பழமொழி.....

Wednesday, October 2, 2013

Clip Air...

தொடரூந்தை தூக்கிச் செல்லும் வானூர்தி....


E.P.F.L என்ற சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் CLIP AIR, இதன்படி தொடரூந்து பாதையில் சென்று கொண்டிருக்கும் தொடரூந்து பெட்டிகளை பறந்து செல்லும் வானூர்தி, தூக்கிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும்.


ஒரு நேரத்தில் 3 பெட்டிகளை இந்த வானூர்தியால் கொண்டு செல்ல முடியும். பயணிகள், பொருட்கள், மசகு எண்ணெய் போன்றவற்றை இந்த வானூர்திகள் எடுத்துச் செல்லும். இந்த வானூர்தி மாதிரியின் மூலம் தொடரூந்து, தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முறை சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற வானூர்திகளுக்காக இப்போது வானூர்தி நிலையம் (Airport) இருப்பதைப் போன்று வருங்காலத்தில் விண் நிலையங்கள் (Sky Stations) என்பவை அமைக்கப்படும்.


அங்கு தொடரூந்துகளில் ஏறினால் செல்ல வேண்டிய இடத்துக்கு வானூர்திகளே வந்து ரயில்பெட்டிகளைத் தூக்கிச் சென்று இறக்கிவிடும். ரயில் பெட்டிகள் தூக்கப்படும்போதும், இறக்கிவிடப்படும்போதும் மட்டும் பயணிகள் தங்களது இருக்கைகளில் அமர வேண்டும். மற்ற நேரங்களில் ரயில் பெட்டிகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். தற்போதுள்ள ரயில்பெட்டிகளைப் போல் இல்லாமல், சக்கரங்கள் இல்லாத பெட்டிகளாக இவை இருக்கும். CLIP AIR போன்றே, பிரிட்டனின் கிளஸ்கோ (Glasgow) பல்கலைக்கழக மாணவர்களும் இதுபோன்ற தொடரூந்துதை தூக்கிச் செல்லும் வானூர்தி மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

இது CLIP AIR ஐ விட கூடுதல் பெட்டிகளைத் தூக்கிச் செல்லும் வசதியுடன் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பறக்கும் தொடரூந்துகள் நடைமுறைக்கு வந்தால், வானூர்தி நிலையத்துக்கு காரில் செல்வது, வானூர்தி நிலையத்தில் காத்திருப்பது போன்ற பயண நேரங்கள் மிச்சமாவதுடன், செல்ல வேண்டிய இடத்துக்கும் நேரடியாகச் சென்று சேர முடியும்.


No comments: