பழமொழி.....

Saturday, March 9, 2013

நெகிழிக் கழிவு வானூர்தி.


பொதுவாக வானூர்திகள் gasoline மற்றும் kerosene போன்ற உயர் ரக பெட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் உயிரியல் (aviation biofuel) எரிபொருட்கள், சமையல் எண்ணை மற்றும் கழிவு எண்ணை மூலமும் இயக்கப்படுகின்றன. ஆனால் முதன் முதலாக நெகிழிக் (plastic) கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் டீசல் மூலம் வானூர்தியை இயக்க ஒரு வானோடி திட்டமிட்டுள்ளார். அவர் 41 வயதான (Jeremy Rowsell) ஜெரிமி ரவுசல் என்பவர். 


இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். எதற்கும் பயன்படாத மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழிக் கழிவில் இருந்து டீசல் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக 5 தொன் நெகிழிக் கழிவுப் பொருட்களை பல நாடுகளில் இருந்து சேகரித்துள்ளார்.

அதில் இருந்து 1000 கலன் டீசல் தயாரிக்கிறார். அயர்லாந்தில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனம் pyrolysis என்ற இரசாயனத்தைப் பபயன்படுதி நெகிழிக் கழிவுகளிருந்து வானூர்திக்கான டீசலை உற்பத்தி செய்து ஜெரிமி ரவுசலுக்கு வழங்க தீர்மானித்துள்ளது. 


அதன் மூலம் வருகிற ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு Cessna 172 என்ற வானூர்தியை இயக்க உள்ளார். அதன் தூரம் 16,898 கி.மீட்டர் ஆகும்.

No comments: