பழமொழி.....

Monday, March 5, 2012

GEN H-4


GEN H-4 ஆனது உலகின் மிகச்சிறிய ஓரச்சு உலாங்கு வானூர்தி (co-axial helicopter) ஆகும். எது ஆளில்லாமல் 155 இறாத்தல் (70kg) எடையுள்ளதாகவும், மற்றும் 55 mph (88 km / h) அதிகபட்ச வேகத்தை அடையும் திறனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. GEN H-4 ஆனது எதிரெதிர் திசையில் திருப்பும் சுழலிகள் (Rotors) இரண்டின் உதவியுடனும் நான்கு இரட்டை சிலிண்டர் இயந்திரங்களின் உதவியுடனும் இயக்கப்படுகிறது. இதன் ஒரு இயந்திரம் பழுதானாலும் மிகுதி மூன்று இயந்திரங்களினாலும் சிறப்பானதாக செயல்ப்பட முடியும். இந்த தனி மனித ஓரச்சு உலாங்கு வானூர்தியை ஜப்பானில் உள்ள Engineering System Co.எனும் நிறுவனத்தின் தலைவர் திரு Gennai Yanagisawa என்பவர் வடிவமைத்தார் . இது தற்போது $ 30,000 விலைக்கு விற்கப்படுகிறது.

GEN H-4 முதன் முதலில் 1998 இல் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது. இதன் இயக்கவியல் மிகவும் எளிதானது. வானோடியின் கழுத்துப்பகுதியில் உள்ள throttle lever மூலம் உலாங்கு வானூர்தியின் உயர்வு மற்றும் வேகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். அத்துடன் Moving the control bar மூலம் பயண திசை, வலது அல்லது இடது பக்கம் திரும்புதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
GEN H-4 ஆனது இரண்டு அங்குல அலுமினிய குழாய்கள் மூலம் உருவாக்கப்பட்டது. 10hp, 125cc வலுவுள்ள நான்கு GEN125 இயந்திரங்கள் இந்த உலாங்கு வானூர்தியை இயக்குகின்றன. இரண்டு சுழலிகளும் எதிர் எதிர் திசையில் பயணிப்பதன் மூலம் இதன் torque கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் வால்ப்பக்க சுழலி தேவை இல்லை. Yaw திருப்பம் ஒரு சிறிய மின் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் எரிபொருள் automobile gasoline மற்றும் two stroke oil ஆகியவற்றின் 30:1 கலவையாகும்.

இதில் பாதுகாப்புக்காக ballistic parachute (வான்குடை) வழங்கப்படுகிறது மற்றும் கூடுதலாக இரண்டு இயந்திரங்கள் மூலம் ஒரு பாதுகாப்பான அவசர தரையிறக்கம் செய்ய முடியும். எதிர்கால வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டு இதில் automatic altitude controller (தனிச்சை உயரக் கட்டுப்பாட்டாளர்) அமைக்கவும் மற்றும் இருக்கையின் கீழ் air bags (காற்று பைகள்) பொருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாகன நெரிசல் அதிகரித்த நிலையில் இந்த தனி மனித ஓரச்சு உலாங்கு வானூர்தியானது மனிதனுக்கு ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

                                      இந்த காணோளியைப் பாருங்கள்.......

No comments: