பழமொழி.....

Saturday, January 12, 2013

Eco-Climb



வானூர்திகள் தமது பறப்பை மேல் எழும்புதல், வானில் பறத்தல், தரை இறங்குதல் போன்ற மூன்று கட்டங்களில் நிறைவு செய்கின்றன. இவற்றில் மேல் எழும்புதல் என்பது மிகவும் சிக்கலானதும், செலவு கூடியதாகவும் உள்ளது. இதனை தவிர்பதற்காக எனன செய்யலாம் என மண்டையை போட்டு குழப்பின Air Bus நிறுவன பொறியியளாளர்களுக்கு தோன்றிய திட்டம் தான் இந்த Eco-Climb தொழில்நுட்பம் ஆகும்.


மின்காந்த (electro-magnetic motors) விசையால் இயங்கும் சிறிய ரக இயந்திரங்களின் மூலம் இயங்கும் Eco-Climb ஆனது வானூர்தியைச் சுமந்து கொண்டு ஓடுபாதையில் வேகமாக பயணிப்பதன் மூலம் வானூர்திக்கு விசையை வழங்கி மேல் எழும்பச் செய்கிறது. இதன் செயற்பாட்டையும் வேகத்தையும் ஓடுபாதையின் நீளம் (runway length), காற்றின் வேகம் (wind speed), சூழல் வெப்பநிலை (temperature), வானூர்தியின் எடை (the weight of the aircraft) போன்ற காரணிகள் கட்டுப்படுத்துகின்றன.


Eco-Climb தொழில்நுட்பத்தின் நன்மைகள்.......
  1. வானூர்தி மேல் எழும்புவதற்கு 1/3 பங்கு ஓடுபாதை போதுமானது. அதனால் வானூர்தி நிலையங்களை நகரங்களிற்கு மத்தியிலும் அமைக்கலாம்.
  2. வானூர்தி சிறிதளவு தூரம் ஓடியவுடன் உடனடியாக மேல் எழும்புகிறது.
  3. இது மின்காந்த விசையால் செயற்படுவதாலும் மேல் எழும்புவதற்கு வானூர்தி இயந்திரம் பயன்படுத்தாமையலும் எரிபொருள் செலவு குறிக்கப்படுகிறது.
  4. இதன் பயன்பாட்டால் இயந்திரங்களின் சத்தம் இல்லை.
  5. அத்துடன் சூழல் மாசடைதல், Co2 வெளியேறம் குறைவு.
  6. மேல் எழும்புவதற்கு இயந்திரம் பயன்படுத்தாமையால் வானூர்தியின் எடை குறைகிறது.

இந்த தொழில்நுட்பத்தில் பல சிக்கல்கள் இருந்தாலும், அவற்றை அகற்றி இதை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு Air Bus நிறுவனம் தீர்மானித்துள்ளது.

2050 ஆண்டளவில் இதை எதிர்பார்க்கலாம்.


No comments: