம் : 12ft long

நிறை : 900kg

உருவாக்கப்பட்ட உலோகம் : Made of experimental material that can
 withstand up to 3,500f (2000C) it will experience upon re-entry.

செலவு : $308million (£189million), so far payload
Potentially anything up to 12,000lbs, including a nuclear bomb.

ஆளுமை: Anywhere in the world in less than 60 minutes

பாதுகாப்பமைச்சுடன் தொடர்புடைய லெக்சிங்ரன் நிறுவனத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி, ‘இராணுவத்திற்கு இவ்வாறான மிகையொலி (Hypersonic) வானூர்திகளைப் பயன்பாட்டில் கொடுப்பதற்கு இன்னும் நீண்ட நாட்கள் எடுக்கும்,’ என்றார்.

ஆயிரத்து 386 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இவ் மிகையொலி வானூர்தியின் இரண்டாவது முயற்சியும் பிழைத்ததை அடுத்து இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்து மீளாய்வு செய்யப்படலாம் என நம்பப்படுகிறது.


Friday, November 16, 2012

X-51A Waverider வானூர்தி


அமெரி்க்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 89 மில்லியன் ஸ்டேலிங் பவுண்ட்ஸ் செலவில் எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர் ( X-51A Waverider ) என்ற ஜெட் வானூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி மணிக்கு 6 Mach அதாவது 4500 மைல்/மணி (1 Mach ஆனது 761.2 மைல்கள் ஆகும்) வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு திட்டத்தை WaveRider Programme என அழைக்கின்றனர்.


இந்த வானூர்தி தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை (Edwards Air Force Base) தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை ஆரம்பித்து. B -52 போர் வானூர்தியின் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர், 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஒரு ராக்கெட் உதவியுடன் உந்தி செலுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த வானூர்தி 70 ஆயிரம் உயரத்தில் பறக்கும் திறன் பெற்றது.


இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்க ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரி்ல் இருந்து பிரிட்டனின் லண்டன் நகருக்கு ஒரு மணி நேரத்தில் ‌சென்றுவிடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான பரிட்சார்த்த சோதனை அண்மையில் நடைபெற்றது.


அமெரிக்க படையினரின் பயன்பாட்டுக்காக சோதிக்கப்பட்ட அந்த வேவ்ரைடர் வானூர்தியால் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தை எட்ட முடியவில்லை. B -52 போர் வானூர்தியின் இறக்கையில் இணைக்கப்பட்டு 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பசிபிக் சமுத்திரத்தில் Point Mugu promontory க்கு அருகில் வைத்து உந்திச் செலுத்தப்பட்டது. வேவ்ரைடர் பின்னர் மணிக்கு 4500 மைல் வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அந்த வேகத்தை அடையாமல் கட்டுப்பாட்டை இழந்து புறப்பட்ட 31 விநாடிகளில் அது பசிபிக் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.

அடுத்த தலைமுறை ஏவுகணைகளை தயாரிக்க இந்த அளவுக்கு மிகையொலி (Hypersonic) வேகம் தேவை என்று அமெரிக்க படைத்துறை தெரிவித்துள்ளது. இந்த அதியுயர் தொழில்நுட்பத்துக்காக அமெரிக்கா இரண்டு பில்லியன் செலவழித்ததாக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதை இது எடுத்துரைக்கிறது.


Saturday, November 10, 2012

Liko வானூர்தி..


ஈரானிய ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆளில்லா வானூர்தியானது 100கிலோ நிறையுள்ள ஏவுகணைகளைக் காவிக்கொண்டு 100கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்ட இவ்வானூர்தியானது துரப்புலமானிக்கு (Radar) அகப்படாமல் தப்பிக்கும் திறனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


Liko என்ற பெயர் கொண்ட இவ் ஆளில்லா வானூர்தியின் சிறப்பம்சம் ஓடுபாதை தேவையில்லை. உந்துகணை (Rocket) போன்று விண்ணில் பறந்து செல்லக்கூடியது. அத்துடன் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கொடுக்கப்படும் உத்தரவுகளுக்கு அமைய தரை வான் மற்றும் தரைக்கடியில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கக்கூடியது.


தற்போது ஆளில்லா வானூர்திகளை அமெரிக்கா தயாரித்து வருகிறது. அதன் மூலம் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு போட்டியாக ஈரானும் ஆளில்லா வானூர்திகளை தயாரிக்கும் பணியில் சத்தமில்லாமல் ஈடுபட்டு வருகிறது.ஆனால் அமெரிக்க ஆளில்லா வானூர்திகள் ஓடுதளத்தில் சிறிது தூரம் ஓடித்தான் விண்ணில் பறக்கிறது.

அப்பாஸ்ஜாம் என்ற ஆராய்ச்சியாளர் இதை வடிவமைத்து வருகிறார். இதுபோன்ற வானூர்தி உலகில் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வானூர்தி அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது.


Thursday, November 8, 2012

A2 வானூர்தி...


“Son of Concorde” என அழைக்கப்படும் A2  Hypersonic வானூர்தியானது பழைய Concorde வானூர்தியை விட இரு மடங்கு வேகத்துடனும் மற்றும் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்துடனும்  பறக்கக்கூடியது.

வர்த்தக வானூர்திப் போக்குவரத்தில் A2  Hypersonic வானூர்தியானது (6000km/h / 3728mph) வேகத்தில் பயணம் செய்வது குறித்து தற்போது ஐரோப்பிய வானூர்தி உற்பத்தியாளர்களிடையே மிகத்தீவிரமான ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

 இந்த 
வானூர்தியானது  300 பயணிகள் மற்றும் மொத்தமாக 400 தொன்களையும் சுமக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது.

இது Lapcat ( Long Term Advanced Propulsion Concepts and Tchnologies)செயற்றிட்டம் எனப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்தை ESTEC (European Space Research and Technology Centre)மற்றும் ESA ( The Engireening Branch of the European Space Agency) ஆகியன இணைந்து ஒழுங்கமைக்கின்றன.

திரவ ஐதரசன் இயந்திரங்களானது (Liquid Hydrogen Engines) பாரம்பரியமான ஜெட் (Traditional Kerosene Turbo-Jets) முறையிலிருந்து முழுவதும் வித்தியாசமானது. இச்செய்முறையானது Lapcat செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ளது.


திரவ ஐதரசன் எரிபொருளானது மிக உயர்ந்தளவான சக்தி வினைத்திறனாகும், பாரம் குறைந்தது,  காபன் வெளியேற்றங்கள் (Carbon Emissions) இல்லை, சூழலுக்கு குறைந்தளவான சேதம், ஆகியவற்றுடன் இயந்திரத்தினை குளிர்மைப்படுத்தும் ஒரு மிதமான தட்பநிலையை உண்டு பண்ணும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏவுகணை நிலையமைத்தல், மற்றும் விண்வெளி இயந்திர உற்பத்தி தொழிற்துறைகள் ஆகிய மிகமுன்னேற்றமடைந்த உயர் செயற்பாட்டு தொழில்நுட்பங்களுக்கு இந்த உயர்வான எரிபொருளை பயன்படுத்தும்முகமாக நீண்டகாலத்துக்கு அபிவிருத்தி செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும் இதனுடைய உயர் கொழுந்துவிட்டெரிதல் (High Flammability) மிகமுக்கியமானதொரு பிரச்சினையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Lapcat செயற்றிட்டத்தில் 6 நாடுகளுடன் (பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ்,இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன்) 14 பங்காளிகளும் அடங்குகின்றனர். அத்துடன் பிரித்தானிய 
 Reaction Engines கம்பனியும் இணைந்துள்ளது.
Scimitar என்ற பெயரின் கீழ் ஒரு ஆராய்ச்சி பிரதிகலத்தை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கின்றது. இந்த இயந்திரமானது Turbo-Jet தொழிற்பாடுகளையும் Ramjet தொழிற்பாடுகளையும் கொண்டுள்ளது.

இன்றைய தலைமுறையின் வானூர்திகலையியலில் 
 A2  Hypersonic வானூர்திகள்  முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வானூர்தியானது 140m க்கு அதிகமான நீளமுடையதாகவும், (Airbus A380 ஆனது 73m நீளமானது) ,பாரம் குறைந்த வானூர்திகட்டுமாணம், 7.5m விட்டம், மத்தியில் Delta இறக்கைகள் ,ஒவ்வொன்றும் இரண்டு இயந்திரங்களை சுமந்து செல்லும்படியாகவும் வடிவமைக்கப்படவுள்ளது, மேலும் ஐதரசன் வானூர்தி எரிபொருள் தாங்கிகள்  ஆகியவற்றினையும் உள்ளடக்கவுள்ளன.

இந்த அதிவேக விமானப்பயணம் 2023 ஆம் ஆண்டளவில் சாத்தியமாகும் என பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். நடைமுறை வணிக வகுப்பு பயணச்சீட்டில் உங்கள் பயணம் சாத்தியமாகும்.
அதிகவேகத்துக்கு உதாரணமாக Brussels To Sydney நகரங்களுக்கிடையில் 4மணி நேரப்பறப்பு சாத்தியமாகுமாம்.

.

Wednesday, October 31, 2012

யாழ் வானூர்தி...


யாழ்ப்பாணம் என்று பெயரிடப்பட்ட போர் வானூர்தி பிரித்தானிய படையில் இருந்தது 


மறைந்துபோன பல வரலாறுகளை நாம் திரும்பிப் பார்க்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். 2ம் உலகப் போர் நடைபெற்றவேளை, மலேசியாவில் வசித்த ஈழத் தமிழர்கள் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக செயற்பட விரும்பியுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் பணத்தை சேகரித்து, ஒரு போர் வானூர்தியை  வாங்கி அதனை பிரித்தானிய படைக்கு கொடுத்துள்ளார்கள். ஆனால் அந்த வானூர்திக்கு  யாழ்ப்பாணம் என்று பெயர்வைக்கவேண்டும் என்றும் அவர்கள் அன்றைய தினம் கோரிக்கை விடுத்துள்ளனர். 1915ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி, இந்த வானூர்தியை  பிரித்தானிய படையிடம் கையளித்துள்ளனர் ஈழத் தமிழர்கள். சுமார் 97 ஆண்டுகளுக்கு முன்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கான ஆவணங்களும், புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியர்களுக்கு தெரியாதா, மற்றும் அவர்கள் மறந்துபோன விடையங்கள் கூட தற்போது வெளியாகி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. சுமார் 97 வருடங்களுக்கு முன்னர், ஜேர்மன் நாட்டுடன் பிரித்தானியா போரில் ஈடுபட்டவேளை, ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு உதவியுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. இதேபோலவே இந்தியாவின் மாபெரும் புரட்சியாளரான சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள், இந்தியாவை விட்டு வெளியேறி மலேசியாவில், ஒரு இராணுவத்தைத் திரட்டினார். இதற்கு இந்திய தேசிய விடுதலை இராணுவம் என்று பெயர் சூட்டினார். இதில் வெளிநாட்டில் வசித்துவந்த பலர் இணைந்துகொண்டனர். ஆனால் இதிலும் மறைந்திருக்கும் உண்மை ஒன்று உள்ளது. இப் படையில் இந்தியர்கள் மட்டும் இணையவில்லை. இதில் ஈழத் தமிழர்கள் பலரும் இணைந்து போரிட்டுள்ளனர்.

அதாவது இந்திய விடுதலைக்காக ஈழத் தமிழர்களும் போராடியுள்ளனர் என்பதுதான் உண்மை. இச் செய்திகள் மலேசியாவில் இருந்து தற்போது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Tuesday, August 28, 2012

Lisa Akoya



தரை, கடல் மற்றும் பனிப் பிரதேசத்தில் பறக்கும் வானூர்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். அமெரிக்காவின் லிசா அகோயா (Lisa Akoya) என்ற நிறுவனம் அதி நவீன வானூர்தியை வடிவமைத்துள்ளது.








தரையில் பறக்கும்போது அதன் இரு இறக்கைகளும் விரியும். தண்ணீரில் பறக்கும்போது அது படகு போன்று மாறும். அதே நேரத்தில் பனிப் பிரதேசத்தில் செல்லும்போது அதன் இரு இறக்கைகளும் பனிக்கட்டிகளை உடைத்து சீரமைத்து அதில், பயணிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த வானூர்தியில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் 2011 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். மணிக்கு 135 மைல் முதல் 155 மைல் வேகத்தில் பறக்கும். இந்த அதி நவீன வானூர்தியின் விலை €300,000 என நிர் ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் அதாவது 2014ஆம் ஆண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.




அதற்கு முன்னதாக இந்த வானூர்திகள் 70 தடவை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனை கண் காட்சி அமெரிக்காவின் வின்கான்சின் (Wisconsin, USA) மாகா ணத்தில் உள்ள (EAA AirVenture Oshkosh) ஒஸ்காஷ் ஏர்வென்ஞ்சர் நிறு வனத்தில் கடந்த மாதம் நடந்தது.




Monday, June 25, 2012

நுண் வேவு வானூர்திகள்..


உலகின் பல நாடுகள் தங்கள் படைத்துறைக்கும் உளவுத் துறைக்கும் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா தனது படைத் துறைக்கு ஆளில்லாப் போர் வானூர்திகளை அதிகமாக இணைத்து வருகிறது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ யும் சொந்தமாக ஆளில்லா வானூர்தித் தளங்களை உலகின் பல பாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா வானூர்திகள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் வானூர்திகள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா வானூர்திகளை களமிறக்கியுள்ளது.





ஆளில்லாப் போர் வானூர்திகள் அளவில் பெரியதாக உருவாகி வருகையில் வேவு பார்க்கும் ஆளில்லா வானூர்திகள் அளவில் மிகச் சிறியதாகி வருகின்றன. ஆளில்லா வானூர்திகளை ஆங்கிலத்தில் Drones என அழைப்பர். இதில் சிறிய வகைகளை Miniature Drones அல்லது micro air vehicles (MAVs). இந்த micro air vehicles சிறு பூச்சிகளின் உடலமைப்பு, அவற்றின் உணரிகள், பறப்பதற்கு அவை பாவிக்கும் நுட்பங்கள் போன்றவற்றைப் கவனம் செய்து உருவாக்கப்பட்டுள்ளன. சில வேவு வானூர்திகள் குருவிகள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூச்சிகளின் உடலில் உள்ள தொழில் நுட்பங்களை reverse-engineering முறை மூலம் கண்டறிந்து அந்த நுட்பங்களை சிறிய வேவு வானூர்திகளில் பாவித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள். சிறு பூச்சிகளின் கண்கள், வௌவாலின் காதுகள், தேனிக்களின் உணரி ரோமங்கள் போன்றவற்றில் உள்ள தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை வேவு பார்க்கும் micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். பிரெஞ்சு விஞ்ஞானிகள் பறவைகளின் சிறகடிக்கும் தொழில் நுட்பத்தை தமது micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். வேவு வானூர்திளில் வடிவமைப்பில் பூச்சிகளினதும் குருவிகளினதும் செயற்படு நுட்பங்களைப் புகுத்துவதை Nano-biomimicry MAV design என்கின்றனர். கடந்த 350 மில்லிய ஆண்டுகளாக பூச்சியினங்கள் தங்கள் பறக்கும் திறனை எப்படி கூர்ப்படையச் செய்தன என்பதை ஆராய்ந்த பிரித்தானிய விலங்கியலாளர் ரிச்சர்ட் பொம்பிரி (Zoologist Richard Bomphrey) பூச்சியினங்கள் சிறுவிமானங்களை வடிவமைப்பது எப்படி என எமக்குக் கற்றுத் தந்துள்ளன என்கிறார்.



இது கொசு அல்ல கொலைகாரி

'With insects you get a combination of both these assets in miniature. And when you consider we have been flying for just over a hundred years as opposed to 350 million years, I would say it is they who have got it right, and not us!'

















Saturday, June 23, 2012

"பெலூகா" அகல உடல் வானூர்தி..



ஏர்பஸ் A300-600ST (Super Transporter) அல்லது பெலூகா அகல உடல் வானூர்தி வகையைச்சார்ந்தது. அது ஏர்பஸ் நிறுவனத்தின் ஒரு A300-600 வடிவமைப்பு மாற்றப்பட்ட அகல உடல் வானூர்தி ஆகும். வானூர்தி பொருட்களை எடுத்து செல்வதற்கும் பல்வேறு வடிவங்களை கொண்ட பொருடைகளை கொண்டு செல்வதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது . பெலுகா திமிங்கலத்தை போன்ற உருவத்தை கொண்டதால் பெலூகா என்று வழங்கப்பட்டு அவவாறே பெயரும் இடப்பட்டது.

Airbus A-300 வானூர்தியின் அடிப்படையில் தான் பெலூகா வானூர்தி உருவாக்கப்பட்டது. இது  47 தொன் வரை சுமக்கக்கூடியது. 






Tuesday, June 19, 2012

2025 இல் வானூர்தி..

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு, இன்னும் 15 ஆண்டுகளில் வானூர்திகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் மூன்று நிறுவனங்களை வடிவமைப்பு செய்து தருமாறு கேட்டுக் கொண்டது. லோக்கீட் மார்ட்டின் (Lockheed Martin) ,நோர்த்ரோப் குர்ம்மான் (Northrop Grumman), போயிங் (The Boeing) ஆகிய அந்த மூன்று வானூர்தி தயாரிப்பு நிறுவனங்களும் வானூர்தி மாதிரி வடிவமைப்புகளைச் செய்துள்ளன.

ஒவ்வொரு வடிவமைப்பும் மிகவும் வித்தியாசமாகத் தான் தெரிகிறது அனாலும் தூய்மையான புகை வெளியேற்றம் (cleaner exhaust), குறைந்த சத்தம் (less noise) குறைந்தளவு எரிபொருள் பவனை (lower fuel consumption) ஆகியவற்றை கருத்தில் கொண்டே நாசா தனது இறுதி முடிவுகளை எடுக்கும் அத்துடன் நவீன மயப்படுத்தப்பட்டுள்ள வான் போக்குவரவு முகாமை அமைப்புடன் (Air Traffic Management System) பாதுகாப்புடன் செயல்ப்பட வேண்டும்.

இந்த வடிவமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒலியின் வேகத்தின் 85 வீதத்தை பூர்த்தி செய்யும் படியும், 50,000 முதல் 100,000 இறாத்தல்கள் வரை பயணிகள் அல்லது பொருட்களை சுமக்க கூடியதாயும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

..படங்களின் மேல் அழுத்துங்கள் படம் பெரிதாய் தெரியும்..
..லோக்கீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு..

..நோர்த்ரோப் குர்ம்மான் (Northrop Grumman) நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு..

..போயிங் (The Boeing) நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு..