பழமொழி.....

Monday, May 19, 2014

E -Fan வானூர்தி...


உலகில் முதல் முறையாக மின்கலம் (Electric battery) மூலம் இயங்கும் வானூர்தி வெற்றிகரமாக வானத்தில் பறக்கவைத்து, சோதனை செய்து பார்க்கப்பட்டதாக அதனை உருவாக்கியுள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "ஏர்பஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் உள்ள பிரச்சினைகளில் ஒன்றாக மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் சூரிய ஒளி, காற்று, கடல் அலை போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் மின்சாரத்தால் பறக்க கூடிய ஒரு குட்டி வானூர்தியை தயாரித்துள்ளது. அதற்கு E-Fan என பெயரிடப்பட்டுள்ளது.




பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கிலுள்ள போர்டாக்ஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள வானூர்தி நிலையத்தில் E-Fan என்று அழைக்கப்படக்கூடிய இந்த சிறிய ரக வானூர்தி கடந்த மாத இறுதியில் 10 நிமிடங்கள் பறக்கவைக்கப்பட்டு, சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த வானூர்தியானது சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய, சப்தமில்லாத மற்றும் விலைகுறைவான வானூர்தி பயணத்தை தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 19 அடியாகும். மின்சாரத்தை சேமிக்கும் விதமாக இதில் லித்தியம் தாது மற்றும் இரும்பு அடங்கிய சுமார் 120 மின்கலங்கள் பொருத்தப்பட்டிருந்தன.






ஒருமுறை இந்த மின்கலங்களை முழுவதுமாக மின்னேற்றினால் செய்தால், 1 மணி நேரம் வானூர்தி பறக்கக்கூடிய ஆற்றலைப் பெறும்.இவ் வானூர்தி மொத்தமே 19 அடி நீளமே உள்ளது. அதில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதிநவீன தொழில்நுட்பத்தினால் ஆன இந்த வானூர்தியின் சோதனை ஓட்டம் தென் மேற்கு பிரான்சில் உள்ள போர்டியாஸ் விமான நிலையம் அருகே நடந்தது.

அப்போது இந்த வானூர்தி சுமார் ஒரு மணி நேரம் பறந்து சாதனை படைத்தது. கடந்த மாதம் நடந்த சோதனை ஓட்டத்தில் 10 நிமிட நேரம் மட்டுமே பறந்தது. தற்போது நடந்த சோதனை ஓட்டம் மூலம்

பெரிய அளவில் ஆன வானூர்தியைத் தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.



E-Fan வரிசையில் E-Fan 2.0 மற்றும் E-Fan 4.0 என்ற 2 வகையான வானூர்திகளை Airbus நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

No comments: